Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எப் பொருளாகினும்.. அப்பொருள்..

சரியாய் கையாளாக விடத்து.. ஆபத்து விளையலாம்" இதை இப்பதான் பார்த்தேன்,

நெடுக்கு சாமி எப்ப உங்களை தரிசணம் செய்ய வரலாம்

உஷ் ஷ்.. நேரடித் தரிசனம்.. எல்லாம்.. இப்ப ஸ்கைப் ஊடாகத் தான். அதுவும் சிஷ்யைகளுக்குத் தான் முன்னுரிமை. இப்ப கண்ட கண்ட இடத்தில எல்லாம் குட்டிக் குட்டி கமராவை பூட்டி வைச்சு.. நம்முடைய கிருஷ்ண லீலைகளை..மொனிற்றர் பண்றாங்கல்ல..! நாங்க யாரு.. நித்தியானந்தா போல.. அமுக்கிறதுக்கு என்ன... பெ.... கோழிகளா..???! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பல விமர்சனங்கள் இருந்தாலும், பிரபாகரனுக்குள்ள மதிப்பே தமிழினத்திற்காக போராடியதுதான். தமிழர்களுக்காக போராடுபவர்களை தமிழர்கள் மதிப்பார்கள். அதை விட்டு அவரின் பெயரையும் கொடியையும் மதிப்பது மட்டுமல்ல.

பல திரிகளில் சொன்னதுதான் மீண்டும்.

மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, எங்களுக்காக வாழ்ந்த போராளிகளை மறந்து விடுகிறோம்.

தப்பிலி இன்றைய பச்சை உங்களோடு முடிந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கண பேர் வாய்ச் சொல்லில் வீர‌ராக இருக்கிறார்கள்...நேர்மை அது,இது என்று கதைப்பார்கள் ஆனால் தாங்கள் அதற்கு நேர் மாறாக இருப்பார்கள்...அவ்வளவு போராளிகளும் முள்ளிவாய்க்காலில் குப்பி கடித்து செத்திருந்தால் யாழில் வந்து ஒரு அஞ்ச‌லியை செலுத்திப் போட்டு "இவர்கள் தான் உண்மையான,மானமுள்ள வீர‌ர்கள்" என எழுதி விட்டு போய் கிட்டே இருப்பார்கள்...அவர்களுக்கு என்ன செத்தது அவர்களது அண்ணாவா?...அக்காவா?...இவர்களைப் பற்றி எழுதினால் தலைப்பு திசை மாறி விடும் அத்தோடு எனக்கு நேர‌மும் இல்லை :wub:

மக்களை ஒன்றிணைக்க கூடிய வகையில்தான் எவரின் ஆக்கங்களும் இருக்க வேண்டு என்பதில் கருத்து வேறுபாடில்லை.

இது வெறும் கதைதானே? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? இந்தத் தலைப்பால் பிரபாகரனின் பெயரிற்கு ஏதும் களங்கம் வருமா? இதனை எழுதாமல் விட்டால் மாத்திரம் மாக்களுக்கு உணர்வு வந்து ஒற்றுமையாகி, நாட்டுக்கு போராடப் போய் விடுவார்களா? அல்லது போராடிய போராளிகளுக்கு ஏதும் கிள்ளி எறிந்து விடப் போகிறார்களா? இப்படியான ஆக்கங்கள் பிடிக்காவிட்டால், உதாசீனப் படுத்தினால், மீண்டும் இந்த ஆக்கங்கள் வராது.

பல விமர்சனங்கள் இருந்தாலும், பிரபாகரனுக்குள்ள மதிப்பே தமிழினத்திற்காக போராடியதுதான். தமிழர்களுக்காக போராடுபவர்களை தமிழர்கள் மதிப்பார்கள். அதை விட்டு அவரின் பெயரையும் கொடியையும் மதிப்பது மட்டுமல்ல.

பல திரிகளில் சொன்னதுதான் மீண்டும்.

மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, எங்களுக்காக வாழ்ந்த போராளிகளை மறந்து விடுகிறோம்.

எல்லோருடைய எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும் ஆனால் ஆதது அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும்...தேசத்திலும்,தேனியிலும் போய் புலி/தேசிய ஆதரவு கட்டுரையையோ தேட முடியாது ஆனால் அங்கு போய் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என வாசிக்கலாம் அதே மாதிரி யாழிற்கு வருபவர்கள் புலி ஆதர‌வு/தேசிய ஆதர‌வு சம்மந்தமாக என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை பார்க்கத் தான் வருவார்கள்...எழுதும் கள உறுப்பினர்களை விட பொதுவாக யாழை வாசிக்கும் வாச‌கர்கள் முகப்பிற்கு வந்து பார்த்து விட்டு "பாவாம் பிறபாகர‌ன்" என்ட‌ தலைப்பைக் பார்த்தால் என்ன செய்வார்கள்?...அவர்களுக்கு யாழுக்கு வர‌வோ,அல்லது யாழை வாசிக்கவோ ஆசை வருமா?...பொதுவான கருத்துக்கள் என அர்ஜீன் அண்ணா "செல்வியை" பற்றியும்,கிருபன் "சோபா சக்தியைப்" பற்றியும் கொண்டு வந்து இணைக்கிறார்கள் அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? இல்லைத் தானே அதுவும்,இதுவும் வேறு,வேறு...யாழில் நேர‌டியாக முன்னாள் போராளி என சொல்லிக் கொண்டு எப்படி இப்படி ஒரு தலைப்பில் எழுதலாம்?...உண்மையான போராளியாய் இருந்தால் இப்படி எழுதுவார்களா?...நான் இதற்கு முதல் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் என்னும் தர‌வில்லை நான் திரும்பவும் கேட்கிறேன் அவர்களிட‌ம்[இந்த பதிவை நான் எழுதியதே நிர்வாகத்தை நோக்கி கேள்வி கேட்கத் தான் பதில் சொல்லும் கட‌ப்பாடு அவர்களுக்கு உண்டு] சாஸ்திரி எழுதிய மாதிரி தலைப்பில் நாங்கள் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?....அர்ஜீன் அண்ணா போன்றோரை நேரடியாக மாற்றுக் கருத்தாளார் என்கிறோம் அவரை இப்படி ஒரு தலைப்பு ஆரம்பித்து எழுத நிர்வாகம் விடுமா?...தற்போது சாஸ்திரியை இத் தலைப்பில் எழுத விட்டால் வேறு சிலர் இதிலும் கேவலமாய் வந்து எழுதினால் அதையும் அனுமதிப்பீர்களா?...அப்படி அனுமதிக்கா விட்டால் சாஸ்திரிக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?...யாழ் தேசிய ஆதர‌வு என்ட‌ நிலையில் இருந்து இறங்கி நடு நிலைமை ஊட‌கமாக மாறி விட்டதா?...யாழில் முன்பு எழுதிய பலர் தற்போது எழுதாமல் விட்டதே ஒரு சிலர‌து அடாவடி எழுத்துக்களாலும்,நிர்வாகத்தின் பக்கச் சார்பாலும் தான் இந்த நிலை அப்படியே தொட‌ருமானால் எழுதுகிற கொஞ்ச‌ பேரே திரும்ப,திரும்ப வெவ்வேறு ஜடியில் வந்து எழுதுவார்கள் கொஞ்ச‌ நாட்களுக்குப் பிறகு யாழை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.

தப்பிலி இது வெறும் கதை தான் ஆனால் "பிர‌பாகர‌ன்" என்னும் பெயர் ஒன்றும் சாதர‌ணமானதில்லையே?...அந்தப் பெயருக்கு தான் மக்களை ஒன்றிணைக்க கூடிய சக்தி இருக்கிறது...90% மக்கள் புலிகளுக்கு தங்கள் ஆதர‌வைக் கொடுத்தார்கள் என்டால் அதற்கு கார‌ணம் அந்தப் பெயரில் உள்ள சக்தி தான்...அந்த புனித பெயரையும்,அத் தலைவனது பட‌ங்களையும் போட்டு கொச்சையாக எழுத நாம் எப்படி அனுமதிக்கலாம்?...தமிழ்நாட்டில் பிர‌புதேவா இயக்கத்தில் விசால் நடிக்கும் ஒரு பட‌த்திற்கு "பிர‌பாகர‌ன்" என பெயர் வைத்தார்கள்...அந்த பட‌ம் ஒன்றும் அர‌சியல் பட‌மில்லை சாதர‌ண மசாலப் பட‌ம் அந்தப் பட‌த்தில் விசாலுக்கு பெயர் தான் "பிர‌பாகர‌ன்"...அங்குள்ள மக்களது எதிர்ப்பு கார‌ணமாக பட‌த்தின் தலைப்பை மாற்றி வெடி என பெயர் வைத்துள்ளனர்...ஏன் அவர்களுக்கு உள்ள உணர்வு எங்களுக்கு இல்லை?...இப்படியான விட‌யங்களை சின்ன,சின்ன விட‌யங்கள் என விட்ட படியால் தான் தமிழினம் அழிந்து போய் நிற்கிறது.

இந்தக் கதையை இவர் எழுதாமல் விட்டால் நீங்கள் சொன்ன எதுவும் நட‌க்காது தான் ஆனால் இவர் இப்படி எழுதுகிறதை நிப்பாட்டினாலே பிளவு பட்ட தமிழினத்தை மேலும் பிளவுபடாமல் தடுக்கலாம்...இங்குள்ள கொஞ்ச‌ பேராவது அங்குள்ள மக்களுக்கு ஏதோ செய்து கொண்டு தான் இருக்கினம்...அமைப்புகளோ,அல்லது புலியின் பெயரை சொல்லி இங்கு காசை சுருட்டினவர்கள் என்ன செய்கிறார்களோ எனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரிந்து பல பேர் தனிப்பட்ட ரீதியில் கஸ்ட‌ப்பட்டு உழைத்த காசில் ஒரு கொஞ்ச‌த்தையாவது அங்குள்ள போராளிகளுக்கும்,மக்களுக்கும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொட‌ங்குவதை பற்றி அங்குள்ள மக்கள் முதலில் தீர்மானிக்கட்டும் அதன் பின்னர் இங்குள்ளவர்கள் போய் போராடுவார்களா/இல்லையா? என்பதைப் பற்றி பின்னர் கதைப்போம்.

http://www.newspapersites.net/newspaper/thatstamil-com.asp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் அந்த இணைப்பை நேரடியாக இணைக்க முடியவில்லை

பிரபாகரன் தலைப்பை மாற்றியது ஏன்? - பிரபுதேவா விளக்கம்

பிரபாகரன் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.

விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.

இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா (வெடியையும் புலிகளையும் மட்டும் பிரிக்க முடியுமா!).

இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.

இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கண பேர் வாய்ச் சொல்லில் வீர‌ராக இருக்கிறார்கள்...நேர்மை அது,இது என்று கதைப்பார்கள் ஆனால் தாங்கள் அதற்கு நேர் மாறாக இருப்பார்கள்...அவ்வளவு போராளிகளும் முள்ளிவாய்க்காலில் குப்பி கடித்து செத்திருந்தால் யாழில் வந்து ஒரு அஞ்ச‌லியை செலுத்திப் போட்டு "இவர்கள் தான் உண்மையான,மானமுள்ள வீர‌ர்கள்" என எழுதி விட்டு போய் கிட்டே இருப்பார்கள்...அவர்களுக்கு என்ன செத்தது அவர்களது அண்ணாவா?...அக்காவா?...இவர்களைப் பற்றி எழுதினால் தலைப்பு திசை மாறி விடும் அத்தோடு எனக்கு நேர‌மும் இல்லை :wub:

குப்பி கடிச்சிருந்தா.. அஞ்சலியாவது செய்திருப்பினம். இப்ப அஞ்சலியும் இல்ல.. எலும்புக் கூடாகி மண்மேடுகளோடு மேடுகளா. இப்ப உங்களுக்கு அதில ரெம்ப சந்தேசமா இருக்குமே. இப்ப மட்டும் உங்க அக்கா தங்கச்சி.. அண்ணன் தம்பியா.. எதிரியால கொல்லப்பட்டு மண்ணோடு மண்ணாப் போனது இல்லையே. இப்ப படாத வருத்தத்தை குப்பி கடிச்சிருந்தா மட்டும் பட்டிருப்பீங்களோ..????!

நேர்மை என்பதை யாழ் கடைப்பிடிக்க முடியாது. யாழில உள்ளவை தான் கடைப்பிடிக்கனும். இங்குள்ளவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி அல்ல இங்கு சொல்லி இருக்கிறோம். அதை அறியிற பக்குவம் இங்கு யாருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆகக்குறைந்தது.. யாழ் நேர்மையாக நடக்க.. யாழிலாவது அதன் உறுப்பினர்கள் நேர்மையா நடந்து கொண்டால் நல்லம் என்றே சொல்கிறேன். யாழ் உறுப்பினர்கள் என்ற வகையில்.. அதில் நீங்களும் அடங்குகிறீர்கள். அவ்வளவே. இதைப் புரிஞ்சுக்காம.. நேரமில்ல.. காலமில்ல... என்று சொல்லிட்டு.. நன்றி.. வணக்கம் போட்டிட்டு.. திரும்பவும் வந்து அதுக்கே தான் கருத்தெழுதுறீங்க அக்கீ..! :lol::icon_idea::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யழ்கள் உறவுகளினதும் யாழ்கள நிருவாகத்தினதும் வேண்டுகோளிற்கிணங்க பா வா ம் பிறபாகரன் என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாஸ்திரி உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.