Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரிக்கும் முதிர் கண்ணன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது.

இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற்றி யோசிப்பதில்லை கேட்டால் இன்னும் அதிக சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும் பின்பு தான் திருமணத்தைப்பற்றி யோசிக்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய இளைஞர் தனது இளமைக்காலங்களை சம்பாரிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இது தவறில்லை ஆனால் சம்பாரிக்கும் வயதில் இளமையை தவறு விடுகின்றனர் என்பது தான் இதில் கவனிக்கவேண்டியது. இன்றைய கலாச்சாரத்தில் லிவிங்டுகெதர் அதிகம் இருப்பது சற்றே இளப்பாருகிறார்கள் என்று கூறலாம். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்கள் வேலைக்கு அலையும் போதும் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் போது அவர்களது இளமைக்காலங்கள் கட்டாயமாக அமுக்கப்படுகிறது.

கலாச்சார சீர்கேடு என்று நகரங்களிலும், இப்பெவெல்லாம் காலம் கெட்டுப்போச்சு என்று கிராமப்புறங்களிலும் சொல்பவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைத்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வுகாணலாம். ஆனால் அதை அனைவரும் செய்ய மறுப்பர் காரணம் இன்னும் செட்டில் ஆகவில்லை இன்னும் சம்பாரிக்க வேண்டும் என்ற கனவால் திருமணத்தைப்பற்றி யோசிப்பதில்லை.

என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65. அவனைக்கேட்டால் என்னடா செய்யறது வீட்ல பார்த்து முடிக்கட்டும் என்று இருக்கிறேன் என்கிறான். இவனைப்போல் முதிர்கண்ணன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பெண்களில் 27 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் அதிகம் பேர் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. முன்னர் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவர்களது உடல் அமைப்பில் மாற்றம் வர வர குழந்தை பேரு இயற்கையானதாக இருக்கிறது. தற்போது தான் சிசேரியன் பழக்கம் அதிக அளவில் உள்ளது கடந்த காலங்களில் 5, 6 குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் குழந்தை பெற்றுள்ளனர். தற்போது அது குறைந்து வருகிறது.

வயது அதிகமாக திருமணம் செய்வதால் குழந்தை இல்லாமல் தவிப்பர்கள் இன்று ஏராளம் இதற்கான மருத்துவமனைகளில் இன்று கூடும் கூட்டத்தை கண்டாலே தெரியும்.

30 வயதில் இருந்து 35 வயதுக்குள் தான் இன்று அதிகம் திருமணம் செய்கின்றனர் அவ்வாறு செய்யும் போது அவர்களது வாழ்க்கையில் பாதி வருடங்கள் முடிவடிந்து விடுகிறது நம் ஆட்களின் சராசரி ஆயுட்காலம் 65 என்கின்றனர். பாதி வாழ்க்கையில் திருமணம் செய்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு 65 வயதாகிவிடுகிறது தங்கள் பேரன் பேத்திகளோடு அந்த கால தாத்தாக்கள் போல இந்தக்கால, வருங்கால தாத்தாக்கள் இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

நிச்சயம் இன்று விற்கும் விலைவாசிக்கு நல்ல சம்பாரித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அந்த 24 வயதில் இருந்து 30 வயதுவரையான இளமைக்காலங்களை இழக்கின்றனர் என்பது தான் என் கருத்து.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????

Thanks http://www.sangkavi.com/2011/11/blog-post_27.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ............பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை.. மிகத் தப்பான பார்வையால் பிறந்துள்ளது.

முன்னர் ஆண்கள் பலர் இருபதுகளிலும் பெண்கள் பதின்ம வயதிலும் திருமணம் முடித்தனர். அதற்கு முதல் பால்ய வயதில் திருமணம் செய்தனர்.

அன்று மனிதனின் சாரசரி வாழ்க்கைக் காலம் 40.. 50 ஆக இருந்தது. இன்றைய நவீன அறிவியல் உலகில் மனிதனின் சராசரி வாழ்க்கைக் காலம் பல நாடுகளில் 75 க்கு மேல் போய்விட்டது.

முன்னர் ஓய்வுபெறுவதற்கான வயது 50. இன்று அதுவே 65 க்கு மேல் போய்விட்டது.

படிப்புக்கான வயது மட்டும் எப்போதும் போல அதே நிலையில் நிற்கிறது. ஆனால் இப்போ படிப்புக்கு வயதில்லை என்றாச்சுது. இன்று எல்லோருக்கும் பல்கலைக்கழக கல்வி அவசியம் என்ற நிலை. அதை முடிக்கவே ஒருவருக்கு 21 அல்லது 22 வயதாகிடும். மேற்படிப்பு படிக்கிறவங்க.. சாகும் வரை படிக்கலாம். இடையில் வேலை தேடுதல்.. அப்படி இப்படின்னு.. காலத் தேவை அதிகம்.

இன்று பதின்ம வயதுகளில்.. 20 களில் திருமணம் செய்யுறவன் தான் 50 வயதிற்கிடையில் நாலு விவாகரத்துக்கும் 5 திருமணமும் செய்கிறான். அல்லது கள்ளத் தொடர்பு வைச்சுக்கிறான். அதேபோல் பெண்களும்.

ஒரு மனிதனின் மகிழ்ச்சிகர வாழ்க்கை திருமணத்தில் என்பது எல்லாம் இன்றைய காலத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இன்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய.. மன நிம்மதியை தரக் கூடிய பல பொழுதுபோக்குக்கள் உள்ளன. கல்வி இருக்குது. வேலை இருக்குது. இப்படிப் பல இருக்குது.

அதுமட்டுமன்றி.. நவீன அறிவியல் உலகில் 80 வயது ஆணும் 70 பெண்ணும் குழந்தை பெற்றுக்கிற நிலை இருக்குது. இதெல்லாம் இப்ப 50 60 வருடங்களுக்கு முன் ஓர் கனவாகவே இருந்திருக்கும்..!

இன்றைய இளைஞர்களிடம் நிறையவே பாலியல் முதிர்ச்சி உள்ள சிந்தனையோட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணைக் கண்டால் அவள் பின்னால ஓடுற நிலை இல்லை. அவளும் விரும்பினால் விரும்புவானே தவிர.. போப்போறன் என்றதை எல்லாம் தடுத்து நிறுத்தி வைச்சு.. சுமக்கிற அளவிற்கு இன்றைய இளைஞர்கள் இல்லை. அது நமக்கு அவசியமில்லாத சுமையும் கூட... என்ற சிந்தனை மிகுந்திருக்குது.

திருமணம் என்ற ஒன்றைச் செய்து தேவையில்லாத சுமைகளை சுமக்கும் சுமைதாங்கியா இருக்கிறதை விட.. இன்றைய இளைஞன்.. வாழ்க்கையை அனுபவிக்கும் வரை அனுபவிச்சுட்டு.. அதுக்கு அப்புறமுன்னா.. முடிஞ்சா கலியாணம் செய்துக்கலாம்.. அப்படின்னு நினைக்கிறான். அதுபோலவே இளம் பெண்களும் நினைக்கினம். ஆக அந்த இரண்டும்.. ஒன்று சேருகின்ற போது.. பிரச்சனைகள் இருக்காது என்பது எனது கருத்து.

மேலும்.. இன்றைய அறிவியல் உலகில்.. இந்த முதிர் கன்னி.. முதிர் காளை.. இந்தப் பதங்கள் அர்த்தமற்றவை. இன்றைய அறிவியல்... கலியாணம் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புறீங்களோ.. அதை எல்லாம் அது தானே பெற்றுத்தர தயாராக இருக்கிறது. பணம் தான் தேவை. பணமிருந்தால்.. வாழ்வை வளமாக வாழலாம். நாளை.. 80 வயதிலும் இளைஞன் என்று சொல்லக் கூடிய நிலையை அறிவியல் தான் தோற்றுவிக்குமே தவிர.. இந்த சமூக உளறல்கள் அல்ல..!

தமிழர்கள் நவீன உலகில் வாழ்ந்தாலும்.. இன்னும் மூடநம்பிக்கைகளில் இருந்து பிறந்த சில சமூக விதிமுறைகளில் இருந்து வெளிவரல்ல என்பதற்கு இந்த ஆக்கம் நல்ல சான்று. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி... :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.