Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம் : கலைஞர் உருக்கமான பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூரில் இன்று (5.6,2011) (வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.

அவர், ’’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது.

இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்’’ என்று பேசினார்.

நக்கீரன்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பனாக வேதனையை உணரமுடிகிறது

ஒரு தமிழனாக உருக்கம் வரைவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

-------

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

------

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது.

இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

------

கனிமொழியை குற்றம் செய்யத் தூண்டியவரையும், சி.பி.ஐ. விசாரித்து.... திகார் சிறையில் போட வேண்டும். :D:lol:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கருணை காட்ட எங்களுக்கு மனம் வருகிறதில்லை, ஏனென்றால் வன்னியில் எமது சொந்தங்கள் அழிவுற்ற வேளை நீங்கள் கொஞ்சமும் கருணை கட்டவிலையே?!?

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கருணை காட்ட எங்களுக்கு மனம் வருகிறதில்லை,

ஏனென்றால் வன்னியில் எமது சொந்தங்கள் அழிவுற்ற வேளை நீங்கள் கொஞ்சமும் கருணை கட்டவிலையே?!?

கருணை காட்டாவிட்டாலும்பரவாயில்லை

கருணை காட்டியவர்களையும் எமக்காக போராடியவர்களையும்உள்ளே தள்ளியது மட்டுமல்ல

அந்த மக்களுக்கு பொய் சொல்லி உண்ணாவிரத நாடகமிருந்து ஏமாற்றி

எம்மை பகைவன் கொல்ல வழி அமைத்துக்கொடுத்தீர்கள்

மறக்கமுடியுமா?

மன்னிக்கமுடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணை காட்டாவிட்டாலும்பரவாயில்லை

கருணை காட்டியவர்களையும் எமக்காக போராடியவர்களையும்உள்ளே தள்ளியது மட்டுமல்ல

அந்த மக்களுக்கு பொய் சொல்லி உண்ணாவிரத நாடகமிருந்து ஏமாற்றி

எம்மை பகைவன் கொல்ல வழி அமைத்துக்கொடுத்தீர்கள்

மறக்கமுடியுமா?

மன்னிக்கமுடியுமா?

மன்னித்தால்,மண்ணிற்காக மாண்டவர்கள் எங்களை மன்னிக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளையடிச்சு,களவெடுத்து சந்ததியை பெருக்கின நாதாரி இப்ப பெரிய கதைவசனம் விடுது.

என்னது????? ஒருமலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடக்கூடிய இடத்திலை தன்ரை மோள் இருந்து கஸ்ரப்படுறாவாமோ?....களவெடுத்துப்போட்டு உள்ளுக்கு இருக்கிறது தன்ரையெண்டவுடனை........ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துபோட்டு சிறைவாசம் இருக்கிறமாதிரி கிழடு பழங்காலத்து பிலிம் காட்டுது.

அதுசரி மூனாக்கானா! உனக்கு ஏற்கனவே ஊர்முழுக்க பொண்டாட்டியள்.அத்தினைக்கும் மூண்டுப்படி கணக்குப்பாத்தால் அம்பது டசினை தாண்டும்.இனி அதுகளுக்கு பிறந்ததுகளை எண்ணி கணக்கு பாக்கிறதெண்டால்........வாய்ப்பாடு வைச்சும் கணக்கு பாக்கேலாது.

இப்பிடி பாக்கேக்கை.....சொந்த குடும்பத்தையே நாலைஞ்சு கிராமமாய் பிரிச்சு வைச்சு வாழ்க்கைச்செலவை கட்டேலாமல் தத்தளிக்கிற உனக்கு............கொஞ்ச காலத்துக்குமுந்தி இந்தியபிரதமர் நினைப்பு வேறை........அப்பிடி பிரதமராய் வந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்?

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக ஒருவர் இருப்பதனால், நிறுவனத்தின் தவறுகளுக்கு அவர் பொறுப்பல்ல என்பது ஒரு குழந்தைக்கும் தெரியும். இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சொல்ல மூத்த வழக்கறிஞர் தேவையில்லை! ஆனால் ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் போது, அவர் பங்குதாரர் என்ற நிலையில் இருந்து இயக்குனர் என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்! அவரை அப்படியான நிலைக்கு அனுமதித்தது, உங்கள் நிறுவனத்தின் உள்ளக செயப்பாடுகளின் (Articles of Association) தவறேயன்றிச் சட்டத்தின் தவறல்ல!

இதனைக் கூறி உங்கள் உடன் பிறப்புக்களை ஏமாற்றலாம். ஒரு முழுக் களவையும் மறைக்க முடியாது!!!

உங்கள் மகள் என்னும்போது, பத்து நிமிடத்தில் பூ வாடுவது பெரிதாகத் தெரிகின்றது!

எங்கள் உறவுகளின் விடயத்தில், அவர்கள் உயிர்கள் வாடப் பத்து வினாடிகள் கூடத் தரப்படவில்லை! அவ்வளவு நெருப்பு, நீங்கள் கொடுத்த பீரங்கிகளில்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.