Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆருயிர்த் தோழன் சீனாவும் கைவிட்டது! அதிர்ச்சியில் இலங்கை அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆருயிர்த் தோழன் சீனாவும் கைவிட்டது! அதிர்ச்சியில் இலங்கை அரசு!

Posted by admin On May 30th, 2011 at 8:49 am / No Comments

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சீனப் பயணம் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சீனப் பயணத்தின்போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுவதையும் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக சீனாவிடம் இருந்து தெளிவான வாக்குறுதியைப் பெறுவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. எனினும் அவை இரண்டுமே சாத்தியமற்றுப் போயுள்ளன.

ஏற்கனவே புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பீரிஸின் பயணம் பின்னடைவை சந்தித்திருந்தது. அதேவேளை அவர் இந்தியாவுக்குச் சென்றபோது வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் எவரையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை.

இதனையடுத்து அமைச்சர் பீரிஸ் சீனாவுக்கும் பயணத்தை மேற்கொண்டிருந்தார். பீஜிங்கில் அதிகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் பேச்சுக்களின் பின்னர் கூட்டறிக்கையோ அல்லது அறிக்கையோ வெளியிடப்படவில்லை. வெளிவிவகார அமைச்சின் சார்பில் அமைச்சர் பீரிஸ் கொழும்பில் அறிக்கையொன்றை வெளியிடப் பணித்திருந்தார்.

பீஜிங் சென்றபோது அவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியான சோபினி குணசேகரவை அழைத்துச் சென்றிருந்தார். இவர் முன்னர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றியவர். சீனவெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்த பின்னர் கொழும்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அது சீனாவுடன் சேர்ந்து அமைச்சர் பீரிஸ் கூட்டறிக்கையொன்றை வெளியிட முடியாமல் போனதை வெளிப்படுத்தியது. அப்படியான கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தால் அது மிகவும் கனதியாக இருந்திருக்கும்.

புதுடில்லியில் அமைச்சர் பீரிஸ் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக கலந்துரையாடியிருந்த போதிலும் இந்தியாவுடனான கூட்டறிக்கையில் அதுபற்றி குறிப்பிடப்படவே இல்லை. பீஜிங்கில் ஐ.நா. அறிக்கைபற்றி கலந்துரையாடப்பட்டிருந்த போதும் அதற்கு விரோதமான கருத்தை சீனா வெளியிடவில்லை.

மிகவும் முக்கியமான இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்து உறுதியானதொரு வாக்குறுதியை பீரிஸ் பெறமுடியாமல் போயுள்ளமை அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளது. சீனாவின் சின்குவா செய்திநிறுவனம் இந்தப் பேச்சுக்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை, அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட அறிக்கையை விட சற்று வேறுபாடானதாகவே இருந்தது.

பேச்சுக்கள் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை எதையும் வெளியிடாத சந்தர்ப்பங்களில், சிக்குவா செய்தி நிறுவனம் வெளியிடும் செய்தியையே அரசியல் மற்றும் இராஜதந்திர ஆய்வாளர்கள் சீனாவின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக்கொள்கின்றன.

அமைச்சர் பீரிஸின் சந்திப்பிக்குப் பின்னர் சின்குவா வெளியிட்ட செய்தியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட ஐ.நாவின் அறிக்கைபற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் கூட அதில் கூறப்படவில்லை.

பீரிஸ் கூறியது போல இந்த அறிக்கை பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தால் சீனா எதற்காக இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் மெளனமாக இருக்கிறதென்பது மர்மமாகவுள்ளது என்றும் கொழும்பு ஆங்கிலவார இதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

நன்றி - சரிதமிணையம்

இன்றைய அமர்வில், மலேசியா, சீனா, ரஷ்யா, பங்களாதேஷ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள், இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவினை வழங்கினர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆருயிர்த் தோழன் சீனாவும் கைவிட்டது! அதிர்ச்சியில் இலங்கை அரசு!

Posted by admin On May 30th, 2011 at 8:49 am / No Comments

சீனா எதற்காக இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் மெளனமாக இருக்கிறதென்பது மர்மமாகவுள்ளது என்றும் கொழும்பு ஆங்கிலவார இதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

காணிக்கொடுப்பனவுகள் இன்னும்முடியவில்லைப்போலும்

டிஸ்கி : காலியில் கொஞ்சம்

வன்னியில் கொஞ்சம்

தீவுப்பகுதியில் கொஞ்சம்

மன்னாரில் கொஞ்சம்

வல்வையில் கொஞ்சம் என்று காணி கேட்டதாக தகவல்

சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே உலகில் செயற்படும். அரசியல் நிலைப்பாட்டில் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இப்போது பல ஆண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் பெண்ணின் நிலையில் நிற்கின்றது!

ஒவ்வொருவரும் தன்னைத் தானே சிங்களம் காதலிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்!

சிங்களத்தின் இளமை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!

சிங்களம் உண்மையில் கைவிட்டது என நூறுவீதம் நம்ப முடியாது. ஆனால் சேர்ந்து கூட்டறிக்கை விடாதது ஒரு நல்ல சமிக்சை. மேலும் சீனா பாகிஸ்தான் மூலமாக, சீன - பாகிஸ்தான் உறவு அண்மைக்காலமாக மிகவும் இறுக்கமாக வளர்ந்துவருகின்றது, இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. அதேவேளை வீட்டோ பாவிக்கவேண்டிய தருணம் வந்தால் அது பாவிக்கலாம் என்ற நிலைமை இருக்கின்றது.

ஆனால் எமது முயற்சிகளால், சீனா சிங்கள போர்குற்றவாளிகளை ஆதரிப்பது எண்பது மில்லியன் தமிழர்களினதும் நீண்டகால வெறுப்பை சம்பாதிக்க விரும்பக்கூடாது எனவும்

தெரிவிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.