Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விபச்சாரம் சமூகச் சீர்கேடுகள்! புலம்பெயர் தமிழர்களும் காரணமாம்: யோகேஸ்வரி குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Friday, 2011-08-19 11:09:16]

Jaffna.Mayar_Patkunam_J_150.jpg

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றஞ் சுமத்தியுள்ளார். சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் ஊடகர்களால் எடுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு புலம் பெயர் தமிழர்களை குறைகூறியுள்ளார்.

யாழ். நகரில் இயங்கும் லொட்ஜ்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் முதல்வரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த முதல்வர், இங்குள்ள லொட்ஜ்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன என்பது உண்மைதான். இவற்றைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

இங்கு நகரிலுள்ள வீடுகளே லொட்ஜ்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லொட்ஜ்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானது. அவர்களுக்குப் பணம் தேவை என்பதால் வேற்று இனத்தவர்களுக்கும் அதிகம் லாபம் தேடித்தருபவர்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர். பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் லொட்ஜ் நடத்துநர்களும் சமூகம் தொடர்பில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அக்கறையுடைய நடத்துநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை. இந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதாயின் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். காணி அல்லது வீட்டு உரிமைப் பத்திரம் அவசியமாகும். ஆனால் அவை லொட்ஜ் நடத்துநர்களிடம் இல்லை. எனினும் இவற்றைப் பதிவு செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48572&category=TamilNews&language=tamil

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். நகரில் இயங்கும் லொட்ஜ்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் எமது செய்திப்பிரிவினர் முதல்வரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த முதல்வர்,

“இங்குள்ள லொட்ஜ்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன என்பது உண்மையாகும். இவற்றைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

இங்கு நகரிலுள்ள வீடடுகளே லொட்ஜ்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லொட்ஜ்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானது. அவர்களுக்குப் பணம் தேவை என்பதால் வேற்று இனத்தவர்களுக்கும் அதிகம் லாபம் தேடித்தருபவர்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர். பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் லொட்ஜ் நடத்துநர்களும் சமூகம் தொடர்பில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அக்கறையுடைய நடத்துநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை. இந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதாயின் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். காணி அல்லது வீட்டு உரிமைப் பத்திரம் அவசியமாகும். ஆனால் அவை லொட்ஜ் நடத்துநர்களிடம் இல்லை.

எனினும் இவற்றைப் பதிவு செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

- அலைகள்

யாழில் விபச்சாரம் சமூகச் சீர்கேடுகள்! புலம்பெயர் தமிழர்களும் காரணமாம்: யோகேஸ்வரி குற்றச்சாட்டு

...

தோழர் டக்லஸ் யாழில் வைத்திருக்கும் யோகேஸ்வரி கூறுவது கிட்டத்தட்ட சரிதான்!!! ... முன்பெல்லாம் ... புலிகளின் காலங்களில் ... புலத்தில் இயங்கிய ஒட்டுக்கும்பல்களின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் யாழ் செல்ல முடியாதிருந்தது!!! ... அதன் காரணமாக யாழில் சமூக சீர்கேடுகள் அவ்வளவாக தலை தூக்கவில்லை!! ஆனால் தற்போது அவிட்டு விட்டுக் கிடக்கிறது ... குத்தியின் கோழையாக்கள் எல்லோரும் யாழுக்கு றெகுலராக விசிட்!! ... யாழ் உருப்படுமா????

Edited by Nellaiyan

புலத்தில் குறிப்பாக ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து சென்றிருக்கும் சிலர் தம்மை மில்லியனேயார் என்று அறிமுகப்படுத்தி யாழில் ஆமியின் தயவோடும், டக்ளசின் ஆதரவோடும் கட்டப்படும் பல புதிய லொட்ஜ்களுக்குப் பொறுப்பு. அவர்கள் சிறுவர் பாலியல் முறைகேடு செய்யவும் அஞ்சாதவர்கள். இவர்களை அங்குள்ளவர்கள் அடையாளம் கண்டாலும் ஆமியின், டக்ளசின் ஆதரவு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் என்று அங்குள்ள நண்பரின் குடும்பத்தினர் அண்மையில் கூறி இருந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விபச்சாரம் சமூகச் சீர்கேடுகள்! புலம்பெயர் தமிழர்களும் காரணமாம்: யோகேஸ்வரி குற்றச்சாட்டு

...

தோழர் டக்லஸ் யாழில் வைத்திருக்கும் யோகேஸ்வரி கூறுவது கிடத்தட்ட சரிதான்!!! ... முன்பெல்லாம் ... புலிகளின் காலங்களில் ... புலத்தில் இயங்கிய ஒட்டுக்கும்பல்களின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் யாழ் செல்ல முடியாதிருந்தது!!! ... அதன் காரணமாக யாழில் சமூக சீர்கேடுகள் அவ்வளவாக தலை தூக்கவில்லை!! ஆனால் தற்போது அவிட்டு விட்டுக் கிடக்கிறது ... குத்தியின் கோழையாக்கள் எல்லோரும் யாழுக்கு றெகுலராக விசிட்!! ... யாழ் உருப்படுமா????

ஏற்க்க கூடியதா உள்ளது, மறுப்பதற்கு இல்லை.

பிரதான ஆறு காரணங்கள்,

(1) பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை,

(2) ஆசிரியர், பெரியவர்களின் பொறுப்பற்ற தன்மை

(3) மாணவர்களின் கீழ்ப்படியாத தன்மை

(4) தமிழ் சினிமா, தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், தமிழ் FM வானொலிச் சேவைகள்

(5) புலம்பெயர் சமூகத்தினர் வாரி வழங்கும் அளவுக்கதிகமான பணம்

(6) சிங்களப் பயங்கரவாதிகள், ஒட்டுக்குழுக்களின் பிரசன்னம்

புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் 1, 2, 3, 4, 6, ஆகிய குறைகளை கணிசமான அளவுக்கு நேரடியாகவோ, மறை முகமாகவோ நீக்கியிருந்தனர்.

இக் காலகட்டத்தில் இதில் முக்கியமாக 1 உம், 2 உம், 5 உம் தமது கடமைகளை சரிவரச் செய்தால் கலாச்சாரச் சீரழிவுகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

புலம்பெயர் மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக சிங்களம் அண்மைக்காலமாக புலம்பெயர் மக்கள் மீது பல குற்றங்களை அடுக்கடுக்காக வைத்து வரும்வேளையில் இவரின் குற்றச்சாட்டு கொஞ்சம் சந்தேகத்தை தருகின்றது.

Edited by akootha

1.சுதந்திரம் கிடைத்தவுடன் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். பொதுமக்கள் இப்போது கண்டிக்க பட தக்கநிலையில் இல்லை.

2. ஆமியோடோ அல்லது டக்கிளசோடு பேசமுடியவில்லை என்பதற்காக பொதுமக்களை குறை கூறமுடியாது.

3.சரியோ, பிழையோ, யோகேஸ்வரி சொல்வதை K.P. யின் வார்த்தைகளை விட கூட மதிக்க முடியாது. அவ அரசியல் கைதியோ அல்லது துரோகியோ நமக்கு தெரியாது.

4. இங்கே ஒரு கூட்டம் திருடனாய் பா்ர்த்து திருந்த முடியும். எல்லா வசதிகளுடனும் மேலைநாடுகளில் இருக்கும் புலம்பெயர்மக்கள் நிச்சயமாக தேவையான நேரம் சிந்திக்க கிடைக்கபெற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எரிகிற வீட்டில் நெருப்பெடுக்காமல் இருக்க பழகி கொள்வது நல்லது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.