Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

விந்திய மலைத்தொடரில்

அந்த அகத்தியமுனிவன்

அடிபதித்த நாள் முதலாய்,

இந்திய தேசம்

எங்கள் தேசத்தைத்

தங்கள் தேசத்துடன்

இணைத்துக் கொண்டது!

சோழ வள நாட்டின்

சோறுடைத்த வயல்களும்,

சேரநாட்டு யானைகளின்

செழிப்பான தந்தங்களும்,

பாண்டிய நாட்டின்

பசுமை மிக்க இலக்கியமும்,

இந்திய தேசத்தின்

சொத்துக்களாகின.

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின்

குரங்காக,

கடாரம் வரை

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

இந்தியாவின் கரங்கள்

இலங்கை வரை நீண்டு .

நந்திக் கடல் வரைக்கும்

எங்களைத் துரத்தின.

எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே

இரத்த வெறி கொண்டு

இராமாயணத்தின்

சுக்கிரீவன்களாகின.

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.

ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

எங்கள் தலை விதியை

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

Punkayooran

ஒவ்வொரு தமிழனின் உள்ளக் குமுறல்களையும் உங்கள் வரியாக்கியதற்குப் பாராட்டுகள்....... தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்....

நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் இந்தியா ஒரு காலமும் ஒதுங்கப்போவதில்லை அதற்காக எங்களுக்கு எந்தவித நன்மையையும் செய்யப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரான், அருமையான படைப்பு. உண்மைகளை கக்கி இருக்கிறீர்கள்.

இந்தியாவில் உள்ள மக்களில் தொண்ணூறு விகிதமானவர்கள் திராவிட எம். இருபது உயிர் அணுவை கொண்டவர்கள்.

ஆனால், கடந்த நானூறு வருடங்களாக எம்மை நேரா எதிர்க்க பயந்த பார்சி கூட்டம், எம்மை சாதி எனும் பிறப்பு தொழிலால் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

மோகன் தாஸ் காந்தி ஒரு பார்சி.

நேரு ஒரு பார்சி.

ஜின்னா ஒரு பார்சி.

டாட்டா ஒரு பார்சி.

இவர்கள் தான் சிங்கள உயர்சாதி கொவிகம, ரடல கூட்டத்தை உசுப்பி "ஸ்ரீ" லங்கா என்று பார்சி தலைப்பை எமது ஈழத்துக்கு வைத்தார்கள்.

ஆனால் பாருங்கள், திராவிடருக்கு எப்போதும் இராவணன் ஈழத்தில் தான் உதிப்பான். அவன் இவர்களது பெண்மையை இழிவுபடுத்து ராம ராஜீவுக்கு ஒரு பெண்ணை வைத்தே "மாலை" போட்டுவிட்டான்!

தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும். அது கிடைக்காது என்று நம்பும் ஸ்ரீ லங்கா தமிழர், இந்திய அடிபொடிகள் ஒதுங்கி நின்றாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

இது தான் உண்மை ஹரி, கருத்துக்கு நன்றிகள்!!!

Punkayooran

ஒவ்வொரு தமிழனின் உள்ளக் குமுறல்களையும் உங்கள் வரியாக்கியதற்குப் பாராட்டுகள்....... தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்....

நன்றி...

மரங்களுக்கு நீர் வார்க்கும் போது,

மலர்களால் அவை நன்றி சொல்கின்றன!!!

நன்றிகள் உங்களுக்கு, இளங்கவி!!!

புங்கையூரான் இந்தியா ஒரு காலமும் ஒதுங்கப்போவதில்லை அதற்காக எங்களுக்கு எந்தவித நன்மையையும் செய்யப்போவதும் இல்லை.

உங்கள் ஆதங்கம் புரிகிறது, சகோதரி!!!

இந்தியா தானாக ஒதுங்காது!!!

இதே மனநிலையில் இந்தியா தொடர்ந்தும் செயல் பட்டால் 'அது துண்டு துண்டாக உடையும் சாத்தியங்களே அதிகம்!!!

அது ஒதுக்கப் படும்! ஒதுக்கப் பட வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், அருமையான படைப்பு. உண்மைகளை கக்கி இருக்கிறீர்கள்.

இந்தியாவில் உள்ள மக்களில் தொண்ணூறு விகிதமானவர்கள் திராவிட எம். இருபது உயிர் அணுவை கொண்டவர்கள்.

ஆனால், கடந்த நானூறு வருடங்களாக எம்மை நேரா எதிர்க்க பயந்த பார்சி கூட்டம், எம்மை சாதி எனும் பிறப்பு தொழிலால் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

மோகன் தாஸ் காந்தி ஒரு பார்சி.

நேரு ஒரு பார்சி.

ஜின்னா ஒரு பார்சி.

டாட்டா ஒரு பார்சி.

இவர்கள் தான் சிங்கள உயர்சாதி கொவிகம, ரடல கூட்டத்தை உசுப்பி "ஸ்ரீ" லங்கா என்று பார்சி தலைப்பை எமது ஈழத்துக்கு வைத்தார்கள்.

ஆனால் பாருங்கள், திராவிடருக்கு எப்போதும் இராவணன் ஈழத்தில் தான் உதிப்பான். அவன் இவர்களது பெண்மையை இழிவுபடுத்து ராம ராஜீவுக்கு ஒரு பெண்ணை வைத்தே "மாலை" போட்டுவிட்டான்!

தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும். அது கிடைக்காது என்று நம்பும் ஸ்ரீ லங்கா தமிழர், இந்திய அடிபொடிகள் ஒதுங்கி நின்றாலே போதும்.

குழவி, உங்கள் அறிவு என்னை வியக்க வைக்கின்றது! ஐரோப்பியக் கண்டங்களில் இருந்து, நாடோடிகளாக வந்த ஆரியர்கள் 'சில்க் ரூட்' ஊடாக இந்தியாவுக்கும், இரானுக்கும் (பாரசீகம்) சென்றார்கள். பாரசீகத்தில் இருந்த 'அசிரிய' இனத்தை அழித்தது போலவே இந்தியாவின் பூர்வீக குடிகளான திராவிடர்களையும் அழித்தார்கள்.

அவர்களது நீண்ட நாடோடிப் பயணத்தில் பெண்களைக் கொண்டுவர முடியவில்லை. இதனால் தயக்கத்துடன் சுதேசியப் பெண்களுடன் கலக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.இதன் விளைவு தான் நீங்கள் கூறிய 'தொண்ணூறு' சத விகித திராவிட உயிரணுக்கள்.

'Where is Vedic India ' என்ற ஒரு நல்ல நூல் உள்ளது.நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரன், புத்தகத்திற்கு நன்றி. நாம் புதிய இராமாயணம் படைக்கும் நாள் வெகு விரைவில் வரும். அந்த புத்தகத்தின் முடிவில் திரு அசுர ராட்சதர்கள் பார்சி ஸ்ரீ தேவர்களை வென்றார்கள் என்று இருக்கும்.

முதலில் நாம் தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாட்டையும், எந்த தமிழரும் பூசகராக வரலாம் என்பதையும் சட்டமாக கொண்டுவரவேண்டும்.

எனக்கு தெரிந்து ஒரு பெண்மணி இப்போது கனடாவில் மனித உரிமை அமைப்பிடம் இந்த சாதீய விடயத்தை எடுத்து சென்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசமே! ஒதுங்கி விடு!!

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி,

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள,

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின்

குரங்காக,

கடாரம் வரை

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

படைப்புக்குப் பாராட்டுகள்.

வைக்கல் பட்டடை நாயை போன்றதே கிந்தியா. அது தானும் உதவாது. உதவ எத்தனிப்போரையும் விடாது. ஆனால் இன்னும் பலர் பகற்கனவு காண்கிறார்கள். கிந்தியா உதவுமென்று; அதுதான் வியப்பிற்குரியது. இன்றும் இராமனைக் கொண்டாடி இராவணனைப் பழித்துரைப்போர் எம்மிடையே உள்ளவரை எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படைப்புக்குப் பாராட்டுகள்.

வைக்கல் பட்டடை நாயை போன்றதே கிந்தியா. அது தானும் உதவாது. உதவ எத்தனிப்போரையும் விடாது. ஆனால் இன்னும் பலர் பகற்கனவு காண்கிறார்கள். கிந்தியா உதவுமென்று; அதுதான் வியப்பிற்குரியது. இன்றும் இராமனைக் கொண்டாடி இராவணனைப் பழித்துரைப்போர் எம்மிடையே உள்ளவரை எப்படி?

உங்கள் கருத்துக்கு நன்றிகள் நொச்சி. உங்கள் படைப்புக்களை யாழ் களத்தில் நீண்ட காலமாகப் படித்து வருகின்றேன்!

அவை எப்போதும் சிந்திக்க வைப்பவையாகவே இருப்பதுண்டு.

திராவிடச் சார்க்கரவர்த்தி இராவணனைக் கொன்றவனையே கும்பிட வைத்துவிட்ட இந்தியனின் திறனை எவ்வாறு வர்ணிப்பது?

பிராமணனான திருஜானசம்பந்தரே 'திருநீற்றின்' மகிமையைப் பாடும்போது, அதனை ஒப்பிட உயர்வானது ஒன்றும் கிடைக்காமல் ' ராவணன் மேலது நீறு' என்று தான் பாடினான்.

எதிரிகளே போற்றும் அந்தத் திராவிட மன்னனை நாங்கள் அரக்கனாகப் பார்ப்பது தான் விந்தை! இன்னும் எழுத ஆசை. ஆனால் இது தளமல்ல!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.