Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009மே இற்குப் பின் சுகந்திரம் கிடைத்துள்ளது: யாழ் பல்கலைகழக கலாநிதி நவரத்தினம்

Featured Replies

அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார்

அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்குப் பிறகு தங்களுக்கு சுகந்திரம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதியை சந்திக்க வாய்த்த தருணம் மிகவும் இனிமையானது என்றும் குறி;பிட்டார். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி சுகந்திரத்தை வழங்கியவர் எனவும் பாராட்டிப் பேசினார்.

பயங்கரவாத்தை ஒழித்து சமாதானம், நல்லிணக்கம், அமைதி ஏற்பட்டு வடக்கு கிழக்கு மக்கள் அச்சங்களின்றி வாழும் சூழலை ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மாணவர்கள் அச்சமின்றி இடையூறின்றி கல்வியை தொடர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதன்பொழுது வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்ததாகவும் கலாநிதி நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி நவரத்தினத்தின் கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை என்றும் மக்களும் மாணவர்களும் சுகந்திரமில்லாத சூழலில் வாழும் பொழுது தமது சுயநலன்களுக்காக மாணவர்களை சந்திக்க வைத்து அவர்களை ஜனாதிபதியின் முன்பாக விரிவுரையாளர் நவரத்தினம் பாடியுள்ளமை தமது பதவிகளை தக்க வைக்கவும் சுகபோகங்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான நடவடிக்கையே என பல்கலைக்களக தரப்பினர் சிலர் குளொபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். அத்துடன் விரிவுரையாளர் நவரத்தினத்தின் தனிப்பட்ட சந்திப்பு என்றும் பல்கலைக்கழக சந்திப்பு அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்படி நிகழ்வை அமைத்த கலாநிதி நவரத்தினத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த சந்திப்பும் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் எந்த வகையிலும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினது கருத்து அல்ல என்றும், இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் பல்கலைக்கழக தரப்பனர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் இவரது நடத்தைகள் குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இவரது சில்மிசங்கள் தொடர்பில் மாணவர்களது துண்டுப் பிரசுரங்களும் வெளிவந்து இருந்தது. இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த பொழுது இரகசியமாக பலாலி இராணுவத் தளத்திற்குச் சென்று ஜனாதிபதியை புகழ்ந்து பாடல் ஒன்றை பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

globaltamilnews.

Edited by நிழலி

... சொல்லிக் கொடுத்ததை சொல்லி இருக்குது மனுஷன், சொல்லாவிடில் .... மண்ணுக்குள் போய் இருக்கும்?????? ...

.... முள்ளிவாய்க்கால் முடிந்து சில மாதங்களில் யாழ் பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களை, அத்தியடி குத்தி கொழும்புக்கு அழைத்துச் சென்று சிங்கள மகிந்தவை சந்தித்தானாம்!!! ... மகிந்தவும் நல்லாக சிரித்து சிரித்துக் கதைக்க ... நம் விரிவுரையாளர்கள் நினைத்தார்களாம் ... அருமையான தலைவன் இவனல்லவா, நாம் எம் ஆதங்கங்களை இவருக்கு தெரிவித்தால் என்று நினைத்து .... ஒரு விரிவுரையாளர் சிங்கள மகிந்தவை பார்த்து கேட்டாராம் ... "வவுனியா முகாங்களில் இருக்கும் மாணவர்களை, எம் பொறுப்பில் யாழ் அழைத்துச் சென்று கல்வி கற்பிக்க விரும்புகிறோம், அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும்??" ..... அப்போ அந்த சிங்கள மகிந்தவின் முகம் சிவந்து, ... "உங்களை, இவற்றை கதைக்க யார் அனுமதி தந்தது? ..." .... என்று வாயில் வந்தவற்றை பொரிந்து தள்ளி விட்டு எழுந்து சென்று விட்டானாம்!!! ... சூடு சொரணையற்ற குத்தி, இப்படி பலவற்றை வாங்கிப் பழக்கமாம், அதுக்கு உதெல்லாம் குத்துமா??? ஆனால் வந்த மற்றதுகள் அசடு வழிய எழுந்து சென்றார்களாம்!! என்ன துரத்தினார்களாம், அங்கிருந்து!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதோ?

பேராசிரியருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதோ?

பேராசிரியருக்கு கிடைத்த சுதந்திரத்தை தனது பாலியல் சில்மிஷங்களுக்கு பயன்படுத்துகிறார் போல.

எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு வந்தனமு

அன்பு உறவுகளே இந்த்ச்சூழ் நிலையில் தாயகத்தில் இருக்கும் உறவுகள் எதைச்சொன்னாலும் கொஞ்சம்

அவர்களைப்புரிந்து கொள்வோம். அவர்களின் நிலமை...................?. அதற்காக அவர் கூறியது பொறுப்பான ஒருவர் பேசும் விடயமல்ல.

பொறுப்பானவர்கள் ,கல்விமான்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டளை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.