Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8a4f92b7-d6f3-4aac-9b7d-8a0251a8e582_S_secvpf.gif

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது.

"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார்.

கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக் கூடாது" என்று கூறினார்.

ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ் நாடு" பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார். தமிழரசு கழகத்தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:

"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா? முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது.

அடக்கிக்கொண்டேன். "தமிழ் நாடு" என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."

இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:

"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ் நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில் நாட்" (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.

தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.

அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

பின் அண்ணா எழுந்து, "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்"

என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.

எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.

சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.

அது ஒன்னுமில்லீங்க...! பரண்மீதிருந்த பழைய பஞ்சாங்கத்தை தேடியபோது இந்த செய்தி கெடைச்சது..

தூசி தட்டி...இங்கே போட்டன். :icon_idea:

http://www.maalaimalar.com/2011/06/13124808/name-was-changed-tamilnadu-ord.html

தலைப்பைப் பார்த்து தமிழ்நாட்டுப் பெயரை மாற்றி விட்டார்களோ என்று பயந்து போனேன்.

வாசிக்கத்தான் விளங்குது 67 இல் இளைஞராக இருந்த ராஜவன்னியன் அங்கிள் மலரும் நினைவுகளை மீட்டுள்ளார் என்று. :icon_idea:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான்

விசு அண்ணை! உங்களுக்கு நினைவுகள் மலருகிறதா இல்லை... நீங்களும் சிறிது அசந்து போனீர்களா? ஏனெனில் 'இந்த சட்டமன்ற தொடரின்போது நான் இப்பூவுலகில் பிறக்கவே இல்லை' :rolleyes::D:lol:அப்படீன்னு சொல்ல ஆசைதான்!

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு, ஏதாவது இங்கிலிஷ் பெயர் வைத்து விட்டாங்களோ... என்று பயந்து போனன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிந்திருக்க வேண்டிய.. இப்படியான வரலாறுகளை நிஜத்தில் காண முடியாத எம் போன்றவர்களுக்கு.. இந்த வரலாற்றுப் பதிவு பல விடயங்களை தந்து செல்கிறது. நன்றி ராஜவன்னியன்..! உங்கள் பணி தொடர வேண்டும்.

இந்தியாவில்.. காங்கிரஸ் கட்சி எப்போதுமே தமிழர் விரோதக் கொள்கையோடு இருந்திருப்பதை இதிலும் காண முடிகிறது.

ஈழத்தில் விடுதலைப்புலிகளின்.. கலை பண்பாட்டுக்கழகம்... மற்றும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.. தொல்பியல் ஆய்வகம்.. போன்றவை நிறைய பழைய விடயங்களை சேர்த்து வைத்திருந்தார்கள். ஒரு முறை யாழ் இந்துக்கல்லூரியில் கண்காட்சி ஒன்றில்.. சுமார் 60 வருடங்களுக்கு முந்திய பத்திரிகைகளைக் கூட சேர்த்து வைச்சிருக்க கண்டு அசந்து போனேன். நிறைய வாசித்து அறிந்தும் கொண்டேன்.

தமிழகம் பற்றிய இப்படியான பதிவுகள்.. அதன் இருப்புப் பற்றிய ஆய்தலுக்கு நன்கு உதவும். எமது இனத்தின் தேசிய இனக் கொள்கைக் கோரிக்கைக்கும் வலுச் சேர்க்கும்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.