Jump to content

Recommended Posts

மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்

கனகி புராணம்

எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார்

பிள்ளையார் காப்பு

1.

சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும்
குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப்
பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே

நாட்டுப் படலம்

2.

தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்

3.

நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி, நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசைய, வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.

சுயம்வரப் படலம்

4.

ஈட்டுந் தனத்தையே விரும்பி,
யிரண்டு தனமுந் தான் கொடுத்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பும்,
முகில்போலளகக் கனக மின்னே!
நாட்டுப் புறத்திலிருப்போரில்,
நல்லவுடையும், பொய்ம் மொழியும்,
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாரும், பெண்ணாரே.

பிரதி பேதம்

ஈட்டுந் தனத்தைத் தான் விரும்பி,
இரண்டு தனமுந் தானீந்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பு
மொழிசே ரழகே கனக மின்னே!
நாட்டுப் புறத்தி லிருப்போரில்
நல்லுடையும், பொய் மொழியுங்
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

5.

காட்டுக் குயிலைக் குடியோட்டிக்,
கனத்த நாவி னெய் தடவி,
மாட்டு மினிய சொல்லுடைய
மானே, கனக மரகதமே!
ஓட்டைக் காதினுடனிருப்போன்
ஒளி சேர் புடவை விற்கின்ற,
நாட்டுக் கோட்டையார் தமக்குள்,
நல்லாண்டப்ப னல்லாளே.

பிரதி பேதம்

காட்டுக் குயிலைக் கடி தோட்டிக்
கனத்த நாவி னெய் தடவி
மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனக மின்னே!
ஓட்டைக் காதி னுடனிருந்
தங்குவந்தே புடவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்ப னிவன் காணே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

6.

சொல்லால் மயக்கி, யாடவர் தஞ்
சூழ்ச்சி யறிந்து, காம நிலை
எல்லார் தமக்கு மூட்டுவிக்கும்
இருள் போலளகக் கனக மின்னே!
பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப்
பூட்டுந் திறலினுடனிருப்போர்
மல்லாகத்தில் வீரரிவர்;
மற்றோர் நவாலி யூராரே.

பிரதி பேதம்

சொல்லால் மயக்கி ஆடவர்தஞ்
சூழ்ச்சி யறிந்து காம நிலை
யில்லாதவர்க்கு மெழுப்புவிக்கு(ம்)
இருள்சே ரளகக் கனக மின்னே!
பொல்லா மனமும் அழுக்காறும்
பொய்யும் புரட்டுமே மலிந்த
மல்லாகத்து வீரரிவர்
மற்றோர் நவாலி யூராரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

7.

நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலும் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனைய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.

பிரதி பேதம்

நத்தே யின்ற முத்தனையாய்
நவிலுந் திருப் பாற் கடல் கடைந்த
மத்தே யனைய ஸ்தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோ டொன்றிங் கிவரெனப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன்
புறத்தோன் தம்பி யுடையானே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

8.

தாமரை முகையுங், கோங்கின தரும்பும்,
தந்தியின் கொம்புடன் சிமிழுங்,
காமரு சூதின் கருவியுங், குடமும்,
காமனார் மகுடமுங் கடிந்தே,
சேமமாய் வென்று, கூவிளம் பழத்தைச்
சேர்ந்திடு தனமுடைக் கனகே!
நாம மிங்கிவர்க்குக் களஞ்சியக்
குருக்கள், நங்கை நீ காணுதியென்றாள்.

பிரதி பேதம்

தாமரை முகையுங் கோங்கின தரும்பும்
தந்தியின் கொம்புடன் சிமிளுங்
காமர் சூதாடு கருவியு மெழில் சேர்
காமனார் மகுடமுந் தடிந்தே
ஏமமாகிய கூவிளங் கனி நிகராய்
எழில் சேர் அழகே கன மின்னே
நாமமிங்கிவர்க்கே களஞ்சியக்
குருக்கள் நங்கை நீ காணுதியென்றாள்.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

9.

அரிபாற் கடலைக் கடைந்த தினத்
ததிலே யெழுந்த மலர்த்திருவும்
உருவுக் கிலை நிகரென்றுரைக்கும்
ஒளி சேரழகே, கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்;
பின்னோன் தம்பி இவனாமே.

பிரதி பேதம்

அரிபாற் கடலைக் கடைந்த தினத்திலே
யெழுந்த மலர்த் திருவும்
உருவுக் கிலை நிகரென்ன வுரைக்கு
மொழிசே சேரழகே கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்
பின்னோன் தம்பி இவனாமே
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

10.

தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்,
மால் பற்றிய நெஞ்சினனாகி,
வந்தான், கனகே, மன்றலுக்கு,
நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றனிவன் காண், நேரிழையே!

பிரதி பேதம்

தாலக் கனி யொன்றினுக் காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்
மால்பற்றிய நெஞ்சினனாகி வந்தான்
கனகே நின் மன்றலுக்கு
நீலக் கருங் கார் மேக நிற
நியூற்ற னிவன் காண், நேரிழையே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

11

ஊரார் சுணங்கு தோற்றாமல்
உயர் சாந்தணிந்து, வடம் பூட்டி,
வாரான் மறைக்குந் தனக் கனகே!
வரி வண்டூத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவை வளர்
நெய்த நிலத்தான், வங்க நிறை
ஊராத்துறைக்கு மணிய மிவன்,
உடையா ரருணாசலத்தின் மகன்.

பிரதி பேதம்

ஊராற் சுணங்கு தொடராம லுயர்
சாந்தணிந்து வடம் பூட்டி
வாரால் மறைக்குந் ஸ்தனக் கனகே!
வரிவண் குமுத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
நெய்த நிலத்துக் கிறையாகும்
ஊராத்துறையின் மணியம் மற்றிவன்
காணென்ற னொண்ணுதலே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

12

தொட்டுப் பிடிக்கத் தனமேனும்
தோளே யெனினுந் தான் கொடுக்கும்
மட்டுப் புரண்ட குழலாளே!
மாரன் வில்லைக் குனிப்பவளே!
எட்டுத் திக்கு முழு தாளு
மிதயத்துடனே யிங்கிருப்போன்
வட்டுக்கோட்டை நெற் கணக்கில்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.

பிரதி பேதம்

தொட்டுப் பிடிக்கத் தனத்தோடு
தோளை யீகுந் திறமுடைய
மட்டுக் கடங்காத் திறம் படைத்த
மானே தேனே கனக மின்னே!
பட்டுப் புடவை தனிற் கொணர்ந்து
பரிவாகப் பணத்தை யீகின்ற
வட்டுக்கோட்டை நெற் கணக்கன்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

13

பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே.

பிரதி பேதம்

பூப் பாயலி லாடவரைப் பொலிவோ
டிருத்திப் பொருள் கவரக்
காப்பாய கச்சுதனை நீக்குக்
கன்றே கனக மின்னே!
பாப்பார் மிகவுந் தமைச் சூழப்
பங்கேருகம் போல் வீற்றிருக்கும்
கோப்பாய் மணிய மிவர் தம்மைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(
.
சி
.
கந்தையாபிள்ளை
பதிப்பு
)

14

மறுவற் றிலங்கு மதிமுகத்தில்
வாள்சேர்ந் தனைய வுண்கண்ணாய்
நிறையச் சொருகும் பூங்குழற்கு
நிகர்வே றில்லாக் கனகமின்னே!
அறிவுக் கினியான் அவனிதனில்
யார்க்கு முதவி செயவிரும்புங்
கறுவற்றம்பி யெனும் பெயரோன்
கண்ணன் றனக்குச் சரிவந்தோன்.

15

பொன்னைப் பொருவு மருமத்திற்
புடைகொண் டெழுந்த வனமுலையாய்,
மின்னைச் சிரிக்கு நுண்ணிடையாய்,
வேய்த்தோட் கனகே யிவணிருப்போன்
தன்னைப் போல வேறொருவர்
தரணி தலத்தி லுள்ளாரோ?
வென்னப் பேசும் நன்னியிவன்
இடறுப் பூச்சு மெய்யானே.

16

மானினைக் கயலை வனத்தினிற் றுரத்தி,
மறலிக்குக் கொலைத் தொழில் காட்டிப்
பானலை யோட்டி வடுவினை வாட்டிப்
பருத்த செவ்வேலையும் பழித்துக்
கூனல்வாள் நஞ்சி னமுதினோடுறவு
கொண்டிடும் விழியுடைக் கனகே!
தேனின நீங்கா மலரணி புயத்துச்
செல்வநாயக மிவன் தேவே.

17

மானைக் கயலை வேல் வாளை
மறுநீர்க் கடலைக் குவளையை நற்
கானிற் கமலந் தனைவெல்லும்
கண்ணாய் கனகே யிவணிருப்போன்,
ஞானக் குணமும் நல்லறிவும்
நலஞ்சேர் புகழு மிகவுடையோன்,
ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன்கா ணென்பாரே.

18

கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.

19

வண்டார் மாலைக் குழலாளே!
மதிசேர்ந்தனைய முகத்தாளே!
கண்டார் வணங்குங் கண்ணாளே!
கனகென் றுரைக்குங் காரிகையே!
உண்டார் போக மிவனைப்போ
லுளரோ விந்த வூர்தனிலே,
தண்டார் புனையும் பண்டார
மென்றா ரந்தத் தாதியரே.

20

செப்பைப் பழித்துக் கலசத்தைச்
சிரித்துத் தெங்கி னிளநீரை
யொப்பப் புடைத்த தனக் கனகே!
யுன்னைப் புணரு மவாவுடையோன்
எப்போதெனினு முனதேவ
லெங்கே யென்று திரியுமிவன்
சுப்பிரமணியன் பெற்றெடுத்த
சூன னிவன்காண் சுரிகுழலே.

21

மானினைப் பழித்த கண்ணும்
வடிவினுக் குவமை யில்லாத்
தேனினு மினிய செஞ்சொற் றெரி
வையே கனகே கேண்மோ
ஊனுணும் பரிதி வேல் வாளொளி
பெற வீங்கிருப்போன்
தானை சூழுடுவில் வாழும் தன் கை
யொன்றில்லா வேந்தே.

22

கனத்துப் புடைத்துப் பருத்து விம்முங்
கதிர்ப் பூண் முலையாய், கனக மின்னே!
மனத்துக் கிசைந்த மணவாள
னிவன்றா(ன்) இந்த மகிதலத்தில்
தனத்துக் கிவனே; சரச மொழி
தனக்குமிவனே; தான் கொள்ளுஞ்
சினத்துக் கிவனே! திருமலைச்சின்
னையனிவன் காண் சேயிழையே.

வெட்டை காண் படலம்

23

வெட்டை யென்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி யாடவர்
பொட்டுக் கட்டிய பூவையினா லென்று
முட்டுப்பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

24

செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

25

மேகங்கள் யாவு முயர் விண்ணீங்கி வேசையர்தந்
தேகங்களில் வாசஞ் செய்கையான் - மாகமிசை
யாசைக்குங் கார்காணோ மவ்வேசையார் கொடுப்பர்
காசைக் கொடுப்பார்க்குக் காண்.
Link to comment
Share on other sites

கீழ்கண்ட பதிவை படித்த போது கனகி புராணம் குறித்த அறிமுகம் கிடைத்தது.

யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிகிறதா ?? - தேவகெளரி

6609_119568311413_722131413_2940858_4355743_n.jpg

யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகிறது!

தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம்!

இத்தகைய தலைப்புகளில் பல்லேறு கட்டுரைகளை இணையங்களில் காணமுடிகிறது.அதை பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் மீள் பிரசுரம் செய்தும் வருகின்றன.யாழ்ப்பாணம் பற்றிய இன்றைய முக்கிய செய்தியாக பாரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

பலரும் படித்து கேலியும் கிண்டலுமாக அபிப்பிராயம் முன்வைப்பதும் நடக்கிறது.போரினால் அடைபட்டுக்கிடந்தவர்களுக்கு சுதந்திரம் வந்ததும் இப்படி தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.இதில் முக்கியமாக எடுத்தாளப்பட்டவை இளைஞர்களின் காதல் விவகாரம்ääகருக்கலைப்புääபெண்களின் ஆடைகள்ääஇளைஞர்களின் களியாட்டங்கள் என்பனவே.

இதெல்லாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அதனால் இது ஒன்றும் புதிதில்லை.யாழ்ப்பாணம் ஒன்றும் புனித பூமியில்லை என்று சொல்வோரின் கருத்துக்களையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கிறோம். ’கனகி புராணம்’; (மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்) கலாசாரமும் யாழ்ப்பாணத்திற்கே உரியது.

அதேநேரம் இன்றைய நவீன ஊடகங்களின் வருகையும் இதை பூதாகரமாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். யாழ்ப்பாண கலாசாரம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை தெரியவில்லை. போரின் கோரக்கைகள் சிதைத்து தள்ளிய மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணமும் வன்னியும் உங்கள் ‘யாழ்ப்பாண கலாசாரத்துக்குள் அடங்கியிருக்கிறது.

ஒரு நீண்ட யுத்தத்திற்கு பின்னால் உருக்குலைந்துள்ள சமூகத்தை எப்படி நோக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியுடன் நாம் நடக்கிறோமா?ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் இத்தகைய கட்டுரைகளுக்க பின்னால் எமக்கு இருக்கக்கூடிய நோக்கு என்ன?இந்த விடயங்களை சிந்திக்காமல் யார்மீது வன்மம் தீர்க இத்தகைய கட்டுரைகள்?

காதலர்களின் சல்லாபம்ääஇளம் பெண்களின் கருக்கலைப்புääகுடி கும்மாளம்ääபெண்களின் ஆடை இவைகள் பற்றித்தான் அதிகமாகப் பேசப்படுகின்றன.

காதலர்களின் சல்லாபமும் இளம்பெண்களின் கருக்கலைப்புபற்றியும் எழுதும் போது பெருமளவில் பெண்கள் மீதான கோபமும் கீழ்தரமான பார்வையும்தான் கட்டுரைகளில் விஞ்சிநிற்கிறது.ஆண் பெண் வீதியில்நின்று கதைத்தாலே கலாசார சீரழிவு என்று பேசிய சமூகம் பின்னாளில் ஆணும் பெண்ணும் பொதுதளத்தில் வேலை செய்ய இறங்கியபோது வாய் மூடி மௌனமானது மட்டுமல்லாமல் ஆண் பெண் சேர்ந்து பேச சமூகத்தில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என ஒத்துக்கொண்டது.இன்று ஆண் பெண்ணை ஒரு இடத்தில் பார்த்தால் ஐயோ..ஐயோ….கலாசாரம் சீரழியுது..என்ற கூச்சல்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பெண்களை அங்கு சுதந்திரம் கிடைத்தபின் ‘சரி இனி நீங்கள் உங்கள் வீடுகளில் போய் வேலைபாருங்கள்’ என்றனராம்.பொது வேலைக்காக தங்கள் வாழ்க்கையை 10 ää20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக அர்ப்பணித்த அவர்கள் பொது தளத்தில் ஊடாடிய அவர்களுக்கு அந்த பொது தளத்தில் வாழ்வாற்கான அனுமதி மறுக்கப்பட்டது. வீடுகளில் குடும்ப அலகையும் அமைக்க முடியாத அந்த பெண்களுக் பொது தளத்தில் வேலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தினுடையது.இந்த அனுபவம எங்களுக்கும் இருத்ககிறது.சிறைகளிலும் விடுதலையானோரும் அங்கஙகளை இழந்தோரும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடி கையறு நிலையில் நிற்கின்றனர்.அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை எப்படி நாம் முன்வைக்க போகிறோம்?

இவர்கள் ஒரு புறம் இருக்க இந்த போருக்குள் பிறந்து சிறுபராயத்தை தெலைத்து மொட்டவிழும் காலத்தினுள் இருக்கும் நம் இளைஞர் கூட்டம் இப்போது கொஞ்சம் பயமின்றி நடமாட தலைப்பட்டுள்ளனர்.

அவர்களின் அந்த மனத்தளவிலான சுதந்திரத்தில் முக்கியமாக இருப்பது வீட்டுக்கு வெளியில் நண்பர்களுடன் அளவளாவுதல் இதில் காதல் ஒன்றும் புதிதல்ல.தனிநபர் உணர்வுகளை சமூகத்தில் வெளிப்படுத்துவது பற்றிய அறிதலை முழுமையாக இழந்தவர்கள் அவர்கள்.சமூகத்தின் ஒரு அங்கமாக தம்மை நினைப்பதை விட தனிநபர்களாகவே தம்மை காத்துக்கொண்டவர்கள்.அவர்களின் செயற்பாடுகள் மிகச்சுதந்திரமானதாக இரு;க்கும்.ஆனால் காலம் இடம் அறிந்த இங்கிதங்களை அவர்கள் முற்றாக இழந்தவர்களல்ல.கோயில்களை அசிக்கப்படுத்தும் காம ஜோடிகள் என்ற ஒரு கட்டுரையும் பார்த்தேன்.அது புதுமைப்பித்தனின் பொன்னகரமாக கூட இருக்கலாம்.

புhலியல் தொழில் அதிகரித்திருப்பதாகவும் சில கட்டுரைகள் கூறின.இதை எல்லாவற்றையும் ஒட்டுமொத்த யுhழ்ப்பாண கலாசார சீரழிவுக்கான அசிங்கங்களாக பார்க்காமல் இந்த நிலைகளுக்கான பின்புலம் பற்றிய அறிதலில் இருந்து புதிய நிலைகளை எதிர்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே தமிழ் சமூகத்தில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை விகிதாசாரப்படி மிக அதிகமாக உள்ள நிலையை ஆய்வொன்றின் மூலம் முன்வைத்திருந்தேன்இஅதில் குறிப்பிட்டது போல் தமிழ் சமூகத்தில் கலாசார மீள் கட்டுமானம் அவசியம் என்பதை மீண்டும் முன்வைக் விரும்புகிறேன்.2000 ஆண்டு சுமைகளுடன் இன்னும் ஓட முனைந்தால் அழிவுதான் மிஞ்சும்.மீட்டெடுத்தல் என்பது கூட கலாசாரத்திற்கு பொருந்தாது.காலசாரம் என்பது - அதன் எல்லா கூறுகளும ;- ஒடாத குட்டை நீரல்ல.

எம்.எஸ்.ரி.கௌரி

(24.07.2011 அன்று தினக்குரலில் வெளியானது .)

http://www.penniyam....og-post_11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் நன்றி பகிர்வுக்கு, இன்றுதான் தெரியும் இப்படி கனகி புராணமே இருக்கென்று.கண்ணகி புராணங்களை சொல்லியே கனகி புராணத்தை மறைத்துவிட்டார்கள்

கம்பனின் இராமாயனம் என்றால் எல்லோரும் ஆகா என்ன ஒரு கவி.............நட்டுவச்சுப்பையனார் பாடினா ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை. கலாச்சாரக் காவலர்கள் கட்டாயம் கனகி புராணத்தையும் படிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.facebook.com/ilanchellian சுற்றுல்லா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள் அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள் இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience) இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் இவ மாற்றங்களை செய்துள்ளார்கள் மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலைஅமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள் மறுபுறம்மேற்படி மாற்றங்கள்காரணமாகவெளிநாட்டு சுற்றலாபயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது இதனால் 4 பேர்குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது பொருளாதார சீரழிவிற்க்கு பிறகுஇலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம் மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார் ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமல் ஸ்ரீ பால டி சில்வா வை காப்பாற்றினார் டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொது அமைகியாக இருந்தார் தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார் இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது . இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள் நன்றி-இனமொன்றின் குரல் 
    • "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"     "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"   "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"   "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"   "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண்டு களித்து அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"   "கண்மணியே எம் குடும்ப தலைவியே கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"   "கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"   "அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல் அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல் அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல் அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"   "ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம் ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • போன் வெப்பமானியிலா? அல்லது நிஜ வெப்பமானியிலா?
    • இது எத்தனையாவது தடவை அபிவிருத்தி....கப்பல் வருகுது..வருகுது  அதையும் காணாவில்லை..பலலிக்கு ஓடுற பிளேனோ..பொலிகண்டி கந்தசாமி கோவில்ல வாங்கின விளையாட்டுப் பிளேன் மாதிரிக்கிடக்கு...அபிவிருத்திக்காசு..விகாரை கட்டத்தான்..போகுதுபோலை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.