Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள் - (2)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களது அவ்வப்போதைய உரையாடல்களிலிருந்து தேவகி மருத்துவத் துறையில் படிக்கிறாள் என்றும், இரத்தினபுரியில் மாமாவின் கடையிருக்கின்றது என்றும், அங்குதான் உயர்தர வகுப்புப் பரீட்சை எடுத்ததாகவும். போட்டியில்லாததால், இலகுவாக மருத்துவத் துறை கிடைத்ததாகவும் தெரிந்தது. அவனிலும் பார்க்க, அவளுக்குப் புள்ளிகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருந்தது. முறைப்படி பார்த்தால் அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். பதிலாக அவளது குறுக்கு வழி சென்ற கெட்டித் தனத்தை எண்ணி, மகிழ்ச்சியே ஏற்பட்டது. தானும் அப்படி வேறொரு பிற்போக்கான இடத்திலிருந்து ஏன் சோதனை எழுதவில்லை என்று தன் மீது தான் கோபம் வந்தது.

மூன்று வருடங்களின் முடிவில் கையில் ஒரு மட்டை கிடைத்த போது உலகத்தின் உச்சியின் மேல் ஏறி நிற்பதாக உணர்ந்தான். அந்த உணர்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வீட்டில் ஒரு தங்கை இருப்பதை அம்மா அடிக்கடி நினைவு படுத்தத் தொடங்கினாள். உலகத்தில் எங்கு பிறந்தாலும், இந்த யாழ்ப்பாணத்தில் வந்து பிறக்கக் கூடாது. என்று அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வான். அன்போடு சேர்த்து, பொறுப்புக்களையும் ஊட்டிவிடுகின்றார்களே என்று எண்ணுவான். அப்போது தான் அந்த நண்பனின் ' லண்டன்' கடிதம் வந்தது. நீ, ஊரில இருந்து, ஒன்றையும் வெட்டி விழுத்த ஏலாது மச்சான், இஞ்ச வெளிக்கிட்டு வா' என்று எழுதியிருந்தான்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதைச் சொன்னபோது, ஆரம்பத்தில் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒருவாறு சம்மதித்தார்கள். ஊரில் தான் செய்திகள், எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன? தேவகிக்கும் தெரிந்திருக்க வேண்டும். தன்னை அவசரமாக வந்து சந்திக்கும் படி கூறி ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள். நல்லூர்க் கந்தசாமி கோவிலில் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்பதாகப் பதிலனுப்பினான். அவனைக் கண்டதும் தேவகி அழுதாள். தன்னை விட்டு விட்டுச் சந்திரன் ஓடிப் போகப் போவதாகக் குற்றம் சாட்டினாள். தனது படிப்பு முடிந்ததும், தன்னையும் லண்டனுக்குக் கூப்பிட வேண்டும் என்று சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று அடம் பிடித்தாள். சத்தியமெல்லாம் எதற்குத் தேவகி? நான் தான் சொல்லுறேனே! என்மீது உனக்கு நம்பிக்கையில்லையா? என்று கூறிப் பார்த்தான். ஆண்களை நம்ப முடியாது, சந்திரன். அவனுக்கு, அவன் மீதே கோபம் வந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், சரி. சத்தியமா உன்னைக் கூப்பிடுவான், போதுமா? என்றான். இல்லை, கற்பூரம் மீது சத்தியம் பண்ணித் தரவேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள். இங்கு சத்தியம் பண்ணுகிறீர்கள் தானே, அதைச் சாமிக்கு முன்னால் செய்தாலென்ன? என்று கேட்டாள். எங்கிருந்து தான் அந்த அசாத்தியத் துணிவு வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. தர தரவென்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கோவிலுக்குள்ளே போனான். எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மேல் கைவைத்து, அவளை அங்கு கூப்பிடுவதாகச் சத்தியம் செய்து கொடுத்தான். அவனது உடம்பு முழுவதும் நன்றாக வேர்த்திருந்தது.

ஒருவாறு லண்டன் 'ஹீத்ரு' விமான நிலையத்தில் வந்து இறங்கியாயிற்று. நண்பன் வெளியில் காத்திருப்பான். அரை மணித்தியாலத்தில் வெளியே போய் விடலாம் என எண்ணியபடி ' குடிவரவு ' பலகை காட்டிய வழியைப் பார்த்து நடந்தான். அந்த நாளைய கறுத்த நிறப் பாஸ்போர்ட் தான் அவனது. 'சோஷலிச ஜனநாயகக் குடியரசு' என்று உலகத்தில் அப்போதிருந்த அத்தனை. ஆட்சியமைப்பு முறைகளும் அதில் எழுதப் பட்டிருந்தன. அப்போது தான் அதை வாசித்துப் பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அதைக் கண்டதும், அந்தக் குடிவரவுப் பகுதிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், அவனை அருகிலிருந்த கதிரைகளில் ஒன்றைக் காட்டி உட்காரும்படி சொன்னார். என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான் என்று மனதினுள் நினைத்துக் கொண்டான். தனக்குத் தரப்பட்ட கதிரை, தான் ஒரு பொதுநலவாய நாட்டில் இருந்த வருவதால் தான் என்று நினைத்து மனதில் ஆறுதலடைந்தான். இந்திய, பாகிஸ்தானிய கடவுச்சீட்டுக் காரருக்கும் இதே போன்ற மரியாதை அளிக்கப் பட்டதே , அதற்கான காரணமாகும். பின்பு ஆறு மணித்தியாலங்கள் கழித்து, வெளியில் வந்தபோது தான், வெள்ளைக்காரனின் வரவேற்பு அவனுக்கு விளங்கியது. இடையில் நடந்தவற்றை அவன் மறக்கவே விரும்பினான்.

வெளியில் வந்த போது, நண்பன் காத்திருந்தான். நண்பனிடம் உள்ளே நடந்தவற்றைச் சொன்னான். நண்பன் கூறிய பதில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 'யூ ஆர் வெரி லக்கி மச்சான்'! ஒரு மாதிரி நண்பனின் அறையில் ஒரே கட்டிலை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். அத்துடன் அவன் பள்ளிக்கூடத்துக்கும் காசு கட்ட வேண்டும். வீட்டில் இருந்து கொண்டு வந்த, இருநூறு பவுண் பெறுமதியான, பிரயாணக் காசுக்கட்டளையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பி விட்டான். நண்பனிடம் ஒரு சிறு தொகையை கடனாக வாங்கிக் கொண்டு வேலை தேடும் படலத்தில் இறங்கினான். 'சோசல் செக்குரிடி' நம்பர் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நண்பன் ஒரு இலக்கம் தந்தான். அந்த இலக்கம் 'வாகீசன்' என்பவருடையது. ஒரு எரிபொருள் நிரப்பும் ஒரு கடையில் இரவு வேலை கிடைத்தது. அந்தக் கடையில் முகாமையாளராக ஒரு வயது முதிந்த ஒரு தமிழர் தான் இருந்தார். அவர் இவனை அன்போடு தம்பி வாகீசன் என்றே அழைப்பார். காலையில் வேலைக்கு வரும் அவர் அவனோடு கதைக்கும் போது, சில வேளைகளில் தம்பி வாகீசன், என்று அழைக்கும் போது, அவனது பெயரே அவனுக்கு மறந்து போயிருக்கும். சில வேளைகளில், தம்பி உன்னோடு தான் கதைக்கின்றேன் என அவர் நினைவு படுத்தும்போது, திடுக்கிட்டுத் தன்னை சுதாரித்துக் கொள்வான். பின்பு வேலை முடிந்ததும் அப்படியே பாடசாலைக்கு ஓட வேண்டும். பின்பு வீட்டுக்கு வந்து தான், சமையல், குளிப்பு. இரவு திரும்பவும் வேலை. இவ்வாறு, இந்த வாழ்க்கை, இரண்டு வருடங்கள் ஓடியது. நீண்ட விடுமுறைக் காலங்களில், இரவும் பகலும் வேலை செய்து வீட்டிற்கு வந்து குளிக்கும் போது, ஏற்கனவே அரைச் சூட்டில் இருக்கும் நீர் உடம்பின் வெப்பத்தில், கொதி நிலைக்குக் கூட வந்து விடுவது போல உணர்ந்திருக்கிறான்.

மிகுந்த கடின உழைப்பாலும், நண்பனுடன் செலவுகளைப் பகிர்ந்து கொண்டதாலும், அவனால் சிறிது தொகையைச் சேமிக்கக் கூடியதாய் இருந்தது. அப்போது தான் அம்மாவின் கடிதம் வந்தது. அவனது தங்கையின் திருமணத்தை வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தாங்கள் அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபடுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சில நாட்களின் பின் தேவகியின் கடிதமும் வந்தது. தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், வாக்குறுதி அளித்தபடி தன்னை அங்கு கூப்பிடும் படியும் கேட்டிருந்தாள். அவனது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காதலுக்கும், பாசத்திற்கும் இடையேயான போட்டி. முடிவெடுக்க முடியாமல் சந்திரன் திணறினான், தேவகியிடம் ஒரு வருஷம் மட்டும் பொறுத்திருக்கும் படி தொலைபேசியில் கெஞ்சினான். மறுமுனையில், அவள் பத்திரகாளியாகினாள்/. இனிமேலும் உன்னைக் காணாமல் இருக்கமுடியாது என்றாள். இறுதியில் தேவகியை முதலில் கூப்பிடுவது என்றும், ஒரு வருடத்தில் தங்கையின் திருமணத்தைச் செய்யலாம் என்றும் முடிவு செய்தான். இந்த முடிவே அவனது முடிவாகவும் இருக்கும் என்று, அவன் அப்போது எதிர் பார்த்திருக்கவில்லை.

( இன்னும் ஒரு கொஞ்சம் மட்டும் மிச்சமுள்ளது! காதல் கதையென்று, கதிரையில் நீட்டி நிமிர்ந்து அமர்ந்தவர்கள் மன்னிக்கவும் )

புங்கையூரான் போகின்ற போக்கில் எல்லோரையுமே தூக்கிச்சாப்பிட்டு விடுவீர்கள் போல் உள்ளது :D :D .அமசடக்கியாக இருந்துகொண்டு இவ்வளவு விடையங்களை வைத்திருக்கின்றீர்கள் . தொடருங்கள் உங்கள் அதிரடித் தாக்குதல்களைக் கதைகதையாம் பகுதிக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா முடிவைப் போடாமல் மூளையை பிசைய வைக்கிறது நல்லாயில்லை சொல்லிட்டேன் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் போகின்ற போக்கில் எல்லோரையுமே தூக்கிச்சாப்பிட்டு விடுவீர்கள் போல் உள்ளது :D :D .அமசடக்கியாக இருந்துகொண்டு இவ்வளவு விடையங்களை வைத்திருக்கின்றீர்கள் . தொடருங்கள் உங்கள் அதிரடித் தாக்குதல்களைக் கதைகதையாம் பகுதிக்கு :) :) :) .

கோமகன், உங்கள் புதிய அவதாரைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயந்து தான் போனன்! பிறகு பார்த்தால் பழகின முகம் மாதிரியிருக்க, உற்றுப் பார்த்தபோது நம்ம பண்டார வன்னியன் என்று விளங்கியது! வாழ்க்கை என்பதை ஒரு புத்தகமாகப் பார்க்க முயல்கின்றேன்! பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கின்றேன்! அவ்வளவு தான்,

ஊக்குவித்தலுக்கு நன்றிகள், கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா முடிவைப் போடாமல் மூளையை பிசைய வைக்கிறது நல்லாயில்லை சொல்லிட்டேன் :(

:D

ஆமா நானும்தான் சொல்லிப்புட்டன்..

காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. இந்த முடிவே அவனது முடிவாகவும் இருக்கும் என்று, அவன் அப்போது எதிர் பார்த்திருக்கவில்லை.

( இன்னும் ஒரு கொஞ்சம் மட்டும் மிச்சமுள்ளது! காதல் கதையென்று, கதிரையில் நீட்டி நிமிர்ந்து அமர்ந்தவர்கள் மன்னிக்கவும் )

எதிர்பார்த்தேன்....! :D போற வேகத்தில... எங்கையோ அவசரமா..... ஆனால், முக்கியமான விசயத்துக்கு போற மாதிரி விளங்கிச்சு. ;) ஏனென்றால் காதல் கதையென்றால் கொஞ்சம் இழுபடும்.... கடிதம் குடுத்தம், சுவிங்கம் குடுத்தம் என்று. ஆனால் தங்கள் கதையில்... "எங்கேயும் எப்போதும்" இன்ரர் சிற்ரி பஸ் ஞாபகம் வந்திச்சுது. இலட்சியப் பயணம் தொடரட்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா முடிவைப் போடாமல் மூளையை பிசைய வைக்கிறது நல்லாயில்லை சொல்லிட்டேன் :(

நன்றிகள், சகோதரி!

மிக விரைபில்.......

:D

ஆமா நானும்தான் சொல்லிப்புட்டன்..

நன்றிகள், சுபேஸ்!

அட நம்ம சுபேசுக்குக் கூடக் கோபம் வருமா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தேன்....! :D போற வேகத்தில... எங்கையோ அவசரமா..... ஆனால், முக்கியமான விசயத்துக்கு போற மாதிரி விளங்கிச்சு. ;) ஏனென்றால் காதல் கதையென்றால் கொஞ்சம் இழுபடும்.... கடிதம் குடுத்தம், சுவிங்கம் குடுத்தம் என்று. ஆனால் தங்கள் கதையில்... "எங்கேயும் எப்போதும்" இன்ரர் சிற்ரி பஸ் ஞாபகம் வந்திச்சுது. இலட்சியப் பயணம் தொடரட்டும்!

நன்றிகள், கவிதை!

ஒரே பதிவில் போட்டிருக்கலாம் தான்!

கள உறவுகளுக்கு ஆயிரம் வேலை! இங்கே ஓடிவந்து களைப்பாற வருபவர்களுக்கு, சிறு தீனியாகக் கொஞ்சம், கொஞ்சமாய்க் கொடுக்கலாம் என்று நினைத்தேன்!

அவ்வளவு தான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.