Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்றிரவு அமரத்துவமடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் 79 வயதில் இறப்பது ஒரு பெரிய சாதனை.

பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் , அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் அனைவராலும் மரியாதைக்குரியவராகக் கருதப்படும் தமிழ் அறிஞர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி காலமாகி விட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவான இவர், கலாநிதி பேராசிரியர் கைலாசபதியுடன் இணைந்தும், தனியாகவும் தமிழுக்காக அளித்திருக்கும் கொடைகள் ஏராளம். தமிழர்களின் சமூக மற்றும் வரலாற்றுப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொடர்புகள், தமிழ் நாடகம், இலக்கிய விமர்சனம் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர் சிவத்தம்பி. (70 புத்தகங்கள், 200 ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் கணக்கிலடங்கா உரைகள்)

1932-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்கிற சிறிய ஊரில் பிறந்த சிவத்தம்பி, சிலோன் பல்கலைக்கழகத்தில் சரித்திரம், பொருளாதாரம், தமிழ் படித்து இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலையில் ‘பண்டைய தமிழ்க் கலாச்சாரத்தில் நாடகம்’ என்கிற தலைப்பில் ஆய்வுகள் செய்து பிஹெச்.டி பட்டம் பெற்றார். மார்க்ஸிஸ்ட் அறிஞரான பேராசிரியர் ஜியார்ஜ் தாம்சனின் சிஷ்யர் இவர். சென்னைப் பல்கலைக்கழகம், டில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் விசிட்டிங் புரஃபஸராகப் பணியாற்றியவர். இவருடைய கருத்துக்களுக்கு இலங்கைத் தமிழர்களின் அரசியல் வட்டாரங்களில் தனி மதிப்பு இருந்தது.

லண்டன் தமிழினி பதிப்பகம் வெளியிட்ட, ‘ஞானம்‘ பத்திரிகை ஆசிரியர் தொகுத்த சிவத்தம்பியின் நீண்ட பேட்டி ‘இலக்கியமும் வாழ்க்கையும்’ என்கிற தலைப்பில் 160 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அது வெறும் பேட்டி அல்ல, இலங்கைத் தமிழர்களின் சரித்திரம்.

2002-ம் வருடம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அடைசலான ஒரு ஃபிளாட்டில் அவரைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் பிரபாகரனை மிகவும் புகழ்ந்து பேசினார். “தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத அடக்குமுறைகள், ராணுவத் தாக்குதல்களை எல்லாம் எதிர்த்து நின்று கள த்தில் போராடும் ஒரே ஒரு அணியாக விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் தலைமை தாங்கும் பிரபாகரன்தான். தங்கள் இன்னல்களைப் பாராளுமன்றத்தில் எழுப்ப முடியாத ஈழத்தமிழர்கள் பிரபாகரனின் பின்னால் அணி திரண்டு நிற்பதில் ஆச்சரியமில்லை..ஈழத்தில் அகிம்சைப் போராட்டம் தோல்வியுற்ற காலத்தில்தான் பிரபாகரனின் போராட்டம் முன்னுக்கு வந்தது...’’ என்றார்.

“ஒருவேளை எதிர்காலத்தில் பிரபாகரனும், விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒடுக்கப்பட்டால் என்ன ஆகும்?’’

“அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு ஈழத்தமிழர்களால் வலிமையாகப் போராடவே முடியாத நிலை உருவாகும். விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்கள் தேவை என்பதை விட, தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு வேண்டும் என்பதுதான் நிதர்சனம்..’’ என்றார் அந்தத் தமிழ் அறிஞர். இன்று வரலாறு அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் திராவிட இயக்கமும் வரலாற்றில் கீழிறங்கிக் கொண்டிருப்பதாக அவர் கருதினார். அதற்கு அவர் சொன்ன மூன்று முக்கிய காரணங்கள் 1.தேர்தலில் போட் டியிட முடிவு செய்தது 2.பகுத்தறிவிலிருந்து விலகி ஒரே குலம், ஒருவனே தேவன் என்று தடம் புரண்டது 3.திராவிட நாடு கோரிக்கையைக் கை விட்டது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகு தமிழகத்தில் நடத்தப்பட்ட உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டார் சிவத்தம்பி. உலகத் தமிழ் மக்களால் அவருடைய செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தன் நிலைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் பெயர் பெற்றவர் சிவத்தம்பி. ‘காற்றின் பக்கம் ஆடுபவர், சிங்கள இந்துத்துவவாதி’ என்று கூட அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். விமர்சனங்கள் நிறைய இருக்கலாம், ஆனால் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு மிகப் பெரியது..

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.