Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யும் - கொழும்பு ஊடகம் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UNHRC-meeting.jpg

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களை செய்வதற்குத் தலையிடும் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, அதில் இந்தியா திருத்தங்களை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்து குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்க இந்தியா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடுமாறு ஜெனிவாவிலுள்ள தனது நிரந்தர பிரதிநிதியை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நேற்றுக்காலை சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தார்.

இதையடுத்தே இந்த அறிவுறுத்தல் இந்தியப் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியதாக ஜெனிவாவிலுள்ள சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மற்றொரு கொழும்பு ஆங்கில ஊடகம், நாளை காலை அல்லது மதியத்துக்கு சற்று பின்னதாக சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120321105831

அமெரிக்காவின் தீர்மானத்தை அமெரிக்காதான் திருத்த முடியும்.

இந்தியாவால் இதை முன்வைக்க முடியவில்லை என்றால் ஒன்றில் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்.

எந்த முடிவு எடுக்கவும் பயமாக இருந்தால் சபையை விட்டு வெளிக்கிடலாம்.

கொஞ்சம் பொறுங்கோ.... எதுக்கும் உதவாமல் சபையை விடு வெளிக்கிடுவது என்று இருந்தால் பிறகு எதுக்கு அங்கே அங்கத்துவம் வேண்டி நிக்கேண்டும்? பேசாமல் தெரிந்த விடயங்களை செய்யலாம்.

அதாவது அருகில் இருக்கும் நாடுகளில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளை வைச்சு வயிறு பிழைக்கலாம். தூ........

  • கருத்துக்கள உறவுகள்

external monitoring மட்டும்தான் அமரிக்க தீர்மானத்தின் உயிர். அதனை திருத்தினால் அமரிக்கத்தீர்மானம் வெறும் செத்த சவம் மட்டுமே.இதனை வலியுறுத்தி தமிழர் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புகளும் கருத்துச் குரல் கொடுக்க வேண்டும்

Edited by poet

13ந் திருத்தத்தை புலிகள் ஆதரிக்கவில்லை. கூட்டமைப்பு 13+யை தன்னும் ஆதரிக்க வில்லை. 13 அல்லது 13+ அரசு ஆதரிக்கவிலை.

13ம் திருத்தம் ரஜீவ்-இலங்ககையின் கைவிடப்பட்ட ஒரு ஒப்பந்தம். இது பண்டா- செல்வா, செல்வா- டட்லி போன்று கைவிடப்பட்ட இன்னொரு உடன்படிக்கை. இந்தியா இதில் தலையை நுளைத்து தமிழருக்கு வர இருக்கும் தீர்வுகளை கெடுக்க கூடாது. 13+க்கும் சோல்பரின் தீர்வுக்கும் ஒரு பேதமுமில்லை.

ஆமை புகுந்த வீடும் இந்தியா புகுந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமில்லை./...

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை புகுந்த வீடும் இந்தியா புகுந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமில்லை./...

உண்மையான கருத்து.

அந்த நாட்டுக்கு, தரித்திரம் தான்... பிடிக்கும். :D

பிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா தீவிரம்! அமெரிக்கா வளைந்து கொடுக்குமா ?

Posted by SankathiWPadmin on March 21st, 2012

13-300x154.jpg

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் மூன்றாவது சரத்தில், திருத்தம் கொண்டு கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரம் காட்டிவருவதாக, இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும், தொழில்நுட்ட உதவிகளையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும், சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில், வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல் என பிரேரணையின் மூன்றாவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைத்தீவில் ஒரு சர்வதேச அங்கீகாரத்துடனான ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிகோலும் இந்த சரத்தினை பலவீனப்படுத்தி, ஐ.நாவின் பாத்திரத்தை இந்தியா வகிகப்பதற்கு இந்தியா தீவிரம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேரணையில் சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கூற்று, இதனையே கோடிட்டுக்காட்டியதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் மறைமுக இந்த இராஜதந்திர நகர்வுக்கு அமெரிக்கா வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளது.

பிரேரணயின் உள்ளடக்கில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு வாய்பில்லையென, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச்செயலர் றொபேட் ஒ பிளேக் ஏற்கனவே தெரிவித்துள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

நம்பகமான அமெரிக்க இராஜதந்திரச் செய்திகளின்படி, பிரேரணையில் திருத்தங்களை கொண்டுவருவதற்குரிய காலங்கடத்துவிட்டது என்பதுக்கு அப்பால், இந்த விடயத்தில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா விவகாரம் வல்லரசு நாடுகளின் சதுரங்க விடயம் மாறிவிட்ட நிலையில், அமெரிக்க -இந்திய பேரங்கள், இந்ந விவகாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன என்பது, பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் தெரிந்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://sankathi.com/news_wp/?p=807

பிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா தீவிரம்! அமெரிக்கா வளைந்து கொடுக்குமா ?

1000 கோடிக்கு அமெரிக்கா பாவித்த ஆயுதங்களை வாங்கா போகிறோம் என்றால் அமெரிக்கா வளைத்து மட்டுமில்லை உருகியும் கொடுக்கும்.

Edited by I.V.Sasi

கொழும்பு தான் இந்தியப் பிச்சைக்கார வெளிவிவகார நிகழ்ச்சி நிரலை தீர்மானிபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.