Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிடலாகாது

Featured Replies

அரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிடலாகாது

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-23 09:40:22| யாழ்ப்பாணம்]

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திவரும் மனித உரிமை அமைப்புகள் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன.

ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்காவின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரம் இந்திய மத்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இலங்கை அரசு கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. நிலைமை இவ்வாறாக இருக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறாது போனாலும், அமெரிக்க அரசு ஏதோ ஒரு வகையில் இலங்கை அரசுக்கான தனது அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பதை எளிதில் நிராகரித்து விடமுடியாது.

தீர்மானத்தை நிறைவேற்றவும் அதனை தடுக்கவும் என இருபக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இணக்கப்பாடு ஏற்பட்டு விடும் என சர்வதேசத்தின் காதில் ஊதுவதில் அரசு முனைப்புடன் செயற்பட்டுவருவதை இவ்விடத்தில் மறுத்து விட முடியாது. அத்தகையதோர் முயற்சிக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ அவசரமாக அழைத்துச் சந்திப்பு நடத்தியுள்ளார்.

சந்திப்பில் தெரிவுக்குழு பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதனை சம்பந்தன் அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் தகவல். ஜெனிவாவில் தமக்கு எதிராகவரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட தனது விசுவாச நாடுகளுடன் இணைந்து தோற்கடிப்பதற்கு பகீதரப் பிரயத்தனம் செய்யும் அரசு, கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த் தைகளை முன்னிறுத்தி தன்னை நல்ல பிள்ளையாகக் காட்ட முற்படுகின்றது. இதுவிடயத்தில் கூட்டமைப்பு தெளிவாகவும் சமயோசிதமாகவும் நடந்துகொள்ள தவறு மிடத்து எங்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நாங்களே போட்டுடைத்தாக முடியும்.

எனவே, தெரிவுக்குழு-பேச்சுவார்த்தை என்ற காட்டாப்புக்களில் தமிழ் தரப்புகள் மயங்கிவிடாமல் பேச்சுவார்த்தை என்றால் அது சர்வதேச நாடொன்றின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறவேண்டும். காலயயல்லை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை மிகவும் இறுக்கமாக வலியுறுத்து வது கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டார் என்ற பூரிப்பில் ஓடிச்சென்றால், எல்லாம் படுதோல்வியில் முடியும். கவனம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27272

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தாவிடின் இவர்கள் தமிழ்மக்களின் முன் எப்போதும் வரமுடியாது போகும் எதற்க்காக தமிழ் மக்கள் வாக்களித்தார்களோ அதை மனதில் நிறுத்தி செயல் ஆற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் என்ன கை சூப்பி பாப்பாக்களா?  இன்று தோற்றால் நாளை மீண்டு வருவோம்.

நாம் ஓயாத அரசியல் அலைகள்!

கூட்டமைப்பு இச் சந்தர்ப்பத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு இதில் வெற்றிபெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுருட்டுக்கும், ஒரு பிளேன் டீக்கும் தமிழனை வாங்கிவிட முடியும் என்று அன்று, கூறினார் டி.எஸ். சேனநாயக்க!

இன்று, என்ன விலை கொடுத்தாலும், தமிழனை வாங்கமுடியாது என்ற நிலை வரட்டும், என நம்புவோமாக!!!

எனவே, தெரிவுக்குழு-பேச்சுவார்த்தை என்ற காட்டாப்புக்களில் தமிழ் தரப்புகள் மயங்கிவிடாமல் பேச்சுவார்த்தை என்றால் அது சர்வதேச நாடொன்றின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறவேண்டும். காலயயல்லை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை மிகவும் இறுக்கமாக வலியுறுத்து வது கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டார் என்ற பூரிப்பில் ஓடிச்சென்றால், எல்லாம் படுதோல்வியில் முடியும். கவனம்

முன்னர் சம்பந்தர் அமெரிக்காவையும், இந்தியாவையும் தங்களுடன் வந்து இருக்கும்படி கேட்டிருந்தார். யாரும் உடன் பட்டு போகவில்லை. அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.