Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழமொழிக்கான விளக்கம்.

Featured Replies

அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது

கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?

பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*******

அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது

கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?

கற்பூரத்துக்கு வாசனையில்லையா, உண்டா என்பது கூடத் தெரியாது விட்டால் கொஞ்சம் கடினம் தான், இருந்தாலும் முயற்சிக்கிறேன். :lol: கற்பூரத்துக்கு அதற்கேயுரித்தான சிறப்பான வாசனையுண்டு ஆனால் கழுதைக்கு அதைப்பற்றித் தெரியாது. கழுதைக்கு ஏன் கற்பூரம் கொழுத்துகிறார்கள் அல்லது அதன் மணம், குணத்தைப் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. என்னமோ எரியுது என்று மணந்து விட்டு மூக்கைச் சுழித்துக் கொண்டு போய் விடும்.அதைப் போல் தான் இங்கு சிலரும், ÁüÈÅ÷¸¨Çò ¾í¸Ç¢ý «È¢Â¡¨Á¡ø ¾¡ì̸¢È¡÷¸û. மற்றவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக தாக்குகிறார்கள். அதே போல் தான் " நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ற" பழமொழியும், செக்கிலும் எண்ணெய் வடியும், சிவலிங்கத்திலும் எண்ணெய் வடியும், நாய்க்கு வித்தியாசம் தெரியாது, அது தன்பாட்டுக்கு நக்கி விட்டுப் போகும் :roll:

வளமான தமிழின் பழமொழிகளின் தாற்பரியம் தெரியாமல் நேரடி மொழிபெயர்ப்புச் செய்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய விதி.:lol:

******* நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

உது தான் கோத்தை வித்த கோணல் புளியங்காய்,அதன் விளக்கம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் முதல்லயே சொல்லிட்டாரே ஒனியன் சார்.

நீங்கள் ஒனியன் சாரின் அறிமுகப்பகுதியை ஒரு முறை போய் பாருங்கோ...

டோன்ட் வேஸ்ட் த டைம்.

  • தொடங்கியவர்

இதில் எனக்கு ஒரு சந்தேகம் கழதை ஒரு மிருகம் தானே அதற்கு ஜந்தறிவுள்ளது ஆறவது அறிவான பகுத்தறிவில்லை இல்லை இந்த பகுத்தறிவில்லாத மிருகத்திடம் பகுத்தறிவுள்ள மனிதர் ஏன் கற்பூரத்தை கொழுத்துகிறார்கள் அதனால் என்ன பயன்

ஒவ்வரு மிருகத்திற்கும் ஒவ்வரு சிறப்பு அந்த சிறப்புகளை வெளிக்கொணர்வதை விட்டுவிட்டு அதற்கு முன்னால் கற்பூரத்தை கொழுத்தி மனிதர்களின் மதிப்பை குறைக்கிறார்கள்

இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது கழதைக்கு கற்பூரம் கொழுத்தும் அந்த மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒனியன் சார்...அவங்க கேக்குறது,,,கழுதைக்கு எதுக்காக கற்பூர வாசனை தெரியணுங்குறதே... கழுதை தெரிஞ்சு என்ன செய்ய போகுது??? எதுக்காக கழுதைக்கும் கற்பூரத்துக்கும் தொடர்பு வந்திசு... ஏன் குதிரைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு வச்சுக்கல.... அப்படித்தானுங்களே நர்மதா???

:):lol::lol:

  • தொடங்கியவர்

கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்

இதனால் ஒரு பயனும் இல்லை

நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்

இப்பழமொழிக்கான விளக்கத்தினை மறந்துவிட்டேன் ஆயினும் இது கழுதைக்கு கற்பூரம் கொழுத்துவதனுடன் எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது என்பதை மட்டும் கூறிக்கொள்ளலாம். சரியான விளக்கத்தினை வழங்குவதை விட்டு இவ்வாறு தேவையில்லாது கிண்டல் செய்வதனை நிறுத்திவிடலாம். ஒன்று தெரியாதவிடத்து அது தெரியவில்லை என்று ஒதுங்கிவிடுவது சிறந்தது. :idea:

கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்

இதனால் ஒரு பயனும் இல்லை

நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்

ம்ம் நர்மதா....கழுதைக்கு கொழுத்துவது பயனில்லை. பழையவர்கள் கழுதைக்கு என்னவென்றே தெரியாத ஒன்றை காட்டி விட்டு.அது பேசாமல் போனதும்..ஒரு பழமொழியை உண்டாக்கி இருக்கிறார்கள்.. இதை என்னவென்று சொல்வது..

:roll:

  • தொடங்கியவர்

ப்ரியசகி நீங்கள் சொல்வது சரி சில பழமொழிகள் ஏற்புடையதல்ல

பல பழமொழிகளின் கருத்துக்களை நம்மவர்கள் மழங்கடித்து விட்டார்கள் (அர்த்தங்களை மாற்றிவிட்டார்கள்)

உண்மை அர்த்தம் எனக்கு தெரியாது எனக்கு புரிந்த்வரைக்கும்.

கற்பூரமென்பது அருமையான, வாசனையுடைய ஒருபொருள் கடவுளுக்கு ஏற்புடையது, கெட்ட வாசனைகளை ஈர்த்து அளிக்கக்கூடியது, இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதால் உயர் பொருளாக கருதப்படுவது, கழுதை எனப்பட்டது மிருகங்களில் இழிவானது அதன் பயன் பாட்டைவைத்து அழுக்குமூட்டை சுமக்கத்தான் லாயக்கானது, பசு, குதிரை, யானை போன்று பயனும் அற்றது, பெறுமதியும் அற்றது, யாரையும் திட்டும்போதுகூட கழுதை போண்று லாயக்கற்றது எனத்தான் திட்டுகிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட கழுதை இறைவனுக்கு ஏற்றும்போது பயன்படுமெழும் வாசனையை அறியுமா? என்பதே பொருள். ஒரு அருமையான விடயத்தை மூடர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே அதன் பொருள், ஏனெனில் அது அவர்களுக்கு எட்டாப்பொருள் என பொருள்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் கூறிய விளக்கமே சரியானது.

ஓர் அருமையான விடயத்தை அதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களிடம் சொல்லுவதால் எதுவித பயனுமில்லை.

பழமொழிகள் சந்தத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றன.

"க" கழுதை, "க" கற்புூர வாசனை என்று பொருத்தமாக அமைந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.

பழமொழிகளில் இருக்கும் சொற்களுக்கு நேரடிக் கருத்துக்களைப் பாராமல் அவற்றின் உட்கருத்துக்களையே நாம் உள்வாங்கவேண்டும்.

  • தொடங்கியவர்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்தவரை கல்லால் செய்த நாய் சிலையை.....

சிற்பி பார்த்தால் ஆகா எப்படி அழகாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுவான்...அதயே ஒரு சாதாரண மனிதன் பார்த்தால் ஆகா நாய் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பான்.

ஒரு பொருளை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வையிலேயே...இருக்கின்றது.

அது கல்லா இல்லை நாயா என்று சிற்பிக்கும் மற்றவர்களூக்கும் உள்ள வித்தியாசம் போல....

எங்கேயோ படித்த ஞாபகம்.

பின்னாளின் அது திரிந்து கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்று சாதாரண அர்த்தமாகிவிட்டது.

சரியா தவறோ...நான் எங்கேயோ படித்ததை சொல்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

நீங்கள் சொன்ன விளக்கம் சரி ஆனால் சின்ன திருத்தம். அதாவது சிற்பி கல்லில் ஒரு சிலையை செய்து வைத்திருக்கும் போது அதை சிலையாக பார்ப்பவன் அதில் உள்ள நாய் உருவத்தை காண்பான். ஆனால் அதை வெறும் கல்லாக பார்த்தால் அங்கு நாய் தென்படாது.

  • தொடங்கியவர்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப் படுகிறது.

இதன் உண்மைப் பொருள்.

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம் தஞ்சை காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று.

அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

இது மனிதரின் பார்வையில்தான் ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது.

  • தொடங்கியவர்

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு...

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

உண்டி என்பது "உணவு" என்பதாய் படித்த ஞாபகம்... உணவைச் சுருக்கினால் உடல் சிறுத்து பெண்கள் அழகாக காட்ச்சி தருவார்கள் என்பதைத்தான் ஔவை அப்படிச்சொன்னார் போலும்... ஒரு பெண்ணான ஔவை வேறுவிதத்தில் சொல்ல வளி இல்லை...!

முகத்தாரின் பார்வையில்

வழமையா சாப்பாட்டு விசயத்திலை பெண்கள் பாத்தி கட்டி சாப்பிடக்கூடியவர்கள் சின்ன வயசிலை இப்பிடி சாப்பிட்டா ஆள் பெரிய சைஸ் ஆகிவிடும் அதோடை எவனும் திரும்பிப் பாக்கமாட்டான் ஆனபடியாலை சாப்பாட்டை குறைச்சு பெண்கள் சாப்பிட்டால் (உண்பதை சுருக்குதல்) அவர்களை சூப்பர். பிகருகளாக. . .ஆகக் காட்டும் (பெண்டிர்க்கு அழகு) யாரும் விளக்கம் பிழை எண்டா அடிக்க வராதைங்கோ . .சொல்லித்தாங்கோ. .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தாரின் பார்வையில்

வழமையா சாப்பாட்டு விசயத்திலை பெண்கள் பாத்தி கட்டி சாப்பிடக்கூடியவர்கள் சின்ன வயசிலை இப்பிடி சாப்பிட்டா ஆள் பெரிய சைஸ் ஆகிவிடும் அதோடை எவனும் திரும்பிப் பாக்கமாட்டான் ஆனபடியாலை சாப்பாட்டை குறைச்சு பெண்கள் சாப்பிட்டால் (உண்பதை சுருக்குதல்) அவர்களை சூப்பர். பிகருகளாக. . .ஆகக் காட்டும் (பெண்டிர்க்கு அழகு) யாரும் விளக்கம் பிழை எண்டா அடிக்க வராதைங்கோ . .சொல்லித்தாங்கோ. .

:lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

எனது அம்மம்மாவின் காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தால் அவர்களை வருத்தக்காரர் என சொல்லி திருமணம் செய்ய மறுப்பார்களாம் (அம்மம்மா கூறியது எதற்கும் ஒருக்கால் உங்கள் பெற்றேரிடமு கோளுங்கள்)

அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.

உண்மை அர்த்தம்: பகையாளன் குடியை உறவாடி[அவனிடம் உனக்குள்ள பகையை] கெடு.

[எங்கேயோ கேட்டது]

  • கருத்துக்கள உறவுகள்

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு பழமொழியா?? எப்பவிலை இருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா...நர்மதா தப்பா சொல்லிட்டாங்க...

அது திருக்குறள் இல்ல.....!!!

வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்

உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு

இப்படி வலைப்பதிவில் சந்திரவதனா அக்கா எழுதியிருக்கார் :?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.