Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை ரசிப்பேன்!

Featured Replies

சின்ன சின்னக் கவிதைகள் கூட ஆழமான பல கருத்துக்களை சொல்லி நிற்கின்றன.

தொடர்ந்து பகிருங்கள்! இனிவரும் நாட்களில் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்!

  • Replies 59
  • Views 10.8k
  • Created
  • Last Reply

இண்டைக்கு தான் பார்த்தன் நல்ல கவிதைகள் எல்லாம் தொடருங்கள் :)

hungry-child.gif

பணம்

வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி...

மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே,

காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்..

என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள்,

வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் ,

பசித்து ஒட்டிய வயிறுகள்!!!

மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது...

பணம் பந்தியில் இருக்காது!

"காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!

man+n+watch.jpg

தற்காலிக நியதிகள்

சேர்வதும்... பின் பிரிவதும்...; பிரிந்து பின் கூடுவதும்...;

சுழலும் உலகோடு வாழ்க்கையும் அதனூடான உறவுகளும்;

கட்டாயத்தின் பேரிலோ... எதனாலோ...

அப்படியே நகர்கின்றன கடிகார முட்கள்...!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றி பகிர்வுக்கு, இரண்டும் அர்த்தமுள்ள நிஐத்தை தொடும் நல்ல கவிதைகள்

Edited by உடையார்

  • தொடங்கியவர்

rainv.jpg

உன்னை

குடை என்ற

சட்டம் கொண்டு..

தடை செய்ய

எனக்கு

மனமில்லை!

என்னிடம் இல்லா

சுதந்திரத்தை

உனக்களித்தேன்

பிழைத்துப்போ..

மழையே

நானொரு

ஈழத்தமிழ்மகள்!

-காரையூர் மதன்

  • தொடங்கியவர்

chinaindia.jpgபாரதம்

--------------

நீ சின்ன சின்ன

குஞ்சுகளுக்குதான்

தலைவன்!

சீன ..

பருந்துகளுக்கு

அல்ல!

208029_1960030037457_1143987367_2374245_409606_n.jpg

ஒற்றைப்பனை!

எங்கள் ஊர் மண்ணில் நிமிர்ந்து நின்ற

ஒற்றைப் பனைக்குக்கூட வட்டில்லை!

அதனால்தானோ என்னவோ;

நாம் இன்று புலம்பெயர் மண்ணில்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை:

உச்சியில் இருக்கும்வரை

சீவி சிங்காரித்து அலங்கரிப்பார்

வீழ்ந்துவிட்டால் தூக்கி

எறிந்துவிட்டு மசிரு என்பார்

நிழல்:

ஒளி வெள்ளத்தை

நோக்கி முன்னேறினால்

காழ்புணர்ச்சியுடன்

பின்னோக்கி ஓடுகிறது

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

1.கல்லறையும் கருவறையும்

கல்லறையும் இருட்டு தான்

கருவறையும் இருட்டு தான்

ஆனால்,

கல்லறையில் மனிதன் புதைக்கபடுகிறான்

கருவறையில் மனிதன் விதைக்கபடுகிறான்.

2.விடுமுறை

நிலவுக்கு

வானம் கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

“அமாவாசை”

http://aarvakolaru.wordpress.com/2010/02/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

விடுமுறை

நிலவுக்கு

வானம் கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

“அமாவாசை”

http://aarvakolaru.w...AE%B3%E0%AF%8D/

இலங்கைக்கு

நிலவு கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

"பெளர்ணமி"

:D :D :D

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

காயப்படுத்தாமல்:

தண்ணீருக்குள் நீந்தி

பிடித்து விளையாடிய மீன்

கொக்கின் வாயில் அகப்பட்டது

குறிக்கோள் நிறைவேறிற்று

மீனின் குறிக்கோள்

அதுவாய் இருக்கவில்லை..

-

விழியன்

====================

மனித காட்சிசாலை

“இந்தியன்”

“அமெரிக்கன்”

“வெள்ளையன்”

“ஆப்ரிக்கன்”

கூண்டிலடைத்து

அட்டையெழுதி

வரிசையாய் மிருகங்கள் வந்து

சீண்டும் போது

புலப்படுமோ அதன் வலி?

விழியன்

===========

  • கருத்துக்கள உறவுகள்

My Friend

by Sammy Lane Sharp

We all need someone

To talk to in our life,

A friend to whom we run

In times of stress or strife

A friend who's always there

Throughout the years,

A friend we know will care

And take away our fears.

A friend who's always near,

Waiting for our call,

To wipe away our tears,

And lift us when we fall.

A loving friend indeed,

On whom we can depend

To fulfill our every need -

Thank you, precious friend

நல்ல கவிதை - www.eluthu.com

நல்ல கவிதை படித்து

நாட்களாயிற்று

சிரியேன் ஒருமுறை

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் -

பணம் படைத்த

பெரிசுகள் கறுப்பை

வெள்ளையாக மாற்றறுவதற்கு

திரணியுடன் திமிரெடுத்து

தியானம் பழக வந்தவர்களை

திமிரடக்கி திரணியற்றவளாக்கி

சயனதில் வீழ்த்துவதற்கு

உருவாக்கப்பட்ட பினாமி

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்த கவிதைகள் அழகு.

  • தொடங்கியவர்

நட்பு!

நான் நீர் வேணுமென்று கேட்டேன்.....

கடவுள் .. எனக்கு

சமுத்திரத்தை தந்தார்!

நான் பூ வேணுமென்று கேட்டேன்...

கடவுள் எனக்கு

பூந்தோட்டத்தையே த்ந்தார்!

நான் மரம் வேணுமென்று கேட்டேன்...

கடவுள் எனக்கு...

ஒரு வனத்தையே பரிசளித்தார்!

நான் அவரிடம்

நட்பு ,,வேணும் என்றேன் ..

அவர்

உன்னை எனக்கு

பரிசளித்தார்!

வரம் ஒன்று தந்தான்

இறைவன் இலவசமாக

அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய

காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே

கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு

வரை விலக்கணம் தனைக் கூறியது

கன்னங்களின் ஓரம்

காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்

பொன்னகையில் பார்ப்பதை விட

புன்னகையில் பார்ப்பது என்னை

பகல் நேர பௌர்ணமிகளாய்

தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்

அடைந்த சில நட்புகளை

மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்

காயம் கண்ட இதயமதை மீண்டும்

காயப்படுத்திய உறவுகளை இன்னும்

ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது

காட்சிகளும் மாறியது

கனவுகள் போல

கண்கள் கண்ட கனவுகளும்

கலைந்து சென்றது

கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு

விடை தேடுகின்றேன்

நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது

இறைவனோ மௌனம் காக்கின்றான்

கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்

வரும் கால வாழ்வை எண்ணி

யாரறிவார் இவள் மனதை.......

கவிஞர்:பாரதி

  • கருத்துக்கள உறவுகள்

tamil.jpg

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன் :)

பசியில் வயிறு பத்தி எரியும்

ஏழைகள் பலர் இருக்க

கற்பூரம் பத்தி எரியும்

தட்டிற்கு பத்து டலர்

பக்கத்தில் நிற்கும் மாமிக்கு

வயிறு பத்தி எரிவதற்காக

வஞ்சகம் இல்லாமல் உடையாருக்கும் ஒரு பச்சை :)

  • கருத்துக்கள உறவுகள்

1.கல்லறையும் கருவறையும்

கல்லறையும் இருட்டு தான்

கருவறையும் இருட்டு தான்

ஆனால்,

கல்லறையில் மனிதன் புதைக்கபடுகிறான்

கருவறையில் மனிதன் விதைக்கபடுகிறான்.

http://aarvakolaru.w...AE%B3%E0%AF%8D/

இதிலையும் எம்மவர்கள் விதிவிலக்கு.அங்கும் விதைக்கப்பட்டார்கள்.

இந்த உலகம் அழியாதா

அழியாதா இந்த உலகம்

இறைவா! அழித்துவிடு

இந்த கொடும் உலகத்தை

சுயநலம் தாண்டவமாடும்

இந்த உலகத்தை அழித்துவிடு

ஒரு பக்கம் நான் மட்டும்

வாழ்ந்தால் போதும் என்று

உணர்வோடு வாழ்வோர் பலர்

அதற்க்காக கொலைசெய்பவரும் அவர்களே

மனித உணர்வில்லாமல் பணத்தாசையினால்

மிருகமாக வாழ்வோரும் அவர்களே

ஒவ்வொரு உயிரையும் நீதான் படைத்தாய்

அவர்களில் பலரும் அவர்களே

அவர்களில் குற்றங்கள் இருக்கிறதா

அல்லது உன்னிடமா?

அவர்களில் மட்டும் குற்றமாக இருந்தால்

நீ அவர்களை மட்டும் அழித்துவிடு

அல்லது குற்றம் உன்னிடம்தான்

என்றால் இந்த உலகத்தை அழித்துவிடு

இறைவா! அழித்துவிடு

இந்த கொடும் உலகத்தை

சுயநலம் தாண்டவமாடும்

இந்த உலகத்தை அழித்துவிடு.

கவிஞர்:சபேஷ்

  • தொடங்கியவர்

உண்மை

பி.கோபி, கிருஷ்ணகிரி

பாதங்களை பாதுகாத்தாலும்

பாதுகாப்பில்லாத இடம்தான்

எப்போதும் செருப்புகளுக்கு!

வறுமை

கூடல்

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்!

அடை மழை

விஜய் நிமி

நிலா பெண்ணுடன்

கொண்ட காதல் தோல்வி...

ஓயாமல் அழுகிறது

வானம்...

ஊனம்

வித்தகன்

ஓவியம் வரைகையில்

தூரிகை உடைந்ததோ?

பிரம்மனுக்கு!

முதியோர் இல்லம்!

கவித்துவா (எ) பிரகல்யா

விழுதுகள் விரட்டி அடித்ததால் ...

ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

கருச்சிதைவு ..!

கவித்துவா (எ) பிரகல்யா

ஒரு வளர்பிறை

பௌர்ணமி ஆகாமல்....

'அமாவாசை' ஆனது!!

வாழ்க்கை

ஆர்.ஈஸ்வரன், வெள்ளக்கோவில்

கிளறினால்

கிடைக்கும் வாழ்க்கை

கற்றுக்கொடுக்கும் கோழி

மதக்கலவரம்

கவித்துவா

கருவறையில் பத்திரமாய் கடவுள்கள்..

தெருவெங்கும் கல்லறையாய் அப்பாவிகள்!!

தூண்டில் மீன்

ஒ.எஸ்.பாலாஜி

மீன் கூட பிழைத்திருக்கும் -

தக்க தருணத்தில் வாய் மூட கற்று இருந்தால்!

அன்பு

த. நாகலிங்கம், புதுச்சேரி

அவசர வாழ்க்கையின்

தூரத்து சொந்தம் - அன்பு!

அவள்

தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.

நகம் வெட்டினாள்

வீடு முழுக்க

பிறை நிலாக்கள்!

கை எழுத்து

பைங்கிளி

எழுதுகோல் பிடித்த கைகளில்

எலி பிடித்ததால்....

கடிபட்டது.... தமிழ்!

(அடடே யாழ்ல நம்ம தமிழுக்கும் பொருந்துதே)

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி நீங்கள் இணைக்கும் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது,

வறுமை

Quote: "வறுமை -

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்"

கஞ்சி போட்ட சேட்டை

வயிறு அழ

அயன் பண்ணுகிறான்

ஏழைச் சிறுவன்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கருமி - சாப்பிட்ட கையால் காகத்தை கூட கலைக்கமாட்டார்கள் (பள்ளியில் படித்தது)

பார்ப்பனர்கள் கதவை மூடி

சாப்பிடுவார்கள் நாய் காக்கை

கூட நுழைந்துவிடக் கூடாது

என்பதற்காக எங்கே அவற்றை

துரத்தப் போய் கையில் ஒட்டிய

உணவு தெறித்து அவற்றுக்கு

உணவாகிவிடுமோ என்ற பயத்தில்

  • தொடங்கியவர்

அறிவிலி நீங்கள் இணைக்கும் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது,

வறுமை

Quote: "வறுமை -

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்"

வறுமை பத்தி ,

என்னால சும்மா கவிதை மட்டும் இணைக்க தெரியுது உடையாரண்ணா...

அதை தீர்க்குறது எப்டி என்னு , நிஜவாழ்வில் சிந்திக்கிறவர் நீங்க!

அந்த கவிதைகளைவிட,,, நீங்கதான் ரொம்ப அழகு!!

இரண்டு வகை

ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் !

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்

இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.

-கலீல் ஜிப்ரான்

நல்லதொரு கருத்து இது பலருக்கு பொருந்தும்... நன்றி அறிவிலி இணைப்பிற்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

விதவை

பூ வைத்தாள்

பொட்டு இட்டாள்

கணவன் படத்திற்கு!

த.நாகலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.