Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தடையுணர்வு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடையுணர்வு(Inhibition)

.

நாம் விரும்புகிற மாதிரிதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? - யோசித்து பாருங்கள்!

நம் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விடாமல் செய்வது யார்? நமது எதிரிகளா அல்லது விரோதிகளா?

இருவரும் இல்லை!

நமது தடையுணர்வு (Inhibition)! நம் விருப்பப்படி நம்மை வாழவிடாமல் தடுப்பது, இதுதான்!

ஞாபகத்தில் இருந்து அழித்துவிட்ட ஏதோ சின்ன தகராறுக்காக, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும்

அண்ணன்-தம்பிகள்...

அக்காள்-தங்கைகள்...

அப்பா-பிள்ளைகள்...

ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சக ஊழியர்கள்...

இப்படி தடையுணர்வு (Inhibition) என்ற சீனப் பெருஞ்சுவரால், இப்படி எத்தனை பேர் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள்!

நாம் ஒருவருடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள, பாலம் தான் கட்டிக்கொள்ள வேண்டுமே தவிர பிரிப்பதற்கான சுவர் எழுப்பிக் கொள்ளக்கூடாது.

பாட வேண்டும், குதித்து நடனம் ஆட வேண்டும் என்று பலருக்கு விருப்பம் இருக்கும்... ஆனால், பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ...? என்ன சொல்வார்களோ... ? என்று பயந்து நம்மில் பலர் நாம் விரும்பும் இந்த மாதிரி சின்ன சின்ன விடயங்களைக்கூட செய்வதில்லை!

"LOOKING GOOD, FEELING GOOD" என இரண்டு விடயங்கள் இருக்கின்றன! பிறர் கண்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் (Looking good) என்பதற்காக, நமது சந்தோசத்தையே (Feeling good) பின்னுக்கு தள்ளி, காலால் மிதித்துக் கொண்டிருக்கிறோம்.

'தடையுணர்வு' என்ற இந்த சின்ன தடைகளை உடைத்துக் கொண்டு நாம் சுதந்திரம் அடைவது எப்போது?

சிறு சம்பவத்தை பகிர்கிறேன்...

கோபி-14 வயது சிறுவன். அப்பா ஆசைப்பட்ட மாதிரி வகுப்பில் இவனால் மதிப்பெண் எடுக்க முடியவில்லை, இறுதித் தேர்வில் தோல்வியடைந்து விட்டான்!

"தண்டச் சோறு, உருப்படாத முண்டம்! ஒழிந்து போடா! என் கண் முன் நிற்காதே!" என்று கோபியை திட்டிவிடுகிறார் அப்பா. அவ்வளவுதான், அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவே ஒரு பெரிய இரும்பு திரை விழுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகும் பிளஸ் டூ-வுக்கு படிக்கும் தன் பிள்ளையிடம் அவன் பக்கத்தில் உட்கார்ந்து முன் போல் இயல்பாக பேசமுடியவில்லை, அரட்டை அடிக்க முடியவில்லை. இந்த மாயத் திரையை நினைத்து அப்பா வருந்துகிறார்.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு வரும் போது, நேராக கோபியிடம் வந்து, " என் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், தன அன்பின் அடையாளமாக எனக்கு ஒரு 'திருக்குறள்' புத்தகத்தைப் பரிசளித்து, " இந்த உலகிலேயே மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு நீங்கள் பரிசாக கொடுங்கள்" என்று சொன்னார். உலகத்திலேயே நான் அதிகம் நேசிக்கும் நபர் நீதானே கோபி? அதனால் இதை உன்னிடம் கொடுக்கிறேன்,வாங்கிக் கொள்" என்று சொல்லி அந்த நூலைக் கொடுத்தார். பல வருடங்களாக தன்னிடம் முகம் கொடுத்து பேசாதிருந்த தன் அப்பாவின் இந்த வார்த்தைகளையும், செய்கையையும் கண்டு கோபி இதயம் விம்மிப்புடைக்க, ஆனந்தத்தில் அழ ஆரம்பித்து விட்டான்.

"அப்பா! என் மீது உங்களுக்கு அன்பே இல்லை என்று இத்தனை காலம் நினைத்திருந்தேன். உங்களுக்கு நான் பாரமாக இருக்கிறேனோ? என்று கூட பல சமயம் நான் நினைத்ததுண்டு. உண்மையில், இன்று இரவு நான் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள இருந்தேன்".

அதற்கு மேல் கோபியை அவர் பேச விடவில்லை.தன மகனை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட..... அந்த கண்ணீர் துளியில் இடையே இருந்த பெரும் சுவர் கரைந்து விட்டது!

நீங்களும், உங்கள் தாயை, தந்தையை, பிள்ளைகளை, கணவனை, மனைவியை நெஞ்சார நேசிக்கிறீர்களா? ஆனால், எப்போதோ விழுந்த இரும்புத் திரையின் காரணமாக நீங்கள் அவர்களை நேசிப்பதையும், அவர்களிடம் அன்பு வைத்திருப்பதையும் தெரிவிக்காமல் இருக்கிறீர்களா? உங்களின் தடையுணர்வை(Inhibition) இந்த நிமிடமே உடைத்தெறிந்து விட்டு, அவர்களிடம் சென்று உங்களின் அன்பை உடனே தெரிவியுங்கள்...!

வாழ்வது ஒருமுறையே, வாழ்த்தட்டும் நம் தலைமுறை!

நன்றி!

.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் தலைப்பை வாசிக்கும் போது...

எனக்கு தெரிந்து, நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

அந்த அழகிய குடும்பத்திற்கு, 16 வயதில் ஒரே மகன்.

பாடசாலையில் கணிதப் பாடத்திற்கு மட்டும் குறைந்த புள்ளிகளை எடுத்துவிட்டான். தந்தைக்கோ அளவிட முடியாத க்ப்ப்பம். மகனை தாறு, மாறாக பேசிவிட்டார். அதனை தாங்க முடியாத மகன் வீட்டை விட்டு ஓடி விட்டான். கடந்த 14 வருடமாக, அந்தத் தந்தை. மகனை தேடிக் கொண்டிருக்கின்றார்.

மகனில் உள்ள அக்கரையில்.... அந்தத் தந்தை திட்டியிருந்தாலும்... அதனை பக்குவமாக சொல்லியிருந்தால், இன்று அந்தக் குடும்பமே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம், ஆகக் கணிதபாடம் ஒரு நல்ல குடும்பத்தைக் குலைத்துவிட்டது! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவண்ணியன் பகிர்வுக்கு, இந்த கதை வேற மாதிரியும் இருக்கு, ஒரு ஊருக்கு துறவி ஒருவர் வந்தார் எல்லோரும் ஒருவருக்கெருவர் அடிபட்டுக்கொண்டே இருந்தார்கள், அப்ப துறவி ஒருவரை கூப்பிட்டு, நீ இந்த ஊரில் உனக்கு உதவி செய்த ஒருவருக்கு, செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துவிட்டு வா, அவரிடமும் சொல் இதை அவருக்கு உதவி செய்தவரிடம் சொல்லச் சொல்லி, அடுத்தநாள் விடிய பார்த்த போது ஊரே ஒற்றுமையாக சந்தோஷமாக இருந்தது, மற்றவர்கள் செய்யும் சிறு உதவி என்றாலும் மனசார நன்றி தெரிவித்து விடுங்கள்.

இது AH கதை

ஒருமுறை நமது உடலின் உருப்புக்களான வாய், மூக்கு, கண், மூளை, காது ஆகிய ஐந்து பேருக்கும் சண்டை வந்தது.

"நான் இல்லாவிட்டால் மனிதன் மிகவும் கஷ்டப்படுவான்' என்று கூறி ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. "சரி! இதைக் கடவுள்கிட்ட போய் கேட்போம்' என்று முடிவு பண்ணி ஐந்து உறுப்புக்களும் கடவுளைப் போய் பார்த்தன.

""கடவுளே... நான் இல்லைன்னா எவ்ளோ கஷ்டம். என்னோட பேச்சுதானே மற்றவர்களுடன் பழக வைக்குது... நான்தான் கிரேட்!'' என்றது வாய்.

""நான் இல்லன்னா இந்த அழகிய உலகத்தை உங்களால பார்த்து ரசிக்க முடியுமா? நான்தான் கிரேட்!'' என்றது கண்.

""நீங்க பேசுறது, பாட்டு, சத்தம் எல்லாம் கேட்க உதவுனது நான்தானே... நான் இல்லன்னா எப்படி?'' என்றது காது.

""இதை இதை இப்படி இப்படி செய்யுங்கள் என நான் கட்டளை இடலேன்னா... நீங்கள் எல்லாம் வேஸ்ட். அதனால் நான்தான் பெஸ்ட் என்றது மூளை.

மூக்கு மட்டும் ஒண்ணும் பேசாமல் அமைதியாக இருந்தது. இதை கவனித்த கடவுள், ""நீ மட்டும் ஏன் ஒண்ணுமே சொல்லல'' என்று மூக்கிடம் கேட்டாரு. ""தான் ரொம்ப முக்கியம் இல்லை என்பது மூக்குக்கு தெரியும்,'' என்று மற்றவை கிண்டல் செய்தன.

கடவுள் அவைகளை பார்த்து, ""நீங்க எல்லாரும் ஆளுக்கொரு மாதம் செயல்படாமல் இருங்க. எந்த உறுப்பு இயங்காமல் இருக்கும்போது மனிதன் ரொம்ப கஷ்டப்படுறானோ... அந்த உறுப்புதான் பெரிசு,'' என்று கடவுள் சொன்னாரு. எல்லாம் ஒப்புக் கொண்டது.

முதலில் வாய் தன் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதன் பேச முடியாமல் கஷ்டப்பட்டான். அவனை "ஊமை'ன்னு சொல்லி மத்தவங்க உதவி செஞ்சாங்க. வாய்தான் பேச முடியலையே தவிர வேறு கஷ்டங்கள் இல்லை. இதே போல் கண், காது, மூளை தன் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதனுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்தான்.

கடைசியாக மூக்கு தன் செயல்பாட்டை நிறுத்தியது. அவ்வளவுதான். மனிதன் இறந்தான். காது கண், வாய், மூளை போன்றவை செயல்படவில்லை. அப்போதுதான் மூக்கோட சக்தி மற்றவர் களுக்கு புரிந்தது. அந்த சமயம் கடவுள் அங்கு வந்தார்.

"பார்த்தீர்களா! நீங்கள் எல்லாரும் நாங்கதான் உசத்தி என்று கூறியபோது மூக்கு மட்டும் அமைதியா இருந்தது. மூக்கு இல்லைன்னா நீங்களும் இல்லை. இதை நன்கு தெரிந்தும்கூட மூக்கு தன்னடக்கத்தோட இருக்கு. ஆனால், உங்களுக்கு தன்னடக்கம் இல்லை தன்னடக்கத்தோட இருந்தாதான் எல்லாருடைய பாராட்டையும் பெற முடியும்.எல்லாத்துலேயும் வெற்றி பெற முடியும்,'' என்றார் கடவுள்.

நன்றி - தினமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானே தன்ரை  தலையிலை மண்ணை அள்ளிப்போடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகளின் தலையிலையும் சில பழசுகள்

மண்ணை அள்ளிப் போடுதுகள் அதுவும் அதிகம் படிச்சுக் கூழ்ப் பானையுக்குள்ளை விழுந்ததுகள் கனக்க

இந்தக் காலத்துப் பிள்ளைகளை அதுகள் போறபோக்கிலை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கோணும்

எதையும் வரமுதல் காக்க வேணும் வந்த பிறகு பேசியென்ன் ஏசியென்ன

  • கருத்துக்கள உறவுகள்

தானே தன்ரை  தலையிலை மண்ணை அள்ளிப்போடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகளின் தலையிலையும் சில பழசுகள்

மண்ணை அள்ளிப் போடுதுகள் அதுவும் அதிகம் படிச்சுக் கூழ்ப் பானையுக்குள்ளை விழுந்ததுகள் கனக்க

இந்தக் காலத்துப் பிள்ளைகளை அதுகள் போறபோக்கிலை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கோணும்

எதையும் வரமுதல் காக்க வேணும் வந்த பிறகு பேசியென்ன் ஏசியென்ன

எப்படி சொல்லிறியள் இப்படி, என்றும் நான் இளமை என் எண்ணங்களால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.