Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் என்றால் ஒரு நல்ல திமிர் இருக்க வேண்டும்" - ஆணித்தரமாக கூறிய 'ஏழாம் அறிவு'

Featured Replies

சற்று முன் ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு வந்தேன்.. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது..

சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான்

ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்

சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்

7 ஆம் அறிவை நாம் படமாக எடுத்து கொள்ள முடியாது, அவர்களின் வியாபாரத்தையும் தாண்டி நமக்கு ஒரு பாடமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

கதையின் கரு:

"தமிழர்களிடம் இருந்து கலையை கற்று தமிழர்களுகே அழிவு ஏற்படுத்த சீனர்கள் முயல்வதையும், தமிழனிடம் இருந்து அழிந்த அந்த கலை மூலம் சீனர்களின் திட்டங்களை முறியடிப்பது"

என ஒரு வரியில் படம் முடிகிறது

கவனிக்க வேண்டியவை:

1.இதில் ஏழாம் அறிவாக தமிழர்கள் கண்டறிந்த கலைகள் காட்டப்பட்டுள்ளது

2.அறிவியல் பிறப்பதற்கு முன்னரே தமிழன் "இயற்பியல், மருத்துவம், வான்வெளி, தற்காப்பு கலை" உள்ளிட்ட பல கலைகளை இப்போது இருப்பதை விட சிறப்பாக கூறி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.. உதானரத்திர்க்கு DNA எனப்படும் மருத்துவ அறிவியலை ஓலை சுவடிகள் முன்னரே சாதாரணமாக கூறிவிட்டனர் என கூறுகிறது

3.உலகிற்கு வீரத்தையும் எப்படி வாழ வேண்டும் என கூறியவன் தமிழன் என ஆதாரத்துடன் கூறப்பட்டு உள்ளது

4.காற்றை கட்டு படுத்தும் கலை, கண்கள் மூலம் மற்றவர்களின் மூளையை கட்டுபடுத்தும் கலைகள் இருக்கிறது என ஆதாரத்துடன் நிரூபித்தாலும், சீன படங்களிலும் இப்படி காட்டுவார்களே என பார்க்கும் போது நம்ப தோன்றுகிறது

நாம் ஏன் நாமாக இல்லை என கூறும் படம்:

1.பல கலைகளை அறிந்த மற்ற நாட்டினர் தமிழர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றனர்.. அவர்கள் தமிழன் என கூறுவதை பெருமையாக கொள்கின்றனர்.. ஆனால் இங்குள்ள தமிழனோ தமிழன் என்று கூற வெக்க படுகிறான் என கூறபடுகிறது

2.நம்மிடம் இருக்கும் திறமைகளை வைத்து நாம் தான் மற்றவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும், ஆனால் நாம் யாரென்று நமக்கு தெரியாததால் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது

3.வீரத்திற்கு பெயர் போன நாம் நம் பெருமை தெரியாமல் நாகரீக கோமாளிகளாக வெளி வேடம் போடுவதாகவும், அதனால் முன் பக்கம் காயம் வாங்கிய நாம் புறமுதுகிட்டு சில நேரங்களில் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது

4."நம் வரலாறு நமக்கு தெரியாததால் மற்றவன் தொழில் நுட்பத்தை பார்த்து வியப்படைகிறோம்" என கூறப்பட்டுள்ளது

5.ஈழம் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது

6.தமிழரின் வரலாறை படிக்காமல் விட்டதுதான் நமது பெரிய தவறு, வரலாற்றை படித்தால் தமிழன் என்ற திமிர் வரும் என கூறப்பட்டுள்ளது

7.நம் திறமைகளை மற்றவன் மதித்து பயன்படுத்தி நம்மையே மிதிக்கிறான் , நாம் மதிக்க மறந்து விட்டோம் என கூறும் படம்

8."அழிந்த தமிழர்களுக்கும், அழிக்க முடியாத தமிழுக்கும் சமர்ப்பணம்" என படம் முடிகிறது

படத்தில் நாகரீக கோமாளிகளுக்கு பாடம் காட்டிய "A.R.முருகதாசுக்கு" நன்றிகள் கோடி

VIA FB..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா பகிர்வுக்கு, படம் இன்னும் பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்க்கதியாகி விட்டோமே என கலங்கிய எமக்கு.......கலங்கரைவிளக்காக ஒருசில திரைப்படங்கள் வெளிவருவது.... ஒருவித புத்துணர்ச்சியே !!!!!வியாபரத்திலும் விடயங்களை முன்னிலைப்படுத்தும் கலைஞர்களுக்கு.....என் முழந்தாழிட்ட வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தின் மூலமாவது, இந்திய, தமிழக ஊடங்கள் தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

விக்கிபிடியாவில் மாற்றம் ஏன் ? போதிதர்மன் பற்றிய பக்கத்தில் ஆங்கில பெயருக்கு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் தமிழில் போதிதர்மன் என்று இருந்தது சில நாட்களுக்கு முன் , இதன் அர்த்தம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவரின் தாய்மொழி என்பது அர்த்தம் , தற்போது அது நீக்கப்பட்டுள்ளது , யார் காரணம் என்று தெரியவில்லை நம்மவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்

ஆனால் He was the third son of a Tamil king of the Pallava Dynasty.[1][2] According to Chinese legend, இது மாறவில்லை அது மாறாமல் இருந்தால் சரி

Edited by hari

எனக்கு ஒரு சந்தேகம் யாராவது தீர்த்துவைப்பீர்களா? (ஆயிரம் பொற்காசுகள் தரப்படும்)

இப்படத்தின் கடைசியில் தமிழர் வரலாற்றை வேண்டுமென்றே நாட்டை ஆண்டவர்கள் மறைத்ததாக கூறப்பட்டது , எனது சந்தேகம் போதிதர்மர் தமிழர் என்ற வரலாற்றை ஹிந்தியிலும் , தெலுங்கிலும் இயக்குனர் மறைக்காமல் சொன்னாரா ? யாராவது பார்த்திருந்தால் சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியிலை தமிழனின் வீரத்தையும் வரலாற்றையும் சினிமாவிலை தேடவேண்டியதாய் போயிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியிலை தமிழனின் வீரத்தையும் வரலாற்றையும் சினிமாவிலை தேடவேண்டியதாய் போயிட்டுது

இதுதான் தமிழனின் தலைவிதியா ?

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன இருவரும் புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள் ??male16-male-mad-angry-smiley-emoticon-000099-large.gif

  • கருத்துக்கள உறவுகள்

விணாவிற்க்கு ஒரு பச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.