Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் சிறப்புற நடைபெற்ற தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு(படங்கள் இணைப்பு)

Featured Replies

தமிழீழத் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 22 மே 2011 அன்று சிறப்புற நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தர்சன் குணசிங்கம் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியக் கொடியை மருத்துவர் ராகவன் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஸ்கந்தகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

_MG_6001.JPG

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் திரு. யோகராசா தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், துணை வெளியுறவு அமைச்சர் மாணிக்கவாசகர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியுசவுத்வேல்ஸ் பிரதிநிதிகளான தர்சன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் விக்டோரியா மாநில நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி டொமினிக் சந்தியாபிள்ளை ஆகியோருடன் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்திருந்தனர்.

'போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை நினைவூட்டிய தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் யோகராஜா, முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர், தமிழர்கள் தமது இலட்சியமான தமிழீழத்தை அடைவதற்கான சிறந்த போராட்ட வடிவம் நாடுகடந்த தமிழீழ அரசு. ஆகையால் அதன்பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனத் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

சர்வதேச சூழல் மாறும்போது ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின் உதவியுடன் சர்வசன வாக்கெடுப்பொன்று தமிழர் தாயகத்தில் நடாத்தப்படக்கூடிய சூழநிலை ஏற்படலாம் என எதிர்வுகூறிய துணைப்பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் அவர்கள் தென்சூடானில் தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்குக் கிட்டியுள்ள அங்கீகாரத்தை இறுக்கமாகப் பேணி, இன்னும் பல நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற பாடுபட வேண்டுமென தனதுரையில் குறிப்பிட்டார்.

_MG_5949.JPG

துணைப்பிரதமரின் உரையைத் தொடர்ந்து துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளான பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் டொமினிக் சந்தியாப்பிள்ளை ஆகியோர் உரை நிகழ்த்தினர்

நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் உரைகளைத் தொடர்ந்து தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலாவது தேசிய அட்டையைத் தாய்த் தமிழகத்தைச் சேர்ந்தவரும் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளருமான அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழீழத் தேசிய அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர், தர்சன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் டொமினிக் சந்தியாபிள்ளை மற்றும் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் செல்வகணேஸ் ஆகியோர் வழங்கினர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பான மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மக்கள் அரங்காக நிகழ்வுகள் யாவும் கொடிகள் இறக்கி வைத்தலுடன் நிறைவடைந்தன.

மேலதிக படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

... செய்ய வேண்டியவைகளை எவ்வளவோ இருக்க ... இதுதான் முக்கியமா??? ... இன்றைய காலத்தில் அதுவும் புலத்தில் இந்த அடையாள அட்டை எதற்கு பயன்படப்போகிறது????

இதுகள் என்றால் எங்கட ஆட்கள் நல்லசெய்வினம்.

வன்னியில் இருந்தவர்களுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்குமிடையிலான வித்தியாசம் இதுதான்.

இது அதைவிட கஸ்டம் என்பவர்கள் தான் இங்கு கூடுதலாக இருக்கின்றார்கள்.

... எங்கேயோ ஓர் நாடாம் பற்றி எரிந்து கொண்டிருக்க, இந்த நாட்டை ஆண்டவர்கள் என்னத்தையோ பிடித்தோ/ஊதிக் கொண்டிருந்தார்களாம்!!!!!!!! ...... இதற்கு ஒத்த நிலயில் தான் எம் பிரதிநிதிகளும்????????????

... உந்த ஐடி காட்டை தலையிலோ கட்டிக் கொண்டு திரிகிறது????????????? <_<

  • கருத்துக்கள உறவுகள்

... எங்கேயோ ஓர் நாடாம் பற்றி எரிந்து கொண்டிருக்க, இந்த நாட்டை ஆண்டவர்கள் என்னத்தையோ பிடித்தோ/ஊதிக் கொண்டிருந்தார்களாம்!!!!!!!! ...... இதற்கு ஒத்த நிலயில் தான் எம் பிரதிநிதிகளும்????????????

... உந்த ஐடி காட்டை தலையிலோ கட்டிக் கொண்டு திரிகிறது????????????? <_<

உங்களுடைய கேள்விகள் நியாயமானதாக படலாம் ஆனால்...............

எமை ஈழதமிழர்கள் ஸ்ரீலங்கா அரசமைக்குள் இல்லாதவர்கள் என்று அடையாளபடுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. எது முக்கியமானவைகள் எது இப்போது முக்கியமில்லாதவைகள் என்று பிரித்து செயற்படுத்திn கொண்டிருக்க முடியாது. அவர்கள் அதை செய்கிறார்கள்................... இதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது என்று ஒன்றை நீங்கள் கருதினால் அதை நோக்கி நானும் நீங்களும் நகரலாமே???

இனியும் அவரையும் அவரையும் பற்றி பேசிகொண்டிருந்து ஆவதற்கு ஒன்றுமில்லை................

நானும் நீங்களும் சில கடமைகளை சுமக்க தயாராக வேண்டும்.

நாடுகடந்த அரசின் இன்னொரு செயற்பாடாக இது இருக்கிறதே தவிர.................. இதுதான் நாடுகடந்த அரசின் செயற்பாடு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

:) மருதங்கேணி,

நானும் இக்கூட்டத்திற்குப்போயிருந்தேன். அது தனியே தமிழீழத் தேசிய அடையாள அட்டையை மட்டும் வழங்கு ஒரு சடங்காக இருக்கவில்லை. மாறாக நாடுகடந்த தமிழீழ அரசின் இன்றைய செயற்பாடுகள், அதன் உடனடி, நீண்டகாலத் திட்டங்கள், சர்வதேசத்துடனான, முக்கியமாக இந்தியாவுடனான தொடர்புகள் என்பனபற்றி அதன் உதவிப்பிரதமரும், நிதியமைச்சருமான பேராசிரியர் செல்வனாதன் அவர்கள் விளக்கவுரை ஒன்றை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களும் இறுதியில் மிகவும் சுவாரசியமான பார்வையாளர்களின் கேள்விநேரம், கலந்துரையாடல் என்று மிகவும் ஆக்கபூர்வமானதாக அந்நிகழ்வு அமைந்திருந்தது.

கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட வினாக்களில் கே பீ யிற்கும் ருத்துரகுமாரன் அவர்களுக்குமிடையிலான தொடர்பு, நாடுகடந்த தமிழீழ அரசின் "சனநாயக அணியினரின்" செயற்பாடுகள், மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் போன்ற பலவற்றிற்கு உதவிப் பிரதமரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலளித்தனர். பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் கிடைத்தன.

இறுதியாக உதவிப்பிரதமரை நடுநிலை வகித்து இரண்டு பிரிவுகளாக இயங்கி வரும் இந்த அரசாங்கத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்கிற அழைப்பும் விடுக்கப்பட்டது. அதற்கு இதுவரை அவர்செய்துவரும் முயற்சிகள் பற்றிய விளக்கமும், இனிமேல் நடக்கவிருப்பதுபற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.

வெறும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுமட்டுமே என்று இதனைக் கருத முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.