Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது தாமிராவின் சேவையா

Featured Replies

பொங்குதமிழில் இரண்டு செய்தித் துணுக்குகள் காணப்படுகிறன. நான் எனது நிரையில் அவற்றை பதிகிறேன். உங்கள மனத்திலும் இது தாமிராவின் சேவையாக இருக்கலாமா என்படுகிறதா ?

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a2a3cbdb-f6a0-4a55-a0b4-81c51d32f421

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா கண்டனம்! - தீர்மானம் கொண்டு வருவது ஆபத்தான முன்னுதாரணமாம்!

சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறை ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முற்படுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான சிறிலங்காத் தூதுவர் தமரா குணாநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவின் மனிதவுரிமைகள் மேம்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை விவாதத்திற்கு எடுப்பதற்கு முன்னராகவே, சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொணடுவர எத்தனிப்து ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் சரியான அணுகுமுறை அல்லவெள அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோ ஆகியோரின் உரைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, தமரா குணநாயகத்தின் கருத்து அமைந்திருந்தது.

சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சமூகம் சுமார் மூன்று ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்ததோடு, சிறிலங்காவுக்கான நேரம் நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது என அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோவும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இவ்விருவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாகவே சிறிலங்காவின் தூதுவர் தமரா குணநாயகம் தனது பதிலுரையை சபையில் வழங்கினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட தமரா குணநாயகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இராணுவ நீதிமன்றம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போரின் போது இடம்பெயர்ந்த 290.000 மக்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தடுப்பு முகாம்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், 10,000க்கும் அதிகமான போராளிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறிலங்கா தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் கருத்துக்கள் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி கொள்ள வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=771e4004-aec3-47ea-ba6f-0471faa4886c

ஜெனிவாவில் விவாதத்துக்கு வருகிறது நிபுணர் குழு அறிக்கை! - சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்!!

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளியான அறிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு விவாதிக்கும் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்றைய அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட்டமைக்கு தனது வரவேற்பைத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து எதுவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல முக்கியமான பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய நவநீதம்பிள்ளை, இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்படும் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த இக்கூற்றின் மூலம் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை இக்கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை கடந்த செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த போதிலும், இவ்வறிக்கை இதுவரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் இக்கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை சமர்ப்பிக்கும் போது, சிறிலங்காவின் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்தவில்லை என சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், மேற்கத்தேய நாடுகளும் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் இக்கூட்டத் தொடரில் தமக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ள நிலையில், நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் இக்கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவது கொழும்புக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது.

அத்துடன், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

நிபுணர்கள் குழு வின் அறிக்கை என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில்லை எனவும், அது தாருஸ்மனின் அறிக்கை என்றும் சிறிலங்கா அரசாங்கம் அவ்வறிக்கையை நிராகரித்திருந்த நிலையில், இவ்வறிக்கை ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் ஏன் உருவானார்கள் என்பதையும் அதற்கான காரணத்தையும் முதலில் இக்குழுவினர் ஆராய வேணும். தாமரா தமிழர் என்று நாம் முத்திரை குத்தாமல் மனித உரிமைக்கு எதிரான குழுவைச் சேர்ந்தவர் அத்துடன் அரச உத்தியோகத்தர் என முத்திரை குத்துவோம்

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறை ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முற்படுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான சிறிலங்காத் தூதுவர் தமரா குணாநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

LLRC அறிக்கையை அத்திவாரத்தளமாக பிரேரணக்கு உபயோகிப்பதில் ஏதாவது தடங்கல்கள் வந்தாலும் UNEP அறிக்கையையும் கடைசி நேரத்தில் சேர்துக்கொள்ளப்பட முடிவெடுக்கப்படுகிறதா?

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன

.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி நடந்தால் சிங்களம் மீதான ஐ.நா. பிரேரணை கடுமையானதாக இருக்கலாம், அத்துடன் சுயாதீன ஐ.நா. விசாரணைக்கும் வித்திடலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகள் ஏன் உருவானார்கள் என்பதையும் அதற்கான காரணத்தையும் முதலில் இக்குழுவினர் ஆராய வேணும். தாமரா தமிழர் என்று நாம் முத்திரை குத்தாமல் மனித உரிமைக்கு எதிரான குழுவைச் சேர்ந்தவர் அத்துடன் அரச உத்தியோகத்தர் என முத்திரை குத்துவோம்

இலகுவாக ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டம் என்று முத்திரை குத்தலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்திகள் உண்மையானால் சிறிலங்காவின்மீது சுருக்குக் கயிறு இறுகுவது நிச்சயம்.இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து விட்டு அடுத்த செப்ரம்பர் மாத கூட்டத்தொடருக்குள் ஏதாவது தகிடுதத்தங்களைச் செய்து பிரச்சினையைத் தன்கையில் எடுக்க முயற்சிக்கலாம். ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை மீதான விவாதம் வந்தால் இந்தியாவுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். இந்தியாவின் பிரதிநிதி நம்பியார் கடைசி நேரத்தில் செய்த தில்லுமுள்ளுகள் அம்பலமாகும்.இனியும் இந்தியாதான் எமக்கு ஏதாவது செய்யும் என்று சொல்வதை நிறுத்த வேண்டும்.ஏனெனில் எமது பிரச்சினையை அமெரிக்கா கையில் எடுத்திருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்காவை நாம் அரவணைக்க வேண்டும்.ததேகூட்டமைப்பு அதன் மீதான இந்தியக்காதலைக் கைவிட்டு அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும்.திருகோணமலையில் தளம் அமைக்க நாம் அனுமதி கொடுக்க வேண்டும்.சீனாக்காரன் இந்து சமுத்தரப்பிராந்தியத்தை சுற்றி வளைக்க தமிழர் மீது காழ்ப்புணர்வு கொண்ட மலையாள வெளியுறவுத்துறையால் வழிநடத்தப்படும் பிச்சைக்கார ஆண்மையில்லாத இந்தியாவின் கையாலாகாத தனத்தை உலக வல்லரசு அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது.நாங்கள் இஸ்ரேலைப் போல உலக வல்லரசின் நண்பனாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்திகள் உண்மையானால் சிறிலங்காவின்மீது சுருக்குக் கயிறு இறுகுவது நிச்சயம்.இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து விட்டு அடுத்த செப்ரம்பர் மாத கூட்டத்தொடருக்குள் ஏதாவது தகிடுதத்தங்களைச் செய்து பிரச்சினையைத் தன்கையில் எடுக்க முயற்சிக்கலாம். ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை மீதான விவாதம் வந்தால் இந்தியாவுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். இந்தியாவின் பிரதிநிதி நம்பியார் கடைசி நேரத்தில் செய்த தில்லுமுள்ளுகள் அம்பலமாகும்.இனியும் இந்தியாதான் எமக்கு ஏதாவது செய்யும் என்று சொல்வதை நிறுத்த வேண்டும்.ஏனெனில் எமது பிரச்சினையை அமெரிக்கா கையில் எடுத்திருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்காவை நாம் அரவணைக்க வேண்டும்.ததேகூட்டமைப்பு அதன் மீதான இந்தியக்காதலைக் கைவிட்டு அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும்.திருகோணமலையில் தளம் அமைக்க நாம் அனுமதி கொடுக்க வேண்டும்.சீனாக்காரன் இந்து சமுத்தரப்பிராந்தியத்தை சுற்றி வளைக்க தமிழர் மீது காழ்ப்புணர்வு கொண்ட மலையாள வெளியுறவுத்துறையால் வழிநடத்தப்படும் பிச்சைக்கார ஆண்மையில்லாத இந்தியாவின் கையாலாகாத தனத்தை உலக வல்லரசு அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது.நாங்கள் இஸ்ரேலைப் போல உலக வல்லரசின் நண்பனாவோம்.

தமிழர் அமைப்புக்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள பழக வேண்டும்.அதிலும் கூட்டமைப்புக்கு மிக அருமையான சந்தர்ப்பம்.நழுவ விடாமல் பார்ப்பார்களா?.தற்போதயை சிங்களத்தின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.சிங்களவர்கள் முயற்சிக்கும் அளவுக்கு தமிழர்கள் முயற்சிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.