Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படியும் நடக்கிறதாம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடக்கிறதாம் !

ஐநாவில் சிங்களத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றும் முன்னால் ராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சவீந்திர சில்வாவுக்கெதிராக அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையொன்றை அதன் புலநாய்வுத்துறை மூலம் தயாரித்து வருகிறதாம். வன்னிக் கொலைக்களத்தில் அப்பாவிகள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓளிப்படத்தொக்குப்புகளின் ஒரு பகுதி வெளிநாட்டுச் செய்திப் பிரிவுகளுக்குப் போய்ச் சேர உதவிய ரூபவாகினியின் ஒளிப்படப் பிரிவின் அதிகாரியொருவருக்கும் சவீந்திரவுக்கும் தொடர்பிருப்பதாகவும், இதன்போது பெருந்தொகையான பணம் கைமாறப்பட்டதாகவும் இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ. நா வில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர் தனது முதலீடுகள் பற்றியே அதிக கவனம் எடுத்து வருவதாகவும், இவ்வாறான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் இவர் சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்களுடன் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐ.நாவில் சிங்களத்தின் உப தூதுவராக இருந்தாலும் கூட இவர் பாலித்த கோகண்ணவிடம் அவ்வளவாகப் பேசுவதில்லையாம். நேரில் காணும்போதுகூட ஒரு நமட்டுச் சிருப்புடன் சென்றுவிடுகிறாராம். இவருக்கு மூளையில்லை, வெறும் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர், அரசியல் அறிவு சுத்தம் என்று இவரைப் பற்றி கோகண்ண புலம்பித் திரிகிறாராம்.

இது இவ்வாறிருக்க, தனக்கெதிராக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவது கண்டு சுதாரித்துக்கொண்டுள்ள சவீந்திர சில்வா, தன்னிடம் இன்னும் மீதமிருக்கும் சாட்சி ஆவணங்களை வெளிநாட்டு அமைப்புகளிடம் பெரும் பணத்திற்கு விற்றுவிடலாம் என்று கோத்தா அஞ்சுகிறாராம். இதில் இறுதியாக அரசுக்குக் கிடைத்த செய்தியின்படி, சவீந்திர சில்வா நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமானுடன் தொடர்புகளை ஏற்படுத்த எத்தனித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கு.

மேலதிக விபரங்களுக்கு லங்கா இ நியூஸ் எனும் இணையத் தளத்தைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இறுதியாக அரசுக்குக் கிடைத்த செய்தியின்படி, சவீந்திர சில்வா நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமானுடன் தொடர்புகளை ஏற்படுத்த எத்தனித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கு.

நெல்லை அண்ணை.. உடன் மேடைக்கு வரவும்..! :rolleyes::lol:

இப்படியும் நடக்கிறதாம் !

இது இவ்வாறிருக்க, தனக்கெதிராக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவது கண்டு சுதாரித்துக்கொண்டுள்ள சவீந்திர சில்வா, தன்னிடம் இன்னும் மீதமிருக்கும் சாட்சி ஆவணங்களை வெளிநாட்டு அமைப்புகளிடம் பெரும் பணத்திற்கு விற்றுவிடலாம் என்று கோத்தா அஞ்சுகிறாராம். இதில் இறுதியாக அரசுக்குக் கிடைத்த செய்தியின்படி, சவீந்திர சில்வா நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமானுடன் தொடர்புகளை ஏற்படுத்த எத்தனித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கு.

மேலதிக விபரங்களுக்கு லங்கா இ நியூஸ் எனும் இணையத் தளத்தைப் பாருங்கள்.

இதை உருத்திரகுமார் அவர்கள் மறுத்து அறிக்கை விட்டாகியாயிற்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா,

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இந்தச் செய்தியை வெளியிட்ட இணையத்தளம், அரசுக்கெதிரானது. இப்படிச் சொல்வதால் அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் இன்னொரு முக்கிய போர்க்குற்றவாளியான சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள். மகிந்தவையும், சவீன்திர போன்றவர்களையும் நாட்டுக்குத் துரோகம் செய்வதாகக் காட்டுவதன்மூலம் பொன்சேக்காவை கடவுளாக்கப் பாடுபடும் இனவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா,

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இந்தச் செய்தியை வெளியிட்ட இணையத்தளம், அரசுக்கெதிரானது. இப்படிச் சொல்வதால் அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்கள் இன்னொரு முக்கிய போர்க்குற்றவாளியான சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள். மகிந்தவையும், சவீன்திர போன்றவர்களையும் நாட்டுக்குத் துரோகம் செய்வதாகக் காட்டுவதன்மூலம் பொன்சேக்காவை கடவுளாக்கப் பாடுபடும் இனவாதிகள்.

எமக்காகத் திறக்கப் படும் சகல கதவுகளையும் உபயோகிப்பதே புத்திசாலித்தனம்!

எவர் மூலம், எமக்குத் தேவையானவை வந்தாலும், அவற்றை எமது அனுகூலத்திற்குப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்!

கடவுள் சரத் பொன்சேக்காவை, பின்பு கவனிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை அண்ணை.. உடன் மேடைக்கு வரவும்..! :rolleyes::lol:

ஆரவமுதனும் வரவும். :) :)

ஆரவமுதனும் வரவும். :) :)

ஜெயதேவனும் மேடைக்கு வரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.