Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ணுள் ஏன் இந்த மாற்றம்

Featured Replies

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே. உங்களுக்காக ஒரு வரி எழுத முடியாமல் சோகத்தின் உச்சத்தால் அலைபாயும் என் மனதை ஒரு நிலையில் வைத்திருக்க என்னால் முடியவில்லை. எதற்காக உங்களால் என்னுள் இந்த மாற்றம்?

நீங்கள் தாயக கனவுடன் தலைவன் வழியில் பயணித்த காரணத்தினாலயா?

உங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாக தீபங்கள் என்ற படியாலா?

உங்கள் தியாகங்களை போற்றி புகழ முடியாத சிகரங்களாக நீங்கள் உள்ள படியாலா?

நீங்கள் தாயக கனவுடன் உறங்கிய உங்கள் கல்லறைகளை காணாத ஏக்கத்திலா? இன்று அனைத்தையும் இழந்து அனாதரவாய் என் இனம் சிங்களவன் பிடியில். பொறியில் சிக்கிய எலியைப் போல் சிக்கித் தவிக்கும் அவலத்தை கண்டும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தால் இந்த மாற்றமா?

கிளியவன், அவர்களின் கனவை நனவாக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வினால் இன்று பைத்தியங்களாக் திரிந்து கொண்டிருக்கிறோம்....

  • தொடங்கியவர்

உண்மையாக தமிழச்சி இன்னும் எதற்காக என் உடம்பில் இந்த உயிர் இருக்கு என்று வேதைணையாக இருக்கு.

நாங்கள் செய்த பிழைகளுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டாமா? இன்றைய இந்த நிலைக்கு நாம் ஒவ்வொருவருமே காரணம்.....

கிளியவன்,

மனம் தளராதீர்கள். ஆயுதப்போராட்டம் எதற்காக எமதினம் ஆரம்பித்ததோ அதற்கான விடியலை நாம் காண வேண்டிய தேவை எம்முன்னே விரிந்துள்ளது. மக்களுக்காக உழைப்பதே, மாவீரர்களின் கனவை நனவாக்குவதே எமக்கு ஆறுதல் தரும் கடமை.

கீழே, இம்மானுவேல் அடிகளார் அண்மையில் கூறிய ஒரு கருத்தை பாருங்கள் :

எமது போராட்டத்தின் புதிய மரிமாணத்தையும் சூழலையும் அதன் வெவ்வேறு சவால்களையும் தேவைகளையும் இன்னும் நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் போராட்டத்தின் புதிய கட்டத்தை நடத்த வேண்டிய புலம்பெயர் மக்கள் அதிகமானோர் இன்னும் சரியாக தம்முடைய பங்கையும் பணிகளையும் விளங்கவில்லை. இத் தெளிவற்ற நிலையே இன்று எம் மத்தியில் இருக்கும் பிரச்சினைகள் பிரிவினை பலவற்றிற்கு காரணமாயிருக்கிறது.

மாறிவரும் உலகில் எமக்கான பாதைகளை திறப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளியவன்,

சிட்னியில் நடந்த மாவீரர் தினத்தன்று, ஒரு ஓரத்தில் நின்று கொண்டு, மாவீரர்களுக்கு மலர் சாத்தி அஞ்சலி செய்பவர்களின் வரிசையை அவதானித்துக் கொண்டிருந்தேன்! அப்போது போர்க்களத்தில், இரு கண்களையும் இழந்த ஒரு பெண் போராளி, ஒரு வெள்ளைத் தடியுடன் மலரஞ்சலி செய்வதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தார்.என் மனதில் கோபமோ, அனுதாபமோ ஏற்படவில்லை!ஒரு விதமான இயலாமையும், குற்றவுனர்வுமே ஏற்பட்டது!இந்த நிலையில், தாயகத்தில் எவ்வளவு போராளிகள் இருப்பார்கள் என நினைத்த போது,எங்கள் இழப்பின் ரணம் என்றைக்குமே ஆறாது என்றே தோன்றியது!

அதே வேளை, இரண்டு கண்களும், கார்களும் உள்ளவர்கள், அங்கு வராத போது, வந்திருந்த இந்தப் போராளியின் ,மனோவலிமையும், போராளிகள் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய பற்றும,என்னை முற்று முழுதாக ஆட்கொண்டு விட்டது!

இதை எழுதிய காரணம், உங்கள் நிலையில் பல பேர் உள்ளோம் என்று சொல்வதற்காகவே! நன்றிகள்!

டொராண்டோ மாவீரர் தின நிகழ்வில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். காலுக்கு கீழே உணர்வற்ற மூவருக்கு மடிக்கணணி வேண்டி அனுப்பியதாக கூறினார். அவர்கள் இது சம்பந்தமான அறிவு வளர்ச்சியை முள்ளிவாய்யக்கால் வரையான காலத்தில் பெற்றிருந்தனர். அதனால், அவர்கள் வாழ்வில் சிறிது நம்பிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவர்களுடன் வாழ்ந்த இன்னும் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், இந்த மூவரும் கூடுதல் மன உற்சாகம் கொண்டுள்ளனர்.

நம்பிக்கை கொள்வோம். உழைப்போம். உதவுவோம். அதில் நாமும் புத்துணர்வு பெறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளியவன்,

சிட்னியில் நடந்த மாவீரர் தினத்தன்று, ஒரு ஓரத்தில் நின்று கொண்டு, மாவீரர்களுக்கு மலர் சாத்தி அஞ்சலி செய்பவர்களின் வரிசையை அவதானித்துக் கொண்டிருந்தேன்! அப்போது போர்க்களத்தில், இரு கண்களையும் இழந்த ஒரு பெண் போராளி, ஒரு வெள்ளைத் தடியுடன் மலரஞ்சலி செய்வதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தார்.என் மனதில் கோபமோ, அனுதாபமோ ஏற்படவில்லை!ஒரு விதமான இயலாமையும், குற்றவுனர்வுமே ஏற்பட்டது!இந்த நிலையில், தாயகத்தில் எவ்வளவு போராளிகள் இருப்பார்கள் என நினைத்த போது,எங்கள் இழப்பின் ரணம் என்றைக்குமே ஆறாது என்றே தோன்றியது!

அதே வேளை, இரண்டு கண்களும், கார்களும் உள்ளவர்கள், அங்கு வராத போது, வந்திருந்த இந்தப் போராளியின் ,மனோவலிமையும், போராளிகள் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய பற்றும,என்னை முற்று முழுதாக ஆட்கொண்டு விட்டது!

இதை எழுதிய காரணம், உங்கள் நிலையில் பல பேர் உள்ளோம் என்று சொல்வதற்காகவே! நன்றிகள்!

காசிருப்பவன் அங்கிருந்தே வெளிநாட்டுக்கு போறார்கள் .. புலிகளை சாட்டியே பலர் அகதி அந்தஸ்து வாங்குகிறார்கள் முன்னேறுகிறார்கள்.. அப்படி முன்னேறியவர்களின் பொருளாதாரமும் நேரம் இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்குமா? காசில்லாதவர்கள் இங்கிட்டு வருகிறார்கள் அகதி முகாம்களில் கஸ்டபடுகிறார்கள்.. சரி நாமும் போயே ஆக வேண்டும் என்பவர்கள் டூப்பிளிகெட் பாஸ்போட் அடித்து மாட்டி கொள்கிறார்கள் .. இதில் ஒளிவு மறைவு இல்லையே தோழர் புங்கையூரான்...

டிஸ்கி:

உணர்வுடைய அந்த போராளிக்கு நம்முடைய அன்பு கலந்த வணக்கங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.