Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன

14 அக்டோபர் 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:-

யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன.

மண்டைதீவு காரைநகர் மற்றும் அராலி பகுதிகளை உள்ளடக்கி இந்த இறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.கடற்கரைகளை உள்ளடக்கியே இவ்விறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அரச காணிகளென அதிகாரிகள் கூறிவருகின்றனர். அத்துடன் நிலத்தடி நீர் உவர் நீர் ஆகிவருவதை தடுக்கும் நடவடிக்கையாக உருவாக்கப்பட்டு வரும் மண் அணை தடுப்பே இறால் பண்ணைகள் அமையும் இடமெனவும் அவர்கள் மேலும் கூறிவருகின்றனர்.

எனினும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவே இறால் பண்ணைகள் அமைக்கப்படுவதான செய்திகளை உள்ளுர் வாசிகள் நம்புவதற்கு தயாராக இல்லை. இப்பண்ணைகள் தெற்கை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படலாமென மீனவ அமைப்புக்களும் சந்தேகம் கொண்டுள்ளன. ஏற்கனவே இறால் மற்றும் சங்கு பிடிக்கவென ஆயிரக்கணக்கான தெற்கு சிங்கள மீனவர்கள் வடக்கிற்கு படையெடுத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் இவ்விறால் பண்ணையும் தெற்கு சிங்கள மீனவர்களுக்கான பண்ணைகளாகலாமென உள்ளுர் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68619/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தன்ரை ஊரில உள்ள, சங்கைப் பிடிக்க வேண்டியது தானே....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் இயற்கையாக வரும் மழைநீர் ஊருக்குள் நிற்கும்போது, றால்கள் மிகப் பெரிதாக வளரும்! ஆறு அங்குலம் வரை வளர்வதைக் கண்டிருக்கின்றேன்! இந்த இடமும், இப்போது வேலி போட்டு மூடப் பட்டுள்ளது! பொதுமக்கள் அனுமதிக்கப் படுவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விதத்திலும் சிங்களவரை குடி ஏற்று வதற்கான திட்டங்களையே சிங்கள அரசு நடைமுறை படுத்துகின்றது எல்லா விதத்திலும் தமிழர்களே பாதிக்கப்படபோகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் தமிழ்த்தேசம் சிங்களத்திடம் தோற்றுவிட்டது. இப்போது தமிழர் தேசம் உற்பட நாடு முழுவதுமே அவனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அவன் எதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை. 1505 இல் இருந்து போர்த்துக்கேய ஆக்கிரமிப்பிலும் அதைத் தொடர்ந்து ஒல்லாந்து, ஆங்கீலேய ஆக்கிரமிப்பிலும் வாழும்போதுமட்டும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?? அவர்கள் செய்வதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததைத்தவிர?? இப்போதும் அதேதான். எங்களால் எங்கள் நாடு மீண்டும் கைப்பற்றப்படும்வரை நாம் அடிமைகள்தான். ஆனால் நாடு கைப்பற்றப்படும் தேவை இருக்கிறதா என்பதை எம்மை நாமே ஒருமுறை கேட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுவும் ஒருவகை நவீனத்துவ ஆக்கிரமிப்பே எங்களுக்கு இப்போது இதை தடுத்து நிறுத்துவதற்கு பலமான கட்டமைப்பு எம்மிடம் இல்லாதது வருந்துதர்க்குரியது

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகை நவீனத்துவ ஆக்கிரமிப்பே எங்களுக்கு இப்போது இதை தடுத்து நிறுத்துவதற்கு பலமான கட்டமைப்பு எம்மிடம் இல்லாதது வருந்துதர்க்குரியது

மகாத்மா காந்தியின் கருத்துக்களுடன் எனக்கு பூரண உடன்பாடு இல்லாவிடினும், அவர் தனிமனிதனாக ஆரம்பித்த போராட்டம் தான், இந்திய விடுதலைக்கு வழி சமைத்தது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... ஆர், மகாத்மா காந்தியை நினைக்குறாங்கள்.

சோனியா காந்திக்கு, கான்சர் வந்துட்டுது எண்டு..... அழுறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.