Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா! LLRCஇன் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துக! குதுகலத்தில் ஸ்ரீலங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த ஊடகங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் நியாயமான ஆதங்கத்தை தெரிவிக்கவேண்டும்.

அறிவுரைக்கு நன்றிகள்..

ஆதங்கத்தைத் தெரிவிக்க நான் கேணையன் இல்லை! :icon_mrgreen:

எங்களைக் கரை சேர்க்காது...ஆனால் புல்லரிக்கை வைத்தும் உசுப்பேத்தி விட்டும் தமிழ் ஊடகங்கள் கரை சேரும். அண்மையில் அர்ஜுன் இணைத்த சேரனின் கட்டுரையைக் கூட ஏற்க மறுத்தவர்கள் பலர். அதில் அமெரிக்காவின் இந்த நடிப்பை பற்றியே எழுதி இருந்தார்

கனடாவில் உள்ள ஒரு சட்டத்தரணிகள் அமைப்பு ஊடாக கடந்த முறை இந்த முறை ஆக இரண்டு தரம், சட்டத்தரணியும் கனேடிய தமிழர் பேரவை உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி ஜெனீவா மனித உரிமை தொடரில் ஒரு நேரம் கேட்டு எமது மக்கள் சார்பாக அறிக்கையை சமர்ப்பித்து பேசியுள்ளார்.

பேராசிரியர் சேரனும் கனடாவில் முள்ளிவாய்க்கால் காலத்தில் இருந்து பல தொடர்புகளில் உள்ளார். இவற்றின் பாரியாரும், எமக்கு சார்ப்பாக பல ஊடக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இவர்களை இங்கே உள்ள மனித உரிமை அமைப்பு ஆர்வலர்கள் ஊடாக ஜெனீவாவில் பேசுமாறு பலமுறை கேட்கப்பட்டனர். ஆனால் அது இன்றுவரை நடந்தேறவில்லை.

அமெரிக்காவின் பிரேரணை ஐநா சபையில் இன்னும் விவாதத்திற்கு வரவில்லை...........ஆனாலும் யாழில் விவாதம் சூடு பிடித்துள்ளது என்பது தான் உண்மை.......அன்பானவர்களே 2009 இற்குப்பிறகு நாம் நாதியற்று அனாதையாக யாரும் அற்றவராய் இந்த உலகில் அலைந்துகொண்டிருக்கிறோம் அதுதான் உண்மை. ஏனனில் அரசியல் சமூக பூகோள மாற்றத்தின் தாக்கமே எம்மேலும் தாக்கம் செலுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் அமெரிக்காவின் இந்த தீர்மானம் அதாவது பிரேரணை யானைப்பசிக்கு சோளப்பொத்தி என்பது போல் எமக்கு இருந்தாலும் சிறிலங்காவிற்கும் அதன் தொழமைசக்திகளுக்கும் பெரும் சவாலையும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது என்பதே உண்மை.அதாவது அரசியல் சமூக பூகோள மாற்றம் இன்று இவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.ஆகவே இந்த மாற்றங்கள் மாற மாற எங்கே அதாவது யாரிடம் சாதகமான நிலைமை இருக்கின்றதோ அவர்களுக்கு சாதகமாகவும்,யாரிடம் பாதகமான நிலைமை இருக்கின்றதோ அவர்களுக்கு பாதகமான நிலைமையும்தான் உருவாகும்.

ஆகவே அமெரிக்காவின் இந்த பிரேரணையை நாம் எமக்கு சாதகமாக்க முயற்சிப்பது மட்டுமன்றி போசிட்டிவாக நாம் சிந்தித்து மாறிவரும் மாற்றங்களை

மேலும் மேலும் எமக்கு சாதகமாக்க ஒற்றுமையாய் ஓரணியில் பயணிப்போம்

நன்றி

தோழமையுடன் தமிழ்சூரியன்

ஆனால் அமெரிக்காவின் இந்த தீர்மானம் அதாவது பிரேரணை யானைப்பசிக்கு சோளப்பொத்தி என்பது போல் எமக்கு இருந்தாலும் சிறிலங்காவிற்கும் அதன் தொழமைசக்திகளுக்கும் பெரும் சவாலையும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது என்பதே உண்மை

இதுவே என்நிலையும். நானே இந்த மாற்றத்தினூடு சென்றிருந்தேன். ரொபேட் பிளேக்கின் மாற்றம் ஆச்சரியப்படத்தக்க மாற்றம். இப்போது அவருடன் இணந்து செயல்படுவதே தாயக மக்களுக்கு நாம் செய்யத்தக்க சேவை.

இதுதான் பிரேரணை என்று அமெரிக்கா முன் வைத்துவிட்டது .வாக்கேடுப்புத்தான் 21 ஆம் திகதி .

இது ஒரு முதல் படி என்பவர்களும் ,உது தீர்வல்ல என்பவர்களும் ,கொடியை பிடித்தோம் ஊர்வலம் போனோம் அதுவே திருப்தி என்பவர்களும்,வராத கூட்டமைப்பை திட்டியே களிப்புறுபவர்களும்,அரசு சார்பில் வந்த தமிழ் பிரதிநிதிகளை நாசமாக போக என சாபமிடுபவர்கள் ஒரு புறமுமாக ,

எமது போராட்டம் போகின்றது .

உண்மையில் என்ன நடக்கின்றது எனக் கேட்டால் ஒரு குருவிக்கும் தெரியாது .அந்த அளவு அரசியல் தெளிவுடன் இவர்களை வளர்த்து விட்டிருக்கின்றார்கள் .

இதை விட சம கொமடி -இவைகள் கூட தலைவரின் தீர்க்க தரிசனமாம்.ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கியதும் அதற்குத்தானம்.

நெடுக்ஸ் இணைத்த சென் ஜோன்ஸ் -சென்றால் கிரிக்கெட் மாட்ச் காணொளி பார்க்கவும் ,அதுதான் தலைவரின் தீர்க்க தரிசனம் .இனி இது ஒருகாலமும் மாறாது .ஆசை தீர புலம் பெயர்ந்த நாடுகளில் கொடிகளை பிடியுங்கோ .

முதலில் எப்படியாவது அமெரிக்காவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை ஏதோ ஒருவடிவத்தில் 25 க்கும் அதிகமான வாக்குகளை பெற வைக்கவேண்டும். இது எமது பிரச்னையை தொடர்ந்து சர்வதேசமயப்படுத்த முக்கியமாகின்றது.

அடுத்து சிங்களத்திற்கு கொடுக்கப்படும் கால அட்டவணைக்குள் தமிழர் தரப்பு தம்மால் பெறக்கூடிய அதி உச்ச அரசியல் உரிமைகளை பெறவேண்டும்.

பின்னர் 21 ஆம் மனித உரிமை தொடரில் ஐ.நா. மீண்டும் ஒரு அறிக்கையை 19 ஆவது தொடருக்கு ஏற்ப சமர்ப்பிக்க வைக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை நிறம் கொண்ட இலவம் பஞ்சின் பழத்தைப் பார்த்த ஒரு கிளி இந்தப் பழம் உண்ண இது சரியான நேரம் இல்லை; தற்போது பச்சைக் காயாக இருக்கிறது; இது விரைவில் பழுக்கும்; அப்போது இதனைச் சுவைத்து உண்ணலாம் என்றெண்ணிக் காத்திருந்தது. காலமும் சென்றது. பழமும் பழுக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் அந்த இலவங்காய் வெடித்து வெண்ணிறப் பஞ்சு எங்கும் சிதறிப் பறந்தது. கிளியும் ஏமாந்தது.

மேலே குறிப்பிட்ட கதை, நான் பாலபாட புத்தகத்தில் படித்த கதை.

எனது வாழ்வில் படித்த முதல் கதையும், இது தான்.

அது தமிழர் வாழ்விற்க்கு, தொடர்ந்தும்... பொருத்தமாக நடந்து வருவதுதான்.... வேதனைக்குரியது. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் பிரேரணை என்று அமெரிக்கா முன் வைத்துவிட்டது .வாக்கேடுப்புத்தான் 21 ஆம் திகதி .

இது ஒரு முதல் படி என்பவர்களும் ,உது தீர்வல்ல என்பவர்களும் ,கொடியை பிடித்தோம் ஊர்வலம் போனோம் அதுவே திருப்தி என்பவர்களும்,வராத கூட்டமைப்பை திட்டியே களிப்புறுபவர்களும்,அரசு சார்பில் வந்த தமிழ் பிரதிநிதிகளை நாசமாக போக என சாபமிடுபவர்கள் ஒரு புறமுமாக ,

எமது போராட்டம் போகின்றது .

உண்மையில் என்ன நடக்கின்றது எனக் கேட்டால் ஒரு குருவிக்கும் தெரியாது .அந்த அளவு அரசியல் தெளிவுடன் இவர்களை வளர்த்து விட்டிருக்கின்றார்கள் .

இதை விட சம கொமடி -இவைகள் கூட தலைவரின் தீர்க்க தரிசனமாம்.ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கியதும் அதற்குத்தானம்.

நெடுக்ஸ் இணைத்த சென் ஜோன்ஸ் -சென்றால் கிரிக்கெட் மாட்ச் காணொளி பார்க்கவும் ,அதுதான் தலைவரின் தீர்க்க தரிசனம் .இனி இது ஒருகாலமும் மாறாது .ஆசை தீர புலம் பெயர்ந்த நாடுகளில் கொடிகளை பிடியுங்கோ .

ஒரு வேளை ஒன்றுமே இல்லாத ஒன்றாயே அமெரிக்காவின் இந்தப் பிரேரணை விளங்கட்டும். ஆனால் அதுவே சிங்களத்தின் ஆழமான ஆபத்துதவிகளை ஒரு நிரயில் வைத்து இருக்கின்றது. இன்னொரு ஆபத்துதவிக்கு கோவணத்தை ஒரு கையிலும் தண்ணிப்பானையை இன்னொரு கையிலுமாய் வைத்திருக்க வைத்திருக்கின்றது. இந்த ஒன்றுமில்லாத ஒன்றாலேயே அமெரிக்காவும் சிங்களத்தின் பகையை பிரகடனம் செய்திருக்கின்றது.

இவ்வளவு நிலையைத்தந்த இந்த ஒன்றும் இல்லாதது எம்முடைய நிர்கதி நிலைக்கு ஒரளவான பெறுமதியையாவது கொண்டு விளங்குகின்றது.

இரத்தக் குளியலுடன் நிற்கும் மகிந்தாவை காந்திய நாடே காவல் காக்கின்றது. எம் முப்பாட்டனின் சொந்தக்காறனா அமெரிக்கா? அதுமட்டும் தன் தேசநலனை தூக்கி எறிந்துவிட்டு ஒரே போக்கில் மக்கிந்தாவை பிரட்டி எடுக்க வேண்டும் என எண்ணுவதற்கு?

அமெரிகா சிங்கள அரசிற்கு கொடுக்கின்ற மாத்திரை உடம்பிற்கு ஆபத்தில்லமல் இருந்தும் அதைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத மகிந்தாவின் மனப்போக்கு உண்மையான பிரச்சினைக்கு எப்படி உதவமுடியும் என்பதை உலகிற்கு சாட்சியாக்குகின்றது--- என்ற வகையாகவேனும் நாம் திருப்திப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.