Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவுக் கடற்பரப்பில் இந்தியப் போர்க் கப்பல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indian_navy_280-100x100.jpg

மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை அடுத்து அங்கு இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னோடியாக இந்திய விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவை நோக்கி விரைந்துள்ளது.

மாலைதீவில் உருவாகியுள்ள அரசியல் பிரச்சினை கிளர்ச்சியாக தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் தலையிடுவதற்கு இந்திய அரசின் பாதுகாப்புச் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்தினர் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டத்தினரிடையே நீண்ட நேரமாக பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது. இந்தச் பேச்சுக்களையடுத்து இந்தியப் பிரதமர் கலாலநிதி மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புச் சபை கூடியுள்ளது. இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், முப்படைகளின் தளபதிகள், மற்றும் பாதுகாப்புப் பிரிவின் சிரேஸ்ர அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த மந்திராலோசனையை அடுத்து மறுநாள் அதிகாலையே விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் மாலைதீவை சென்றடையக் கூடிய தூரத்தில் இந்தக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை அங்கு தலைதூக்கியுள்ள அடாவடித்தனங்களை அடக்கிவிடுமாறும் இந்திய அரசு மாலைதீவு அதிகாரத் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் 1988 ஆம் ஆண்டில் இது போன்றதொரு அரசுக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று இலங்கையில் செயற்பட்டு வந்த புளொட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டமையும், அதனை இந்திய “ஒப்பரேஷன் கற்றஸ்” என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சில மணி நேரத்தில் அடக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=50520

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், முப்படைகளின் தளபதிகள், மற்றும் பாதுகாப்புப் பிரிவின் சிரேஸ்ர அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த மந்திராலோசனையை அடுத்து மறுநாள் அதிகாலையே விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படியான நாடுகளில் மட்டுமே உங்கள் பலத்தை நீங்கள் காண்பிக்கலாம், வாழ்க தென்னாசிய வல்லரசு.

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை நாட்களில் சிறிய வகுப்பு மாணவர்களை வெருட்டுவது போன்றது தான் இந்திய அரசின் செயற்பாடு.சீனா போன்ற நாடுகளுடன் பம்மி போய் பவ்வியமாக நிற்கும் இந்தியா ஆயுதங்களை மட்டும் வாங்கி குவித்து என்ன பலன் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சீன எல்லையில் சீனா எத்தனையோ சதுர கிலோமீட்டரை காவு கொண்டுவிட்டது. பாகிஸ்த்தான் எல்லையோரம் மிரட்டல்களை விட்டுக்கொண்டிருக்க அங்கு படைகளை விலக்கி வைத்துக்கொண்டு சில்லரை நாடுகளில் சென்று சண்டித்தனம் விட்டு தான் பெரிய ஆள் என்று பறைசாற்றுவது தான். மும்பை தாக்குதல போல் அமெரிக்காவில் நிகழ்ந்திருந்தால் பாகிஸ்த்தான் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். இவர்களின் கையால் ஆகாத்தனம் இலங்கைத்தமிழர்கள் மேலும், மாலைதீவிலும்தான். ஆனால் இப்ப இலங்கையும் கைவிட்டு போச்சு. எங்கை எதை நகர்த்துவது என்று தெரியாமல் அல்லல்பட்டுப்கொண்டிருக்கின்றது. இந்தியா. மாலைதீவிலும் சீனா ராஜபக்ஸவ+hக நுழைந்துவிடக்கூடாதல்லவா? முன்னெச்சரிக்கை. நாங்களும் உசார் எனக்காட்டுவது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை.. மாலைதீவு போன்ற "வல்லரசுகளை" சமாளிக்கத்தான் சரி..! ஐயோ ஐயோ...??! அங்கால சீனா.. பாகிஸ்தான்.. சிறீலங்கா எல்லாம் சவால் விடும் போது... அது ஓடி ஒளிச்சுக் கொள்ளும்..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

REWatBoating5FishingHL.gif கப்பல்படை வெறுங்கையுடன் திரும்பி வராமல், மீன் பிடித்துக் கொண்டுவரலாம்.26_22_5.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

REWatBoating5FishingHL.gif கப்பல்படை வெறுங்கையுடன் திரும்பி வராமல், மீன் பிடித்துக் கொண்டுவரலாம்.26_22_5.gif

மீன்கள், இவர்களுக்கு 'அப்பொயின்மென்ட்' கொடுத்து விட்டா பார்த்துக்கொண்டிருகின்றன?

அதற்கும் ஒரு திறமை வேண்டுமே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன்கள், இவர்களுக்கு 'அப்பொயின்மென்ட்' கொடுத்து விட்டா பார்த்துக்கொண்டிருகின்றன?

அதற்கும் ஒரு திறமை வேண்டுமே!!!

indian+fisherman.jpg

முதல்ல இதை சிக்கெடுக்கவேண்டுமே ...... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.