Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர் கவிதை - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரமா, கள உறவுகளே.

இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று இல்லை இரண்டு:

(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.

(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.

கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

நன்றி

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

ஆசிரியரின் கருத்து சரியானதே!

ரமா அவசரத்தில் எழுதி இருக்கலாம்

அதனால் சில பிழைகள் ஆச்சோ தெரியல -! 8)

இருந்தாலும் எனக்கும் குட்டுறீங்க போல :P -இப்பிடி

"கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்."

தவறுதான் - திருத்தி & திருந்தி கொள்கிறோம் :roll:

என்ன சிநேகிதி இடையில வந்து திருத்திக்கொண்டிருக்கிறீங

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் வணக்கம்

நான் யாருக்கும் குட்ட வரவில்லை.

களத்திலே நான் அடிக்கடி கூறும் கருத்தைத்தான் இங்கேயும் குறிப்பிட்டேன்.

தவறுகள் எதனையும் "முளையிலே கிள்ளுவது" நல்லதுதானே!

சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

.

இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று இல்லை இரண்டு:

(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.

(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.

கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.

தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.

நன்றி

உங்கள் கருத்துக்களை எற்றுக்கொள்கின்றோம். அறியமால் விடும் பிழைகளை சுட்டி காட்டுங்கள் ஆசிரியாரே. எனது பிழையை திருத்தி விட்டேன். இனி தொடர்வோம்.

சொறி சுடர்....நான் கவிதை எழுதப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அப்ப நாங்க என்னவாம் இப்பதான் கவிதைல ஆனா ஆவண்ணாவே அழிச்சு அழிச்சு எழுதுறம் :oops: :oops:

அப்ப நாங்க என்னவாம் இப்பதான் கவிதைல ஆனா ஆவண்ணாவே அழிச்சு அழிச்சு எழுதுறம் :oops: :oops:

:oops: :oops: நானும் தான்.

ஆஆஆ ஒரு நிமிடத்துக்குள்ள சுடர் பதிந்துவிட்டாரே.......

:shock: :shock:

மன்னிக்கவும் சுடர்-

நான் - எழுதி கொண்டு இருக்கேக்க

நீங்க அனுப்பிட்டிங்க

அதுதான் நடந்தது :roll:

:shock: :shock:

மன்னிக்கவும் சுடர்-

நான் - எழுதி கொண்டு இருக்கேக்க

நீங்க அனுப்பிட்டிங்க

அதுதான் நடந்தது :roll:

பரவாயில்லை வர்ணன். :P

அனைவரும் யோசித்து எழுதுவதற்கு நேரம் எடுக்கும் போது இவ்வாறான தவறுகள் நடப்பது வழமை. அதை பொறுத்துக் கொண்டு முன்னோக்கிசெல்வது நம்கையில்தான் தங்கியிருக்கிறது. ஒரு விடயத்திற்கு இருவரும் எழுதியாகிவிட்டது என்று தயக்கமடையாது தொடர்ந்து செல்லலாம். என்ன இரண்டு தரம் எழுதும் போது இன்னும் எங்களைப் புடம் போடலாம் :wink: :idea: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி நன்றாக இருக்கிறது சின்ன விண்ணப்பம்.. கவிதைகளை இந்த தலைப்பில் எழுதிக்கொண்டு.. கருத்துக்களை தனியாக எழுதலாமே.. கவிதைகளை தொடராக படிப்பதற்கு இலகுவாக நன்றாக இருக்கும். :roll: :P

:D ஆகா..நன்றாக போகிறதே..தொடர்..கவிதை.. :P

ஆனால் செல்வமுத்து அங்கிள் சொன்ன ஒரு விடயத்தை நானும் திருப்பி சொல்ல நினைக்கிறேன்(தவறெனில் மன்னிக்கவும்)

கவிகளை 10 வரிக்குள் எழுதினால்..சின்ன சின்ன கவிகளாக தொடர அழகாக இருக்கும்.

அத்தோடு...அடுத்து எழுத இருப்பவருக்கும்..கொஞ்சம் சுலபமாக இருக்கு மல்லவா? :roll: :roll:

அப்போ கவி இதுவரை எழுதாதவரும் குட்டி குட்டியாக தொடர முயற்சிக்க இலகுவாக இருக்கும்..

என்ன நினைக்கின்றீர்கள்..:roll:

அத்தோடு தமிழ் அக்கா சொன்னதும் நல்ல ஐடியா தான் :idea:

நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

ஆகட்டுமுங்க..அப்பிடியே செஞ்சுடுறோம் :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமாவின் ஆரம்ப கவிதையும்

அடுத்தடுத்து இருந்த வேறு சில கவிதைகளையும் இங்கே காணவில்லையே! எங்கே போய்விட்டன என்றுபார்த்தேன். அப்போதுதான் அவை தொடர் கவிதைப் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அறிந்தேன்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனித்தா நன்றி

நான் அதனை எழுதிமுடித்து அனுப்பிய பின்னர்தான் களப்பிரிவிற்குள் சென்று பார்த்தேன்.

உங்கள் உதவிக்கு எனது நன்றி.

ஆசிரியரே! இந்த முயற்சி நல்ல முயற்சி. சகி சொன்ன மாதிரி கருத்தை ஓரிடத்திலும் கவியை ஓரிடத்திலும் எழுதலாமே?

எனது தனிப்பட்ட கருத்துதான் -!

தொடர்ந்து உற்சாகமாக கவிதை எழுதினாலும்

சரி பிழைகளை சுட்டி காட்டவும்-வழி நடத்தவும் - சிலர் இருக்கணும்!

இல்லைனா நாங்க எழுதினதுதான் - கவிதை என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டு - சரி பிழை - கவிதை வரைமுறை தெரியாம - எல்லாமே வீணாய்போயிடும்-!

ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள

இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -

ஒரு கடமையாய் நினைத்து -வழி நடத்தணும்- உதவி செய்யணும் - எல்லாரையும் ஊக்கபடுத்தணும் - என்று நினைக்கிறேன் -!

வெளியிலிருந்து வெறும் வாசகர்களாய் இருப்பவர்களுக்கும் -

உங்கள் நெறிபடுத்தலை பார்த்து கவிதை விடயத்தில் முயற்சி செய்தால்-

முகம் தெரியாத உறவுகளின் நன்றிகளும் - உங்களை சாரும்!

ஒரு தகவல் துணையாகவும் இருக்கும் - பலருக்கு-!

ஒவ்வொருவர் கவிதையின்மீதான உங்கள் - கருத்துக்கள் அவசியம்-!

அப்போதான் நிறைய விடயங்களை -கவி எழுத - கன்னிமுயற்சி செய்பவர்கள் - அறிந்து கொள்வார்கள்-!

கவிதை எழுதி ஏற்கனவே பழக்க பட்டவர்கள்-

தாம் விட்ட பிழைகளை தெரிந்து கொள்வார்கள்! 8)

வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள்.

வர்ணன் ரசி அக்காவை விட்டுவிட்டீர்கள்.

சினேகிதி - எல்லாரையும் ஒவ்வொன்றாய் குறிப்பிட -முடியுமா?

அதுதான் பொதுவா-

"ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள

இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -"

எண்டு சொன்னேன்!

மற்றும்படி - ஒண்ணுமில்ல!

ரசிகை அக்கா போன்ற எல்லார் கருத்துமே தேவை - !

:oops: :oops: :oops:

சகி இங்க பாருங்களேன்....நான் புதுசா "கவிதைத் தொடர்-கருத்துக்ககள்" என்று தொடங்கி எழுதின கருத்து கடைசில வந்து நிக்குது.எல்லாரும் கருத்து எழுதின பிறகு "நண்பர்களே கவிதைத் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

" என்று சொல்ற மாதிரி. :roll: :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் தமது கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

கள உறவுகளிடையே கவி ஆர்வத்தை வளர்க்க இடையிடையே இதுபோல் பல கவிக்களங்கள் எழவேண்டும்.

புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அதற்கென சில விதிமுறைகளை அமைத்து ஆரம்பத்திலேயே அறிவித்துவிடவேண்டும்.

பா இலக்கணம், யாப்பிலக்கணம் என்பவற்றை பலரும் அறியக்கூடியதாகச் செய்யவேண்டும்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை, வெண்பா போன்றவற்றை இணையத்தின் ஊடாக கள உறவுகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

அறிந்தவர்கள் இங்கு வந்து உதவவேண்டும்.

இது எனது நீண்டநாள் ஆசை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.