Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அதிகாரமட்டத்துக்கு பரிச்சமில்லாத ரஞ்சன் மாதாய் இந்திய வெளிவிவகாரச் செயலராகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:59 GMT ] [ அ.எழிலரசன் ]

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜுலை 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்கு முன்னர் வியன்னா, கொழும்பு , வொசிங்டன், தெகரான், பிரசெல்ஸ் போன்ற நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

1995-1998 காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலராகவும், பங்களாதேஸ், மியான்மர், சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளுடனான உறவுகளுக்குப் பொறுப்பாக பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல், கட்டார் நாடுகளிலும் இவர் இந்தியத் தூதுவராகவும், பிரித்தானியாவுக்கான பிரதி தூதுவராகவும் ரஞ்சன் மாதாய் பணியாற்றியுள்ளார்.

ஏற்கனவே இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த ஜே.என்.டிக்சிற், சிவ்சங்கர் மேனன்,நிருபமா ராவ் போன்றோர் சிறிலங்காவுக்கான தூதுவர்களாகப் பணியாற்றியவர்கள் என்பதால், கொழும்பு அதிகாரமட்டங்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ரஞ்சன் மாதாய் கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் இளநிலை அதிகாரியாகவே பணியாற்றிவர் என்பதால் சிறிலங்கா அதிகார மட்டங்களுடன் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்.

இதனால் இவரது கொழும்புடனான அணுகுமுறைகள் முன்னையவர்களை விட சற்று வேறுபட்டதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20110628104161

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சிங்கள ராஜதந்திர குள்ளநரிக் கூட்டங்களுக்கு தெரியும் யார எப்பிடி மடக்கனும் என்டு

இது வரை சிங்கள ராஜதந்திரங்களுக்கு முன்னால் இந்தியா தோத்ததாக தான் வரலாறு..............

  • கருத்துக்கள உறவுகள்

வாறவனும் கேரளாக்காரன்தான் தமிழனை உய்ய விடமாட்டான்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்கு முன்னர் வியன்னா, கொழும்பு , வொசிங்டன், தெகரான், பிரசெல்ஸ் போன்ற நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

சந்திரனில் தூதுவராக இருந்தாலும், இவர்களின் இந்திய சிந்தனை மாறுவதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாறவனுக்கு எதுவும் தெரிய வேண்டிய தேவையில்லை

இவரொரு அல்லக்கையாக இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாதாய் பெரிய "மாதா"வாக இருக்கவேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..! :D

இந்த புதியவரால் பெரிதாக ஒரு மேலதிக பாதிப்பு தமிழர் தரப்பை பொறுத்தவரையில் ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஆனால் உண்மையான கொள்கை வரைபுகள் மேனனிடமும் சோனியாவிடமும் தான் தொடர்ந்தும் இருக்கும்.

அதேவேளை இவர் கூடுதலாக சீனா மற்றும் பாகிஸ்தான் விடயமாகவே கூடுதல் நேரம் செலவழிக்கலாம். இந்த நாடுகள் பற்றி இவரின் 'அறிவு' குறைவானது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1962 முதல் பிறந்தவர் என்டால் சீனாவைப்பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கேரளாவிலை மீன் குழம்பு சாப்பிடுகிறவர் என்றால் தெற்கை வர ஸ்ரீலங்கா என்றால் எவடம் என்று படிச்சிடுவர்.பாகிஸ்த்தானைப்பற்றி அதிகம் தெரிய வேண்டியதில்லை. சீனா தூக்கிவிட்டாலும் அது மிதக்க ஏலாத, தாண்டுபோன தோணி.

நிரூபம் அமெரிக்காவுக்கு வருகுது என்றால் அதுவும் ஆபத்துதான். ஸ்ரீலங்கா கொள்கைகளுக்கு, அமெரிக்கா, இந்தியாவின் முகத்தைதான் இவ்வளவு நாளும் பார்த்தது. "பிள்ளேக்கும்-நிரூபமும்". இது கூடாத கொம்பிநேசன். இந்த நோயை ஒருவராலும் கண்டுபிடிக்க ஏலாது.

நிருவின் மாற்றத்தில் எமக்கு கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் மண்டையன் கருநா பிளான் பண்ணிதான் இந்தியை வெளியேற்றினான் என்பது இதன் மூலம் புலனாகிறது..தமிழ்நாட்டில் இருந்து எவனும் ஐ.எப்.எஸ் பாஸ் பண்ண முடியாதோன்னோ.. முதலில் கோவை பி.எஸ்.ஜி காலேஜை.. மலையாளிகள் காலேஜாக மாற்றிவிட வேணும்.. அம்மா அமிர்தாயின் நிறுவணங்கள்.கிருஸ்ணா பொறியல் கல்லூரி..சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி. சென்னை சில்க்ஸ் பேருக்குதான் உள்ள பூர மலையாள கைத்தடிகள்.. இதெல்லாம் சாம்பிள் .. மலையாளகைத்தடிகளை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கவேணும் இல்லை யென்றால் தமிழ்நாட்டை கேரளநாடு என்று பெயரை மாற்றிவிட வேணும்..தமிழ்நாட்டில் காங்கிரசு 5 இடங்களில் வெற்றி பெறுவதற்கு காரணமே இந்த மலையாள கைத்தடிகள்தான்..ம்ண்டையன் ஓணத்திற்கு லீவு என்று அறிவித்த அடுத்த நிமிடமே .. பொங்கலுக்கு மலையாள அரசு விடுமுறை அளிக்காது என்று சொல்லி போட்டான்.. டீக்கடை .. பேக்கரி.. ஓட்டல் கடை என அனைத்திலும் இவர்கள் இம்சை.. ஓட்டுக்கு நக்கனுமில்ல ..

டிஸ்கி:

அவனுங்க கதைய விடுத்து முதற்படியாக இந்த வெளிநாட்டில் இருந்து சபரிமலை படியேறுவதை ஈழ தோழர்கள் நிறுத்தி.. பழனி திருபரங்குன்றம் திருத்தணி போன்ற கோயில்களை சுத்திவர பழக்வேண்டும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.