Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் தலைவிதி 23 ஆம் திகதியோடு மாறிவிடும்!-குணதாச அமரசேகர!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தலைவிதி 23 ஆம் திகதியோடு மாறிவிடும்!-குணதாச அமரசேகர!

resize_20120319204341.jpg

ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இதுதொடர்பாக குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.

அதேவேளை தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிந்து எமக்கெதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசிக் காலமாகும்.

இந்தியாவின் தலைவிதி எதிர்வரும் 23 ஆம் திகதியோடு மாறிவிடும். அந்நாடு துண்டு துண்டாகப் போகின்றது.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகத் தன்மையோடு இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாக பிரியும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வி கண்டாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரோபாயத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரோபாயம் தொடரும் என்றார்.

http://www.thedipaar.com/news/news.php?id=42988

தவளை தன் வாயால் கெடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பெரியவரின் வாக்குப் பலிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தலைவிதி 23 ஆம் திகதியோடு மாறிவிடும்!-குணதாச அமரசேகர!

resize_20120319204341.jpg

ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இதுதொடர்பாக குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.

அதேவேளை தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிந்து எமக்கெதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசிக் காலமாகும்.

இந்தியாவின் தலைவிதி எதிர்வரும் 23 ஆம் திகதியோடு மாறிவிடும். அந்நாடு துண்டு துண்டாகப் போகின்றது.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகத் தன்மையோடு இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாக பிரியும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வி கண்டாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரோபாயத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரோபாயம் தொடரும் என்றார்.

இது பலித்தால் நான் மொட்டையடிக்கவும் தயார்.

என்ன அடிப்படையேயில்லாமல் ஒரு கருத்தை வைக்கிறார் இவர். இந்தியா ஆதரவு வழங்கினால் தமிழ்நாட்டில் இந்திய ஒற்றுமைக்கான ஆதரவுதானே பெருக வேண்டும். இது எதிர் மறையான ஓர் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளதால் அந்நாடு துண்டுதுண்டாக சிதறப் போகிறது என்று இலங்கை தேசிய இயக்க தலைவர் குணதாச அமரசேகரா சாபம் விட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா கூறுகையில்,

ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.

தமிழ்நாட்டின் நெருக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிந்து இலங்கைக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி காலமாகும். இந்தியாவின் தலைவிதி வரும் 23ம் தேதியோடு மாறிவிடும். இந்தியா துண்டு துண்டாக சிறப்போகின்றது.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகமாக இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாகப் போகும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரம் தொடரும் என்றார்.

http://tamil.oneindia.in/news/2012/03/20/srilanka-lankan-leader-curses-india-be-broken-into-pieces-aid0176.html

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய இந்தியா சிதறும் போது, இலங்கை மட்டும், பத்திரமாக இருக்குமாக்கும்!

குணதாச அமரசேகரவின். அரசியல் வங்குரோத்து நிலையையே, இவரது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன!

இணைப்புக்கு நன்றிகள், நுணா!

இந்தியா ஆதரிக்காது ஆதரிக்கும் என்ற விடயம் தேவையில்லாத நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க இந்திய நாடகத்தில் இதுவொரு அங்கம். இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்.

காரணம் இது மனிதவுரிமை மீறல் சம்பந்தப்பட்டது. மற்றையது இந்தியப் பிராந்தியம் சம்பந்தப்பட்டது. தனது பிராந்திய நிகழ்வொன்றில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும் அடங்கால் இருக்காது.

சீனத்தின் காலூன்றல் தடுக்கப்பட வேண்டுமாயின் இந்தியா இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். பிரேரணை வெல்லப்பட்ட பின்பு அந்தப் பிரேரணையை நடைமுறைப் படுத்தும் தலைமைச் சக்தியாக இந்தியாதான் இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதன்போது வேறுபட்டதொரு ஆதிக்க நிலையை இந்தியா இலங்கை மீது கொண்டிருக்கும்.

மேலே நீங்கள் எழுதிய கருத்துக்கு, கீழே நீங்கள் எழுதிய கருத்தின் சாரம் தான் சிறந்த பதிலாக அமையும்.

என்ன அடிப்படையேயில்லாமல் ஒரு கருத்தை வைக்கிறார் இவர். இந்தியா ஆதரவு வழங்கினால் தமிழ்நாட்டில் இந்திய ஒற்றுமைக்கான ஆதரவுதானே பெருக வேண்டும். இது எதிர் மறையான ஓர் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய கூற்று எதிர்மறையாக இருந்தாலும் கூட தேவையான இலக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.