Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம்.

Featured Replies

நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன்.

1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்?

ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார்.

அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நான் சொன்னேன் நீங்கள் காசு கொடுக்கமுதல் என்னையோ எங்கள் குடும்பத்தையோ விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போ தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் எங்களை தொடர்புகொள்ரிங்க என்று. நான் சொன்னது சரியா தவறா?

2 ) அவர் என்ன நோக்கத்திற்காக அந்த காசு கொடுத்ததென்று சொன்னாரெண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அதாவது எனது தங்கையை எங்கள் குடும்பம் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு மாணவர் விசாவில் எடுப்பதற்காக அந்த காசை அனுப்பினாரெண்டு சொல்கிறார். அப்படியெண்டால் அவர் செய்த காரியம் சரியானதா?

எங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் அவர் யுவதியை லண்டனுக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதை எங்களுக்கு தெரிந்து செய்ய முயற்சி செய்திருக்கலாமே?

3 ) இன்று எங்கள் வீட்டிற்கு cid பொலிசார் வந்து விசாரித்தார்கள். அவர்கள் commercial bank கணக்கை check பண்ணியபோது தங்கையின் கணக்கில் 10 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கிறது.. எனவே குறித்த நபர் அந்த கணக்கிற்கு தான் 15 லட்சம் போட்டதாக எப்படி சொல்கிறார்.. மேலும் 1 கோடியே 40 லட்சம் அந்த கணக்கில் போடப்பட்டுள்ளதாக எப்படி அவர்கள் செய்தியில் போட முடிந்தது? அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? இல்லை ஏனெனில், அந்த கணக்கிலக்கத்தில் உள்ள காசு சம்பந்தமாக நீங்கள் சாவகச்சேரி cid போளிசரிடமோ அல்லது commercial bank மனகேரிடம் விசாரித்து பாருங்கள் உண்மை என்னவென்று உங்களுக்கு உங்களுக்கு தெரியவரும்.

4 ) நன்றாக ஆராயாது போட்ட இந்த செய்தியால் இன்று எங்கள் அம்மா, அப்பா ஏன் எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம். ஒரு செய்தியை போடும்போது எல்லா பக்கமும் விசரித்திருக்கவேண்டும். எங்கள் அம்மா அப்பாவுக்கு எதாவது நடந்தால் அவர்களால் அவங்க உயிரை திருப்பி தர இயலுமா?

5 ) எதாவது தவறு நடந்திருந்தால் முதலில் வழக்கு போட்டு அதன்மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் செய்தியை பிரசுரிப்பது வேறு விடயம். அனால் அவர்கள் உங்கள் செய்திப்பக்கத்தில் போட்டது சரியாவென சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒருவரின் தனிப்பட்ட காதல் தோல்விக்காக ஏன் அவர் இந்த செய்தியை போட்டிருக்ககூடாது. தனிப்பட்ட அவரின் பிரச்னையை அவர் இப்படி கேவலமான முறையில் செய்தியாக பயன்படுத்தி எங்கள் குடும்பத்தினை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

எனவே நீங்களாவது இந்த செய்தியை நன்கு விசாரித்து வெளிவிடவேண்டுமேன்று கேட்டு கொள்கிறேன்.

Kandiah Sutharsan

sutharszan@gmail.com

****, ****, ஆகிய இரு இணையத்தளத்தை நடத்தி வருபவரான **** நன்பரே பணத்தைக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது?

குடும்பப்பிரச்சனையை இணையம் இருக்கிறது என்பதற்காக எழுதுவது நியாயமா.?

அன்பு நன்பர்களே நாங்கழும் ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான் எமதுதாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடாதே எனவே பெண்ணுக்காகக் குரல் கோடுப்போம்

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1309899423&archive=&start_from=&ucat=1&

Edited by மோகன்
****நீக்கப்பட்டுள்ளது - மோகன்

முகநூலில் கடலை போடுவதற்கு 15 இலட்சம் கொடுத்தாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் என்னென்ன சுத்துமாத்துக்கள்???????ஆரை இப்ப நம்புறதெண்டேதெரியேல்லை?

விஞ்ஞானம் முன்னேறமுன்னேற..........விண்ணாணங்களும்முன்னேறிக்கொண்டுவரத்தொடங்கீட்டுது........ஆளுக்கொரு கொப்பியூட்டர் அதுக்கொரு இன்ரநெற் லைன்.......மிச்சம் சொல்லியே தெரியோணும்?

அருமையான ஒரு தொலைத்தொடர்பு கண்டுபிடிப்பு.........தேவையில்லாத விசயங்களுக்கு பறிபோறதை நினைக்க கவலையாய்கிடக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை தமிழ்நாட்டு தமிழன் அறியமையால் சாகிறான்.... ஈழ தமிழன் உள்குத்தால் சாகிறான் என இதன் மூலம் அறியபடுகிறது....

டிஸ்கி

மற்ற சும்மா இருக்கும் அள்ளகைக்களுக்கும் சாக்கு போக்கு கிடைத்து போடுது(சகோதர யுத்தம் ) சண்டை போடதீங்கப்பா :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சில பேரிடம் பணம் அளவுக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கின்றது!

எப்படி அந்தப் பணம் வந்ததோ, அப்படியே போகின்றது போலும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை, வாசிக்க நல்ல முசுப்பாத்தியாய் இருக்குது. :)

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை வாசிக்க பெடியள் சொல்லுற பழமொழி ஒண்டு தான் ஞாபகத்துக்கு வருது. ஆனான ஆடெல்லாம் குழைக்கு அழ சொத்தி ஆடு மட்டும் எதோ ஒண்டுக்கு அழுதிச்சாம்...... :lol:

எனக்கு நடந்த ஒரு சம்பவம். நான் அவுஸ் வந்த புதிதிலே, எனக்கு நெருக்கமானான் நண்பன் ஒருத்தனின் பெண் நண்பி தனது தாயாரின் மருத்துவ செலவுக்கு காசு தேவை எண்டு கோல் எடுத்து உயிரை வாங்குவா. (இவளவுக்கும் அந்த நண்பனும் வெளிநாடு சென்றிருந்த படியால், தன பங்கிற்கு காசு அனுப்பியிருந்தான்) எனக்கு, எனது மொபைல் அடிக்கும் போதெல்லாம் ஒரே கோவமா வரும், போனை எடுப்பதே இல்லை. பிறகு அப்பிடியே விட்டிடா. நான் ஒரு விடுமுறைக்கு இலங்கை போய் நண்பர்களை சந்தித்த போது, எல்லோருமே எதோ நாங்கள் காசை மரத்திலே புடுங்குறோம் எண்ட நினைப்பிலே கதைத்தார்கள். இதைவிட சுவாரசியமானது இரண்டு கிழமைக்கு முன்னர் எனக்கு வந்த கோல். எனது பழைய ஆனால் நெருங்கிய நண்பன் தான் எடுத்தான். திருப்பி அடி, சரியான அவசரம் எண்டு சொல்லிப்போட்டு போனை வச்சிட்டான். திருப்பி அடிச்சா, ஏதோ ஏதோ கதைச்சு 15 நிமிஷம் கதைச்சு முடிய விசயத்த நைசா சொன்னான். "மச்சான் ஒரு பத்து லட்சம் காசு வேணும், மூண்டு மாசத்தில தாறன்...." வலு கூலா என்னட்ட பத்து லட்சம் கேப்பது எனக்கு விநோதமாக இருந்தது. பத்து இலட்சத்த பத்து ரூபா மாதிரி கேக்கிறானே எண்டு யோசிச்சுப் போட்டு போனை வச்சிட்டன். காசை உழைக்கிரத்துக்கு நாங்கள் படுற பாடு ஊரில இருக்கிற ஆக்களுக்கு தெரிவதும் இல்லை, காசின் அருமை புரிவதும் இல்லை :huh: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.