Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் சிங்களக் காடையர்கள் ! ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டனர் !!

Featured Replies

http://naathamnews.com/?p=4589

HRC-breaking-news.jpg

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்…

lk-side-event_3-225x300.jpg

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து, இந்த உப மாநாட்டினை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன.

அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.

இதில் குறிப்பாக சிறிலங்காவில் கடந்த ஓரு ஆண்டுகாலமாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சிங்களப் பெண்ணொருவர் கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார்.

மேலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள், எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில், தகாத வார்தைகளை பிரயோகித்தனர்.

lk-side-event-225x300.jpg

அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தும் பாங்கில் செயற்பட்டனர்.

சிங்களக்காடையர்களின் இந்த நடவடிக்கையினை பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாக கண்டித்தனர்.

இது சிறிலங்காவல்ல இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு. இது ஐ.நா மனித உரிமைச் சபை. இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென, சிங்களக் காடையர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் சிங்களக்காடையர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள், சிங்களக் காடையர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினா அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டது.

குறித்த இந்த சிங்களக் காடையர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

pic-4.jpg

மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை சிங்களர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது அச்சுறுத்தி, தங்களது அடாவடித்தன்தை சிங்களக்காடையர்கள் காட்டியுள்ளனர்.

நாதம் ஊடகசேவை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

குறித்த இந்த சிங்களக் காடையர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்த படத்தில் உள்ள ஒருவர் முன்னைநாள் ஊடகவியலாளர், பந்துல ஜெயசேகர. இவர் இந்நாள் சனாதிபதி ஊடக ஒருங்கிணைப்பாளர்

முன்னைநாள் டொராண்டோ உப தூதரக பொறுப்பாளர், அண்மையில் கடவுச்சீட்டை ஜெனீவாவில் பறிகொடுத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

pic-4.jpg

சனல் 4 இரண்டாம் காணொளியில் படத்தில் இடப்பக்கம் இருக்கும் மூதேவி கேணைத்தனமா ஒரு கருத்துச் சொல்லி மூக்குடைபடுற காட்சி வருது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சிங்களவர்கள் இருப்பது நல்லது. சிங்களத்தின் முகத்திரையினை வெளிச்சம் காட்ட இவர்கள் உதவுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட சிங்களவனின் கூத்து தலைகாட்டுகிறது.

பின்னிருந்து உதவிய சிறி லங்கா ஜெனோசைட் தமிழரை ஓரங்கட்டியதன் வினை. 

Edited by BLUE BIRD

ஜெனீவாவில் இலங்கை அரச ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் UN காவல்துறையால் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது

19 மார்ச் 2012

sl%20journilist_CI.png

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை (19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், இலங்கை அரச ஆதரவாளர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட இலங்கை அரச ஆதரவாளர்கள் அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டதாகவும்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, இலங்கை அரச ஆதரவாளர்களின் அடாவடித்தனம் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில்; மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து, இந்த உப மாநாட்டினை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன.

அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.

இதில் குறிப்பாக இலங்கையில் கடந்த ஓரு ஆண்டுகாலமாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சந்ததயா எகலியகொட கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார்.

அத்துடன் இலங்கையில்; இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட இலங்கை அரச ஆதரவாளர்கள், எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில், தகாத வார்தைகளை பிரயோகித்தனர். இந்த நடவடிக்கையினை உப மகாநாட்டில் பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாக கண்டித்தனர்.

இது ஐ.நா மனித உரிமைச் சபை இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு இது இலங்கையல்ல இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென, இலங்கை அரச ஆதரவாளர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் இலங்கை அரச ஆதரவாளர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை;, இலங்கை அரச ஆதரவாளர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, இலங்கை அரச ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத.

குறித்த இந்த இலங்கை அரச ஆதரவாளர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை இலங்கை அரச ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75048/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் உள்ள ஒருவர் முன்னைநாள் ஊடகவியலாளர், பந்துல ஜெயசேகர. இவர் இந்நாள் சனாதிபதி ஊடக ஒருங்கிணைப்பாளர்

முன்னைநாள் டொராண்டோ உப தூதரக பொறுப்பாளர், அண்மையில் கடவுச்சீட்டை ஜெனீவாவில் பறிகொடுத்தவர்.

pic-4.jpg

விபச்சார விடுதிக்குப் போய்... அங்கு கடவுச்சீட்டை பறி கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

விபச்சார விடுதிக்குப் போகும் போது... யாரும் கடவுச்சீட்டுடன் போவார்களா?

சரியான... மாங்காய் மடையனாய், இருப்பான் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.