Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாங்கண்ணி

ponnangkanni.jpg

சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள்.

இதில் வைட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், அந்த அளவுக்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும்;என்பதால் வந்த சொல்வடை இது.

அந்த அளவு வல்லமையைக் கொண்ட கீரை இது.

இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.

ஆம். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.

இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.

உடல் உஷ்ணம் குறையும்.

ரத்தம் விருத்தியாகும்.

இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.

இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்.

http://www.eegarai.net/t31385-topic

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் தோழர்! இந்தப் பதிவுகளை அனேகமாக புலத்தில் உள்ளவர்களும் வாசிப்பதால், ஒரு சிறிய எச்சரிக்கையையும் சேர்த்து விடுங்கள்.

இந்தக் கீரை போன்று அவுஸ்திரேலியாவிலும் மற்றும் வெப்ப வலைய நாடுகளிலும் ''aligator weed ' எனப்படும் ஒரு வகை கீரை வளருகின்றது.இதுவும் ஆற்றங்கரைகளிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் வளரும்.இதில் மூளையை அதிகம் பாதிக்கும் 'பாதரசம்' எனப்படும் Mercury அதிகளவில் உள்ளது.இதுவும் ஒரு முறை உண்டாக்கி விட்டால் அழிப்பது கடினமாகும்.இதை இலங்கையர்கள் தவறாக வளர்த்ததால்

அவுஸ்திரேலிய அரசு அதிக பணச்செலவில் இதை அழித்து வருகின்றது.

இந்தக் களைக் கீரையின் பூக்கள் 'உண்மையான பொன்னாங்காணி கீரையை விடவும் சற்றே பெரிதாக இருக்கும்'

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாங்காணி கீரைக்கு கொஞ்சம், பால் விட்டு கறி செய்து, இறக்கிய பின் தேசிக்காய் புளி விட்டு சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.

இணைப்பிற்கு நன்றி புரட்சி.

எனக்கு மிகப் பிடித்த கீரை...அதன் மண் வாசனை போன்ற ஒரு வாசனையை மிகவும் பிடிக்கும்

கனடாவில் விலை அதிகமான ஒரு கீரை..ஒரு சின்ன கீரைக் கட்டே ஐந்து டொலருக்கு மேல்

  • கருத்துக்கள உறவுகள்

மூலிகை மூலை: கண் நோய்க்குப் பொன்னாங்கண்ணி

விஜயராஜன்

எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது. நோயைத் தணித்து உடலைத் தேற்றவும் பசியைத் தூண்டவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.

பொன்னாங்காணி என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.

வேறு பெயர்கள்: ககதிராசு, வாதுவர்ணா, சுகப்பிரயாதித்தோசணா, சீதளச் சக்தி, தாரேகசித்தி, கண்ணுக்கு இனியாள், கடுப்பகலே, நிசோத்திரம், விண்ணுக்குள் மூர்த்தி, பொன்னாங்கண்ணி, கொடுப்பை, சீதை, பொன்னி.

ஆங்கிலத்தில்: Alternathere sessilis (க); R.Br; ex DC; Amrantaceae.

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.

பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

பொன்னாங்காணி சமூலத்தை அதிகாலையில் கைப்பிடியளவு மாதக் கணக்கில் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி, கண் குளிர்ச்சி அடையும்.

பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.

இலையின் சாறு ஒரு லிட்டர், எலுமிச்சை பழச்சாறு 1/2 லிட்டர், பசு நெய் 1 கிலோ, ஆவின்பால் 1 லிட்டர் இவற்றை ஒன்றாகக் கலந்து 50 கிராம் அதிமதுரத்தைப் பால்விட்டு அரைத்துப் போட்டு பதமாக சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி அத்துடன் சாதிக்காய் 5 கிராம் சாதிபத்திரி 5 கிராம், சீனா கற்கண்டு 5 கிராம் கோரோசணை 5 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தி அதில் 5 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டுவர மூலச்சூடு வெப்ப நோய், கைகால் எரிச்சல், வாய் நாற்றம், வெள்ளை, வயிற்றெரிச்சல் நீங்கும்.

பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோய்க்கு வேறு வகை மூலிகை வைத்தியமும் உண்டு சகோதரி ..அது கிணற்றோரம் மட்டுமே வளரும். பலரும் ஆனால் சொல்லுவதில்லை சொன்னால் பலிக்காதாம் .. சிறியவயதில் நாட்டுக்கார வைத்தியரம்மா என்ன செடிய உருவிகிறார் என ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.

வெளிநாடுகளில் இதை செய்ய வீட்டை தான் அடைமானம் வைக்க வேண்டும். :lol:

மூலிகை மூலை: கண் நோய்க்குப் பொன்னாங்கண்ணி

பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.

ஆறு லிட்டர் கலவையை செய்ய முதலில் பெரிய அண்டா வேண்டும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.