Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அணுவாயுதப் போர்க்கப்பலை ஈரான் அருகே நகர்த்தியது அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

USS-lincoln-160212-150.jpg

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களைக் கொண்ட ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமடைந்துள்ளது.ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்திக்காக அணு உலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதை நம்ப மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறைமுக தடைவிதித்தது. இங்கு அடிக்கடி கடலில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, விமானம் தாங்கி போர்க்கப்பலை அரபு வளைகுடா பகுதிக்கு அனுப்பியது. சமீபத்தில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் தூதரகங்கள் டெல்லி, பாங்காங்க் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானது. அதில் ஈரான் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. அதை ஈரான் மறுத்துள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணை சப்ளையை நிறுத்த போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

அனைத்துக்கும் மேலாக அதிநவீன அணு தொழில் நுட்பத்தை ஈரான் அறிவித்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. எனவே, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த போர்க்கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளன. இது ஸ்ரெய்ட்ஸ் ஆப்ஹோர்ம்ஸ் துறைமுகத்தில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில்தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. அமெரிக் காவும், ஈரானுக்கும் போருக்கு தயாராக உள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவும் ரசியாவும் என்னதான் வீட்டோ பவரை வைச்சிருந்தாலும் மிச்சவிசயத்திலை கொஞ்சம் வீக் எண்டுதான் நான் நினைக்கிறன்.

சீனாவும் ரசியாவும் என்னதான் வீட்டோ பவரை வைச்சிருந்தாலும் மிச்சவிசயத்திலை கொஞ்சம் வீக் எண்டுதான் நான் நினைக்கிறன்.

என்ன விடையத்தில?

அமெரிக்கா தனியா வந்தால் சீனவோ ரஸ்யவோ தாக்கு பிடிக்கும் ஆனால் நேட்டோ என்ர கூட்டனியோடு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஆனால் இந்த நேட்டோ கூட சிறிலாங்காவின் ராஜதந்திரத்திற்க்கு அடிபனியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன விடையத்தில?

அமெரிக்கா தனியா வந்தால் சீனவோ ரஸ்யவோ தாக்கு பிடிக்கும் ஆனால் நேட்டோ என்ர கூட்டனியோடு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஆனால் இந்த நேட்டோ கூட சிறிலாங்காவின் ராஜதந்திரத்திற்க்கு அடிபனியும்.

தெரியுதெல்லே...பிறகென்னத்துக்கு இதுவழியைநிண்டு கத்திகருமாரிவைச்சுக்கொண்டு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈராக்கும் அமெரிக்காவும் அப்கானிஸ்த்தானும் செய்த வண்டைபோல் இது இருக்காது ஈரான் தனித்து இல்லை. ரஷ்சியாவும் பின்னணியில் இருக்கின்றது. இவர்களுடைய தொழில்நுட்பங்களைச் சமாளிக்கும் அளவிற்கு ஈரானிடமும் இருப்பது யாருக்கும் தெரியாது. வளைகுடாவில் இருக்கும் விமானந்தாங்கிக் கப்பல்களை ஈரான் நொடிப்பொழுதில் அழிக்குமானால் அமெரிக்காவால் தாக்குப்பிடிக்க முடியுமா? சதாமிடம் எதும் இருக்கவில்லை. அது அமெரிக்காவால் சோடிக்கப்பட் கதை. இற்கு அப்படி அல்ல. இருந்தும் நஸ்ரடாமர் சொன்னது போல் 3ம் உலக மகா யுத்தத்தில் முஸ்லீம்களும் கிறீஸ்த்தவர்களும் பெருமளவில் அழிவாhர்கன். கறுப்பினத்தலைவருடன் அமெரிக்காவின் புகழும் பெயரும் பேசாப்பொருளாகும் என்பது 2012 உலகம் பேரழிவுகளைச் சந்திக்கும் என்பதும் கைகூடும் தோற்றப்பாடு நிலவுகின்றது. இம்முறை வளைகுடாவில் யுத்தம் ஆரம்பித்தால் அது பாரதூரான விளைவுகளைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

வளைகுடாவில் இருக்கும் விமானந்தாங்கிக் கப்பல்களை ஈரான் நொடிப்பொழுதில் அழிக்குமானால் அமெரிக்காவால் தாக்குப்பிடிக்க முடியுமா?

அந்த கப்பலுக்கு சேதமில்லாமில்லாமல் ஈரான் தாட்டுதாயிருந்தால் ஒருமாதத்தில் வளைகுடா மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறலாம். கப்பலை ஈரான் சேதப்படுத்தினால் வளைகுடா மக்கள் அரை மணித்தியாலத்திற்குள் வளைகுடாவை விட்டு வெளியேற வேண்டி வரும். ஈரான் பேக்கூத்தாடலாம் என்பதனால்த்தான் சீனா நேரத்திற்கே மற்றைய நாடுகளிடம் எண்ணை வாங்கத்தொடங்கி விட்டது.

சீனா ஐரோப்பிய நாடுகள் கேட்காமல் காசு கடன் குடுக்க வெளிக்கிட்டத்தும், அவர்களின் எண்ணையை ஈரான் நிறுத்தி சீனாவிற்கு விற்று விடலம் என்று நினைத்ததனால் போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னைத்தான் காக்க அணுவாயுதம் என்று இறுதியாக எல்லா வல்லரசுகளும் சேர்ந்து உலகத்தையே சுடு காடு ஆக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. உனக்கும் இல்லை எனக்கும் இல்லை என்ற நிலை தான் மிஞ்சும்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் முன் அழித்துவிடவேண்டுமென்று அமெரிக்கா கங்கணம் கட்டுகின்றது. ஈரான் அணுவாயுதத்தை உருவாக்கிவிட்டால் வருங்காலத்தில் அரபு உலகத்தை அமெரிக்கா கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரம் புதைகுழிக்குள் சென்றுவிடும். அமெரிக்கா பிச்சை எடுக்கவேண்டிய நிலைவரும். இதைவிட நீயும் இல்லை நானும் இல்லை என்ற நிலையைத்தான் அமெரிக்கா விரும்புகின்றது.

கொரியாவைக்கூட அமெரிக்கா பெரிதாகக் கருதவில்லை ஏனெனில் அவர்களுடைய வளத்தில் அமெரிக்கா தங்கியிருக்கவில்லை. ஈரானின் அணுவாயுத இருப்பு வருங்கால அமெரிக்காவிற்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பாரியதொரு சவாலாக அமையும். எனவே இங்கே ஒரு போருக்கு இடமிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னைத்தான் காக்க அணுவாயுதம் என்று இறுதியாக எல்லா வல்லரசுகளும் சேர்ந்து உலகத்தையே சுடு காடு ஆக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. உனக்கும் இல்லை எனக்கும் இல்லை என்ற நிலை தான் மிஞ்சும்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் முன் அழித்துவிடவேண்டுமென்று அமெரிக்கா கங்கணம் கட்டுகின்றது. ஈரான் அணுவாயுதத்தை உருவாக்கிவிட்டால் வருங்காலத்தில் அரபு உலகத்தை அமெரிக்கா கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரம் புதைகுழிக்குள் சென்றுவிடும். அமெரிக்கா பிச்சை எடுக்கவேண்டிய நிலைவரும். இதைவிட நீயும் இல்லை நானும் இல்லை என்ற நிலையைத்தான் அமெரிக்கா விரும்புகின்றது.

கொரியாவைக்கூட அமெரிக்கா பெரிதாகக் கருதவில்லை ஏனெனில் அவர்களுடைய வளத்தில் அமெரிக்கா தங்கியிருக்கவில்லை. ஈரானின் அணுவாயுத இருப்பு வருங்கால அமெரிக்காவிற்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பாரியதொரு சவாலாக அமையும். எனவே இங்கே ஒரு போருக்கு இடமிருக்கு.

பெரியவனுக்குத்தான் உலகம். அதையே தானே நாம் இலங்கையில் பார்க்கிறோம். ஐந்தில் ஒன்றாய் இருந்ததால் இன்று பதினைந்தில் ஒன்றாகச் சுருக்கப் பட்டுவிட்டோம். அடுத்த நகர்வு நூறில் ஒன்று. அதன் பின் சாண் ஏறினால் என்ன மூழம் ஏறினால் என்ன?

Edited by மல்லையூரான்

தெரியுதெல்லே...பிறகென்னத்துக்கு இதுவழியைநிண்டு கத்திகருமாரிவைச்சுக்கொண்டு...

என்ன சொல்ல வாறீங்கள்? நீங்கள் எழுதுவதுக்கு கருத்து எழுத வேண்டாம் என்றா?

எனக்கென்னமோ ஈரானுக்கும் விரைவாக அடிவிளபோறது இதை எப்படி ஈரான் எதிர் கொள்ளப்போகின்றது என்பதே இன்றைய கேள்வி ????

எனக்கென்னமோ ஈரானுக்கும் விரைவாக அடிவிளபோறது இதை எப்படி ஈரான் எதிர் கொள்ளப்போகின்றது என்பதே இன்றைய கேள்வி ????

தேவயான் ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடியாது ஆனால் ஒன்றை செய்யலாம் இந்த சண்டைக்குள் ஹாமாஸ் மற்றது ஹஸ்புல்லாவையும் கோர்த்து விட்டு கொஞ்சம் பெரிதாங்க்கினால் அரபுநாடுகளில் சில நேரம் கொந்தளிப்புவரலாம் இல்லை எனில் கடாபி போல ஈரான் அதிபரும் எங்கையாவது பாலத்து உள்ளையோ அல்லது யார் வீட்டு கங்குஸுகுள்ளையோ என்னை சுடவேண்டாம் என்று சொல்லி சுடுபட்டு இறப்பார்கள்.

அமெரிக்கா இப்போதும் தனது கட்டமைப்பை இழக்கவில்லை.அதே வல்லமை தற்போதும் உண்டு.ரஸ்யாவால் எதுவும் பண்ண முடியாது.சீனாவுக்கும் ஏதாவது ஒரு திரி வைத்திருப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவைப்போல் தனக்கொரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்று போர் புரிந்தால் எவரும் அவர் அவர் கட்டமைப்பை இழக்கமாட்டார்கள். அவர்கள் விதித்த போர் விதிகளுக்கு அவர்களே கட்டுப்பட்டுப் போர் புரிவதில்லை.

ஆனால் மற்றவர்கள் போர்விதிக்குள் கட்டுப்பட்டு போர் புரியவேண்டுமென்பது அபத்தமானது.

இருந்தும் அவர்களால் பெரிதாக இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது, காலம் எல்லோருக்கும் எப்பவும் ஒரு மாதிரி இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சொன்னவங்கள்...சதாமிடன் அது இருக்கு இது இருக்கு அந்தப்படை இந்தப்படை இருக்கு என்றாங்கள் அதே போல கடாபியிடமும் எல்லாம் இருக்கு அமேரிக்கா புடுங்க ஏலாது என்றார்கள் .....கடைசியில் ஆட்களே உலகில் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு பச்சை. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்கா தான் பொருளாதாரத்தில இருந்து உலக அரசியல் வரை பல விசயங்களை தீர்மானிக்கிறது. அமேரிக்கா தான் நினைச்சதை எப்பவுமே சாதிக்கும் வல்லமையுள்ளது. வியட்நாமில், ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் அடிவாங்கியது உண்மை தான் ஆனால், சதாம், தலிபான், கடாபி, பின்லாடன் எண்டு காண பேர் இருந்த இடமே இல்லாமல் போய் விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.