Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுமாற வைக்கும் உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா

களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல.

இந்த கதையைப் பொறுத்தவரையில்... எனது கருத்தும் இதுவே.. அண்ணன் அடித்துவிட்டான், என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல...அண்ணன் அடித்துவிட்டான்.. அதட்டிவிட்டான் என்பதற்காக அண்ணன் கொடியவனும் இல்லை.

இங்கு கருத்துக்கூறியவர்களை வைத்துப்பார்த்தாலே நன்கு புரிகின்றது. அனுபவம் கூடியவர்களின் கருத்து எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. உறவுகளை வெறுப்பது எப்போதும் நியாயமாகிவிடாது. இப்படியான ஒரு விவாத்ததை படிப்பவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு முடிவினை எடுக்க உதவும் என்பது தான் கதை புனைந்தவரின் நோக்கம். ஆதலால் சிறியவர்கள் பெரியவர்களின் கருத்துக்களுக்கு வழிவிட்டு இளையோர்கள் நல்ல செய்தியை பெற வழிசெய்யலாமே.. :roll:

  • தொடங்கியவர்

ராமா அக்கா.. கதை நல்லா இருக்கு..வித்யாவை அவ காதலனோடு சேர்த்து வையுங்க.......

நன்றி ஐனனி உங்கள் கருத்துகளுக்கு. விதி எப்படி விளையாடப்போகுது என்று பார்ப்போம்.

  • தொடங்கியவர்

வீட்டை விட்டு் வெளியில் வந்த பல பெண்கள் சீர்குலைந்து போயிருக்கிறார்கள். காதலனுடன் போகலாம் தான் ஆனால் அவருக்கும் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. ஆகவே காதல் கதையை புறம்பாக வைப்போம். வித்தியா தனது எதிர்காலத்தை நினைத்து என்ன செய்யவேண்டும். அதாவது மற்றவர்களின் உதவியை நாடி அண்ணனின் மனதை மாற்ற முயலமா? இல்லாவிடின் வெளியில் போய் தனிய வாழ்வது சரியா?

எல்லோருடைய கருத்துகளுக்கும் நன்றிகள்.

ம்ம் நன்றாக இருக்கு உங்கள் கதை ரமா. வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்க. ம்ம் தாயாரின் பிரிவால் துயருற்றிருந்த அண்ணா தங்கையின் காதல் விவகாரம் அறிந்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் அதனால் தான் போல் அடித்து இருக்கார். இருந்தாலும் அடித்தது ரொம்ப ஓவர். நான் நினைக்குறன் ஒரு நல்ல சூழலில ஒருவரின் தலையீடுமின்றி அண்ணாவிற்கு தனது நிலைமையை எடுத்து கூறி.. அண்ணாக்கும் அவகாசம் கொடுத்து.. அவரை புரிய வைக்க முயற்சி செய்யலாம். அதற்கு அண்ணா சம்மதிக்கவிட்டால்.. வீட்டை விட்டு வெளியேறி தனது வாழ்வை தானே அமைக்கிறது தான் நல்லது. வாழப்போவது அவதானே.. அடுத்தவரின் விருப்பத்தை விட அவாவின் விருப்பம் தானே முக்கியம். இருந்தாலும் எஞ்சி இருக்கிற ஒரே ஒரு உறவு அண்ணா தான் அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது.

அண்ணன்மார் காதலித்து கைப்பிடித்திருந்தாலும் தத்தமது சகோதரிகள் காதலிப்பதை ஏற்க மறுப்பதற்கான காரணம் தான் என்னவோ? :cry: :cry: :evil:

  • 2 months later...

எல்லா அண்ணாக்களும் அப்படியில்லையே வெண்ணிலா

நன்றி

வெற்றி.....

எல்லா அண்ணாக்களும் அப்படியில்லையே வெண்ணிலா

நன்றி

வெற்றி.....

ஓ அப்படி என்றால் சரி. ஆனால் கூடுதலான குடும்பங்களில் இப்படித்தான் :twisted:

நிலா பென் பெண் இந்த இரண்டு சொல்லுக்கும் ஒரு கதையே இருக்கு தெரியுமா?

நன்றி

அன்புடன்

வெற்றி

ரமா, கதை மிகவும் நன்றாய் இருக்கிறது. புலம்பெயர் தேசத்து யதார்த்தத்தைப் படம்பிடித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

முடிவைப் பற்றிய கருத்து

இப்பொழுது அவள் மிகச்சிந்தித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டும். அவள் அண்ணனுடன் தொடர்ந்து வாழ்வது உசிதமில்லை. உண்மைதான் ஆனால் அதற்காக உடனடியாக மதனுடன் சென்று புது வாழ்வைத் தொடஙக வேண்டுமா என்றால் அதுவும் சரியில்லை. ஏனென்றால் துன்பக் கடலில் தத்தளிப்பவர்களை உறவுக்காக ஏங்குபவர்களைக் குறிவைத்துப் பல ஏமாற்றுக்காரர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். ஆக அவள் சட்டியிலிருந்து தப்பிப்பதற்காகப் பாய்ந்து அடுப்பிற்குள் விழுந்து விடக் கூடாது.

தனியாகத் தொழில் வெய்பவள் தன் சொந்தக் காலில் நிற்க முடியும் தானே. வீட்டை விட்டு வெளியில் வரட்டும் . சமுதாயத்தைப் படிக்கட்டும். மதனையும் ஒரேயடியாக ஒதக்கிவிடத் தேவையில்லை. காலம் சரியான முடிவெடுக்கக் கற்றுத் தரட்டும்.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி மணிவாசன். நீங்கள் சொல்லும் முடிவு ஏற்றுக் கொள்ள கூடியதாக தான் இருக்கின்றது. வித்தியாவின் முடிவு வெகு சீக்கிரத்தில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்மார் காதலித்து கைப்பிடித்திருந்தாலும் தத்தமது சகோதரிகள் காதலிப்பதை ஏற்க மறுப்பதற்கான காரணம் தான் என்னவோ? :cry: :cry: :evil:

ஏன் உந்தக் கவலை உமக்கு? :evil: :evil:

சாறி..எனக்கு இப்படி மனைவி சொல்லை கேட்டு ஆடும் அண்ணர்களை சுத்தமாக பிடிப்பதில்லை..

:evil: :evil:

வித்திய..முடிந்த வரை அண்ணரை மாற்ற பார்க்கலாம்..

முடியா விட்டால்..நம்பிக்கையானவர் என்றால்..அவருடனேயே போய் வாழலாம்..பட்..நான் சொல்லி என்ன..அவங்க தான் முடிவு எடுக்கணும் :P :roll:

அருமையான பதில் அதுவும் ஆங்கிலம் கலக்காத தமிழ் மிகவும் அருமை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஏன் பிள்ளை ஓட்டப்போட்டியளில கலந்து கொள்ளுறேல்லையோ

:wink: :wink: :wink: :wink: :wink:

ஏன் உந்தக் கவலை உமக்கு? :evil: :evil:

எனக்கு கவலையே இல்லை இந்த விசயத்தில். (காரணம் முப்படை தளபதி எல்லோ. வாள்படை விமானப்படை சொற்படை அதுதான் வாய்வீரர்கள்........ இப்படி இன்னும் பல படைகளை கைவசம் வைச்சிருக்கும் எனக்கு என்ன கவலை? ஹாஹா) அண்ணன்மாரால் காதலிக்க முடியாமல் தவிக்கும் சகோதரிகளுக்காக அக்கருத்தை எழுதினேன். :) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா, பங்குனி 3 இல் இந்தப் பிரச்சனை ஆரம்பமாகியது. அவள் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லையா? இனி அவள் ஒரு முடிவுக்கு வரத்தான் வேண்டும்.

இவருடைய பிரச்சனையை தீர்த்துவிட்டு இன்னொருவரின் பிரச்சனையை எடுத்துவிடுங்கள் எல்லோரும் முன்னர்போல் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாறி..எனக்கு இப்படி மனைவி சொல்லை கேட்டு ஆடும் அண்ணர்களை சுத்தமாக பிடிப்பதில்லை..

:evil: :evil:

வித்திய..முடிந்த வரை அண்ணரை மாற்ற பார்க்கலாம்..

முடியா விட்டால்..நம்பிக்கையானவர் என்றால்..அவருடனேயே போய் வாழலாம்..பட்..நான் சொல்லி என்ன..அவங்க தான் முடிவு எடுக்கணும் :P :roll:

என்னாது!!!!!!

அண்ணாவை மாற்றப் போகின்றீர்களா? இது நல்ல இல்லை சொல்லிப் போட்டேன்! :oops: :oops:

( எப்படி மாற்றுவது என்று சொல்லுங்கள்! எனக்கும் பிற்காலத்தில் தேவைப்படும்! :wink: )

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி மணிவாசன். நீங்கள் சொல்லும் முடிவு ஏற்றுக் கொள்ள கூடியதாக தான் இருக்கின்றது. வித்தியாவின் முடிவு வெகு சீக்கிரத்தில் வரும்.

சென்ற வருடம் மார்ச் 3ம் திகதி இந்தப்பிரச்சனை ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லையா ரமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.