Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிருஸ்ணாவை நெகிழ வைத்த மகிந்தவின் நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SM-KRISHNA-visit3.jpg

அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றது தனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் பிற்பகல் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அன்று மாலை அலரிகையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா,

"சிறிலங்கா அதிபர் ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று [திங்கள்] நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்து கொண்டேன்.

நேற்றுக்காலையில் அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் மாலையில் தான் நான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து கொண்ட சிறிலங்கா அதிபர், நானும் அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக மாலை வரை ஒத்திவைத்தார்.

இதனால் நான் மனம் நெகிழ்ந்து அவரைப் பாராட்டினேன்" என்று கூறியுள்ளார்.

அதேவேளை இந்திய வெளிவிவவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவைக் ‘கவிழ்க்க‘ சிறிலங்கா அதிபர் கையாண்ட தந்திரமே இது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

தமிழர்களின் தைப்பொங்கல் விழாவை மதித்துக் கொண்டாடுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக காட்ட மகிந்த ராஜபக்ச போட்ட நாடகம் வெற்றி கண்டுள்ளதை, எஸ்.எம்.கிருஸ்ணாவின் இந்தப் பாராட்டு எடுத்துக் காட்டுவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

http://www.puthinapp...?20120118105391

எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு பொங்கலுக்கு பதிலாக அல்வா கொடுத்திருக்கின்றார் மகிந்தர். :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

001_98.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தைப்பொங்கல் விழா இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார் இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

அலரி மாளிகையில் கிருஷ்ணாவுடன் சேர்ந்து மாட்டுப் பொங்கலும் நடந்திருக்கு. :D

செய்தி மற்றும் படங்கள் வீரகேசரி.

வெளிப்படையாக புகழ்வது வழமையான இராசதந்திர நகர்வு. பூட்டிய அறைக்குள் கிருஸ்ணா என்ன சொன்னார் என்பதே மகிந்தாவின் அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சு வார்த்தைகளில் வெளியில் மக்களுக்காகச் சொல்வதொன்ற உள்ளே நடப்பது ஒன்று. யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வது முட்டாள்த்தனம். கிருஸ்ணா சொல்லுகின்றார் 'தமிழரின் உரிமைபற்றி காட்டமாகக் கதைத்தது என்று" பீரிஸ் சொல்லுகின்றார் 'இந்தியா ஒரு நாளும் இலங்கைக்கு எதிரதக நடந்து கொள்ளாது" என்று முரண்பட்ட பேச்சிலே இருந்து விளங்கிக்கொள்வதென்ன? இது ஒரு சுத்து மாத்து நாடகம். தமிழருக்கு என்னவேண்டும் ன்று எப்போதாவது தமிழர்களிடம் கேட்டார்களா? தாங்கள் தருவதை நீங்கள் அனுபவியுங்கள் என்ற சொல்லுமபோது தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது இது நடக்குமா? மொத்தத்தில்தமிழர் பிரச்சனை நீறு ப+த்த செருப்பாகவே இருக்கவேண்டும் என்பது இந்தியாவின் அடிப்படைக்கொள்கை. சேரம் வரும்போது நெய்யூற்றி வளர்ப்பதும், பின்னர் அணைப்பதுமாக இலங்கையை மடக்குவது இவர்களின் கொள்கை. தமிழர்கள் இந்நிதாவின் பாதுகாப்பிற்கான அகல் விளக்கு. இப்படியே எரியவேண்டியது தான். அமெரிக்கவும் அந்தக்கண்டோட்டத்திலே தான் தமிழர் பிரச்சனையைக் கையாள்கின்றது. இந்தியாவைத் துண்டுதுண்டாக உடைக்கும் வரை தமிழர் பிரச்சனை தீர்ந்துவிடாது பார்த்துக்கொள்வது. எங்கள் பாதை மாற்றிச் செப்பனிடுவது தமிழரின் தலையாய கடமை. தமிழர்கள் இன்னும் பல விடயங்களைக் கற்றுக்கொள்ளவில்லை.

கிரிஸ்ணாவுக்கு மகிந்த அல்வா கொடுக்கவில்லை, தமிழருக்கு கிரிஸ்ணாவும் மகிந்தவும் சேர்ந்து அல்வா கொடுத்திருக்கிறார்கள்.காலவரையின்றி பேசிக் கொண்டு இருக்கலாம்.

கூட்டமைப்பும் இந்த நாடகத்துக்கு ஏற்றவாறு நாடகமாடுமா? எத்தினை காலம் தான் ஏமாத்துவார் இந்த உலகத்தில?

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறும் தமிழர்கள் நாங்கள் இருக்கும் வரை இவர்கள்

ஏமாற்றிக்கொண்டேயிருப்பார்கள்

பார்க்க வேண்டிய கருத்துப்படம் : http://www.ponguthamil.com/karuthupadam.asp?ContentID=c067fe27-74b8-4e58-966b-79c48121282a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் இதே மகிந்தரின் அரசுதான் தமிழர்களின் பண்டிகை காலங்களிலும் கூட அவர்களை கொண்டாட விடாது குண்டுமழை பொழிந்தது, சிங்களவன் திடீரென தை பொங்கல் கொண்டாடுகின்றான் என்றால் அதில் ஏதோ இருக்கின்றது அதுவும் காலையில் சூரியனுக்கு படைக்கவேண்டிய பொங்கலை இரவுக்கு மாற்றி கிருஷ்ணரின் வரவுக்கான கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்வித்து மயக்கிய சிங்களவன் ஏன் கூடவே இரவு விருந்தும் மருந்தும் எடுத்த மயக்கத்தில் என்னத்தை நிதானமாக முடிவெடுத்திருப்பார் ??????

  • கருத்துக்கள உறவுகள்

கிருஸ்ணாவை சந்தித்தபின்பு இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் அதிபர் இராஜபக்சே அறிவுப்பு - நேற்று தமிழகத்தில் வெளியான தினந்தத்தி பத்திரிகையின் தலைப்புச் செய்தி. தமிழகத்தில் அதிகளவு மக்கள் விரும்பிப்பார்க்கும் பத்திரிகை தினந்தந்தி. இதை வைத்து காங்கிரஸ் அடுத்த தேர்தல் வரை சாதனையாக சொல்லிக்கொண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலிருந்து செல்லும் தூதுவர்களுக்கு இரவு நங்கையும் கொடுக்கிறார்கள் எனக் கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.