Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கை விட்டாரா ராகுல் காந்தி - கொதிக்கும் கதர்ச்சட்டைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10.jpg 06.11.11 மற்றவை திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறிப் பயணம் செய்து கொண்டு வீராப்புப் பேசி வந்த தமிழக கதர்த் தலைவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். தோல்வியால் துவண்டுபோன அவர்களின் கோபம் தற்போது ராகுல்காந்தி மீது திரும்பியிருக்கிறது. Ôதமிழகத்தில் கட்சியை வளர்க்க ராகுல் எந்த முயற்சியும் செய்யவில்லை' என்று கோபமாக குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் உண்மையான பலத்தை உணர்த்தியிருக்கிறது. 'அ.தி.மு.க., தி.மு.க.விற்கு அடுத்த மூன்றாவது கட்சி நாங்கள்தான்' என்று பில்டப் செய்து வந்த விஜயகாந்த், கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கிறார். தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல தேய்ந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் அவர்களுக்கென்று வாக்குவங்கி உள்ள வட மாவட்டங்களிலேயே மக்களால் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த ம.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் பரவலாக வாக்குகளை வாங்கி இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களால் கேலிக்கும் கிண்ட லுக்கும் ஆளாகியிருந்த பாரதிய ஜனதா கட்சி 'பரவாயில்லை' என்று சொல்கிற அளவுக்கு வாக்குகள் வாங்கியிருக்கிறது.

மொத்தத்தில் அ.தி.மு.க., தி.மு.க. தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தமிழகத்தில் தனியாக வாக்குவங்கி இல்லை என்பதை உள்ளாட்சித் தேர்தல் உணர்த்தி விட்டது. இந்த உ ண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

‘‘மற்ற கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் முடிந்தவரை தேர்தலைச் சந்திக்க வேட்பாளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்தன. காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைமை மட்டும் தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. காங்கிரஸ் கட்சியை இந்தியா முழுவதும் தூக்கி நிறுத்துவதுதான் தன் பணி என்று பந்தா காட் டிய ராகுல்காந்தி சிறு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு எங்களை ரொம்பவே சோர்வடைய வைத்துவிட்டது.’‘ என்று வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்.

“இந்தியாவை அதிக வருடங்கள் ஆண்ட கட்சியும், இந்தியாவின் பணக்கார கட்சியும் நாங்கள்தான். சுவிஸ் வங்கியில் எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் அதிக அள வில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்ட கஷ்டத்தைச் சொல்லி மாளாது. நாடாளுமன்றத் தேர்தலின் போது எம்.பி. வேட்பாளர்களுக்கு 1 கோடியும், சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கட்சி கொடுத்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை கண்டுகொள்ளவே இல்லை.

பத்து மேயர் வேட்பாளர்களில் நான்குபேர் வாசன் ஆதரவாளர்கள். அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூட அவர் வரவில்லை. கேட்டால் தமிழ்நாட்டில் தன் னிடம்தான் 70 சதவிகித காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதை வைத்து அவர் கட்சியில் என்ன சாதித்தார் என்றுதான் தெரியவில்லை.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது தமிழ்நாடு பக்கமே வரவில்லை.தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடுவது போல பேசி வரு கிறார் இளங்கோவன். ஆனால், அவர் இருக்கும் ஈரோடு மாநகராட்சியில் இரண்டு வார்டுகளில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. தங்கபாலு வேறு வழியில்லாமல் பெயருக்கு ஒரு சில இடங்களில் பிரசாரம் செய்தார். தூத்துக்குடி வந்த அவர் தங்கியிருந்த ஓட்டல் வாசலிலேயே பிரசாரம் செய்துவிட்டு சென்னைக்குப் போய்விட்டார். இதுதான் தமிழகத் தலைவர்களின் லட்சணம்.

‘தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்துவேன்’ என்று சொன்ன ராகுல்காந்தி ஏன் உள்ளாட்சித் தேர்தலை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை. ‘தமிழ்நாட்டில் 14 லட்சம் பேர் காங்கிரஸில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். நமது ஒரே குறி உள்ளாட்சித் தேர்தல்தான். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்தால் தானாக காங்கிரஸ் ஆட்சி மலரும்’ என்றெல்லாம் ராகுல் சொன்னதை நாங்கள் நம்பினோம்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட அவருக்கு இல்லை. அதுபற்றி இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் கூட பேசவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழகத்தில் 10 நாள் தங்கியிருந்து பிரசாரம் செய்திருக்கலாம். அவர் அப்படிச் செய்திருந்தால் தமிழகத் தலைவர்கள் அனைவரும் பம்பரமாகச் சுழன்றி ருப்பார்கள். பணமும் தாராளமாக வந்து சேர்ந்திருக்கும். பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும், ஓரளவு ஓட்டுக்கள் வாங்கி மானத்தையாவது காப்பாற்றி இருக்கலாம்’’ என்று புலம்பித் தீர்த்தார்கள்.

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமியிடம் நிர்வாகிகளின் இந்தப் புலம்பல் பற்றி பேசினோம். “காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டதற்கு எங்கள் கட்சித் தலைவர்களின் பாராமுகம் முக்கிய காரணம். கொடி வாங்கக் கூட கட்சித் தலைமையில் இருந்து பணம் வரவி ல்லை. எந்த மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவில்லை. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள் நடக்கவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள் வருத்தப்படுவது போல ராகுல்காந்தியின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. அவரை நாங்கள் மலைபோல நம்பியிருந்தோம். கிட்டத்தட்ட அவர் எங்களை ஏமாற்றி விட்டார்’’ என்று தன் பங்குக்கு வருத்தத்தைக் கொட்டினார்.

“தமிழ்நாட்டில் பதினைந்து சதவிகிதமாக இருந்த எங்கள் வாக்குவங்கி இப்போது ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போய்விட்டது. தனியாக நின்றாலும் வெற்றிபெறுகிற அள வுக்கு செல்வாக்குள்ள யாருக்கும் கட்சித் தலைமை சீட் கொடுக்கவில்லை. சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்ட பல காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றி ருக்கிறார்கள்.

வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்திற் கான அங்கீகார கடிதத்தை அந்தந்த மாவட்டத் தலைவர்களிடம்தான் வழங்க வேண்டும். ஆனால் தங்கபாலு, அவருக்கு வேண் டியவர்களிடமே சின்னம் கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டார். அவர்களில் யாராலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாது. வெற்றி பெறுகிற பலருக்கு சின்னம் கொடுக்கவும் மறுத்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தோற்றுப் போனதற்கு இதேமாதிரி ஆயிரம் காரணம் இருக்கிறது. இனிமேல் யாரை குறை சொல்லி எ ன்ன நடக்கப் போகிறது?" என்று வருத்தப்பட்டார் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலாளர் சுதாகர்.

படங்கள் : மாரிராஜா

எஸ்.அண்ணாதுரை

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உருப்படியாக ஒன்றுமே.... செய்யாத, மேலும் அவமானங்களை தந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களிடம் தமக்கு வாக்களிக்கும் படி எந்த மூஞ்சையை வைத்து கேட்க முடியும். பேசாமல் தமிழக காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு, உருப்படியான கட்சியில் போய்ச் சேர்வதே.... காங்கிரசில் உள்ள தொண்டர்களுக்கு நல்லது. இப்போது தமிழக காங்கிரசுக்கு தலைமை தாங்கும் தலைவன் எல்லாம் அரை லூசுகள்.

Edited by தமிழ் சிறி

இந்திரா- இராஜீவ்-சோனியா-இராகுல் குடும்பம் எடுத்த குத்தகை அரசியல் ஒருநாள் காலவதியாகத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாட்சித் தேர்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட அவருக்கு இல்லை. அதுபற்றி இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் கூட பேசவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழகத்தில் 10 நாள் தங்கியிருந்து பிரசாரம் செய்திருக்கலாம். அவர் அப்படிச் செய்திருந்தால் தமிழகத் தலைவர்கள் அனைவரும் பம்பரமாகச் சுழன்றி ருப்பார்கள். பணமும் தாராளமாக வந்து சேர்ந்திருக்கும். பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும், ஓரளவு ஓட்டுக்கள் வாங்கி மானத்தையாவது காப்பாற்றி இருக்கலாம்’’ என்று புலம்பித் தீர்த்தார்கள்.

வேலை தெரியாத வே.. கட்டிலில் இடம் போதாதாது என்றாளாம் .. ஊரில் 24 ஓட்டு வாங்கினவன் எல்லாம் வாக்காளித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறானாம்.. ஒரே டமாஸ்தான் :icon_mrgreen: :icon_mrgreen:

வேலை தெரியாத வே.. கட்டிலில் இடம் போதாதாது என்றாளாம் .. ஊரில் 24 ஓட்டு வாங்கினவன் எல்லாம் வாக்காளித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறானாம்.. ஒரே டமாஸ்தான் :icon_mrgreen: :icon_mrgreen:

நியைய சம்பாத்தித்து அளவுக்கதிகம் சப்பிட்டால் தொழில் ஆர்வம் இருக்காது. கொஞ்சம் டயரிங் போனா பழைய டெக்னிக் எல்லாம் தானே வந்திடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.