Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவதானம்......புல்ம்பெயர் நாடுகளில் உளவியல் யுத்தம் ஆரம்பித்து விட்டதா????????????????????

Featured Replies

இனிய உறவுகளே யாழ் ஊர்ப்புதினத்திலே இறுதி சில நாட்களாக ஒரு சில கட்டுரைகளை நோக்குவோமாயின் சில கேள்விகள் உங்கள் மனதையும் குடைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அதாவது [பரபரப்பும், விறுவிறுப்பும்....] [......போராளியின் உள்ளக்குமுறல்........][கே பியை விசாரிக்க நீதிபதிகள்.........] இவை எல்லாம் நெதெர்லாந்தை[கொலண்ட்] மையப்படுத்தியும், அங்கே நடை பெற்ற மனித நேயப்பணியாளர்களின் கைது விசாரணயை முக்கியப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.உண்மையில் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பை ஐரோப்பாவில் தடை செய்த பின் ஏனய நாடுகளைப்போல் நெதெர்லாந்திலும் ஒரு வருடத்திற்குமுன் கைது, விசாரணை என்று ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களின் பின் அனைவரையும் விடுதலை செய்தனர் இருவரைத்தவிர. இவ்விருவரையும் கூட மிக விரைவில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இவ்வளவு நாட்களின் பின் அதாவது ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை வெளிவந்து சில கிழமைகளின் பின் மீண்டும் நெதெர்லாந்து விடயத்தை ஏனய சமகால நிகழ்வுகளோடு[ நெடியவனின் விசாரணை]

அதி உத் வேகத்துடன் சம்பந்தப்படுத்தி எழுதப்படுவதுதான் சந்தேகத்துக்குரியதும், கேள்விக்குரியதுமாகும். நெதெர்லாந்தில் தான் சர்வதேசக்குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இன்னும் கொஞ்சக்காலத்தில் அந்த நாடு தமிழர்களின் முக்கியமையமாகவும், இலங்கை அரசை கூண்டில் நிறுத்த பலமுனைப்புகளையும் அந்த நாட்டில் செய்வதற்கும் தமிழர்கள் தயாராக் இருக்கும் இந் நேரத்தில் உளவியல் ரீதியாக எம்மைகுழப்பி பயமுறுத்தி பூச்சாண்டி காட்டும் எதிரியின் கைக்கூலிகளின் தந்திரமாகவும் இருக்குமோ???????????????????????

பணிவுடன்

தமிழ்ச்சூரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்று புலம் பெயர் நாடுகளில் போராட்ட்டம் ஆரம்பிக்கப் பட்டதோ, அன்றே புலம் பெயர் மக்களுக்கெதிரான உளவியல் போராட்டமும் தொடங்கப் பட்டு விட்டது!

இதற்காகப் பல தமிழ் இணையத் தளங்களும், தமிழ் ஊடகவியலாளர்களும் விலைக்கு வாங்கப் பட்டு விட்டார்கள்!

காலத்திற்குக் காலம், தேவைக்கேற்ப அதிகம் குரைப்பார்கள்!

ஆனால் இவர்கள் எங்கள் உறவுகள் என்பது தான், ஜீரணிக்க முடியாத உண்மையாகும்!

புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து ஒரு தேசிய ஊடகத்தை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம்.

புலம்பெயர் இணையத்தளங்கள் பலவும் செய்திகளை பிரசுரிக்க முன்னர் அவற்றை முடிந்தளவுக்கு உறுதிப்படுத்தல் வேண்டும். பிழையான செய்திகளை திருத்தவும் தேவையெனில் அகற்றவும் வேண்டும்.

வாசகர்களை பொறுத்தவரையில் தேசியத்தை வளர்க்கும் ஊடகங்களை அடையாளம்கண்டு ஊக்குவிக்க வேண்டும். இடைக்கிடை அவர்களின் கூகிள் விளம்பரத்தையும் (க்ளிக்) சொடுக்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு சிறு வருமானத்தையும் தனது உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உளவியல் யுத்தம் ஆரம்பித்தபிறகு எனக்கு ஒரே மன உளைச்சல்..! கவுன்சிலிங்க்கு போக இருக்கிறேன்..! :(

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:o அண்மையில் நடந்த ஒரு சம்பவம்....சிங்களத்தின் வெளியுறவுத்துறையில் வேலை பார்க்கும் தமிழர் ஒருவர் இங்கு சிட்னியில் இன்னொரு தமிழரின் வீட்டில் தங்கிச் சென்றிருக்கிறார் என்று நண்பர் ஒருவரின் மூலம் அறிந்தேன்.

ஆக நாம் சிங்களவன் வருவான் என்று முன்கதவால் பாத்திருக்க தமிழர்களைக்கொண்டே சிங்களம் எங்களுக்குள் ஆழமாக ஊடுருவிக்கொண்டிருப்பதுதான் உண்மை !

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உளவியல் யுத்தம் ஆரம்பித்தபிறகு எனக்கு ஒரே மன உளைச்சல்..! கவுன்சிலிங்க்கு போக இருக்கிறேன்..! :(

:lol:

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இதற்காக ஏதாவது சலுகை தருவார்களா? :lol:

  • தொடங்கியவர்

புலிகளின் ஐரோப்பிய தலைவர் எனக் கூறப்படும் எஸ்.ராமச்சந்திரன் கைது என்கிறது திவயின இங்கே இந்தத்தலையங்கத்தை நான் குறிப்பிட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. திரு இராமச்சந்திரன் நெடியவனினி கைதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டார் என்று இந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் இவர் இரு வருடங்களிற்கு முன் நெதெர்லாந்துக்காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நான் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிட்ட படி நெதெர்லாந்தில் விடுதலை செய்யப்படாத இருவரில் இவரும் ஒருவரே. கேள்வி என்னவென்றால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை மீண்டும் எப்படி காவல்த்துறையினர் கைது செய்யமுடியும்..... திவயின கூறிய எந்த நிகழ்வும் நெதெர்லாந்தில் நேற்றையமுன் தினம் நடைபெறவில்லை என்பதே உண்மை. இதுபற்றி மேலதிக உண்மைத்தகவல்களை நான் தேடுகிறேன் மிக விரைவில் உண்மையை எழுதுவேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இதற்காக ஏதாவது சலுகை தருவார்களா? :lol:

ஓம்.. வீட்டுக்கு அனுப்புவார்கள்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.