செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…
-
- 1 reply
- 629 views
-
-
முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்ம வெளிச்ச உருவங்கள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மர்ம வெளிச்சங்கள் தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/304171
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் ; ஆச்சிரியத்தில் விவசாயி மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை. திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது. குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பய…
-
- 1 reply
- 309 views
-
-
‘ஸ்ரீ’ என்ற சாதகமற்ற வார்த்தையின் காரணமாகவே கடந்த சில தசாப்தங்களாக நாடு பெரும் அழிவை சந்தித்திருக்கிறது என விஞ்ஞான எழுத்தாளரும் வானவியலாளருமான அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலை முதல் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தை அடங்கிய நிறுவனங்கள் திவாலாகியது வரை இந்த ‘ஸ்ரீ’ தான் காரணம், . இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான்” என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்த 1956 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டின் துரதிர்ஷ்டம் ஆரம்பமானது “வாகன இலக்கத் தகடுகளில் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் ப…
-
- 1 reply
- 645 views
- 1 follower
-
-
தகவல்களின் படி மன்னார் பள்ளி முனையில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் புலிகளின் செய்மதி தொலக்காட்ச்சிக்காக அன்ரனாக்கள் ஒன்பதையும்... டெக்கோடர்கள்ள் ஒன்பதையும் கைப்பற்றி விட்டனராம்.... அதோடு பத்து 12V பற்ரறிகளையும் கைப்பற்றி உள்ளனராம்... ஆதானாக பட்டது என்ன எண்றால் இலங்கையில் யாருமே பாவிக்காத சாமான் களை எல்லாம் புலிகள் கடத்தி வரும் போது... கைப்பற்ற பட்டு உள்ளன... இனிமேல் புலிகளால் செய்மதி தொலைபேசி உரையாடல் நடத்தும் திறன் இல்லை....! செய்தி defence.lk
-
- 1 reply
- 1.2k views
-
-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…
-
- 1 reply
- 808 views
-
-
மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ என்றழைக்கப்படும் அரியவகை மீன்! மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியது. இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்…
-
- 1 reply
- 503 views
-
-
எனக்கென்னவோ இதைப்பார்க்க என் தலைவன் தான் ஞாபகம் வந்தார் https://www.facebook.com/ankavai/videos/10158406607179506
-
- 1 reply
- 406 views
-
-
மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்: எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பத…
-
- 1 reply
- 530 views
-
-
பேதமில்லை…. சண்டே திவயின பத்திரிகையின் ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது, மகளின் திருமண வைபவம், கொழும்பு சினமன் கிரான் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பேதமில்லை/46-216557
-
- 1 reply
- 397 views
-
-
20 ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்படவிருக்கும் பிரபல சூயிங்கம் சுவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்’-டின் பிரபலமான பகுதியாக ‘சூயிங் கம் சுவர்’ விளங்கி வருகின்றது. இந்த சுவர் கடந்த இருபது ஆண்டுகளாக இவ்வழியே வந்துசெல்லும் மக்கள் மென்று ஒட்டிய சூயிங் கம்களால் நிரம்பி வழிகின்றது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தப் பழமையான அங்காடியின் பிரபலமான அங்கமாக விளங்கும் இந்த சுவரை பாதுகாக்கும் முயற்சியில் அதில் ஒட்டியுள்ள எச்சில் சூயிங்கமின் மிச்சங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படவுள்ளது. இந்த சுவர் சுமார் ஆறு அங்குல அளவுள்ள, பத்து இலட்சத்துக்கும் அதிகமான ‘சூயிங் கம்களை’ தாங்கி நின்றுகொண்டிருக்கின்றது. இந்த சுவர் இம்ம…
-
- 1 reply
- 413 views
-
-
இந்த பக்கத்தில கருத்து கணிப்பு நடத்தினம். http://thamilar.blogspot.com/2008/02/29-fe...4-80-6-591.html விடுதலைப் புலிகள் மீதான தடை கருத்துகணிப்பு, வாக்கு நிலவரம் 29 feb 08 சரி 14% தவறு 80% தெரியாது 6% மொத்த வாக்குகள் 591
-
- 1 reply
- 876 views
-
-
பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,0…
-
- 1 reply
- 339 views
-
-
ஸ்பெயின் நாட்டில், டிவியில் லாட்டரி முடிவு விபரங்களை நேரலை செய்துகொண்டிருந்த பெண் நிருபர் ஒருவர், லாட்டரியில் தனக்கும் பரிசு விழுந்திருப்பதை கண்டு உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். அங்குள்ள டிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் நடாலியா என்ற பெண், கிறிஸ்துமஸ் லாட்டரி முடிவுகளில் வென்றவர்கள் விபரத்தை நேரலையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனக்கும் சுமார் 4 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருப்பது கண்டு அதிர்ச்சியில் திளைத்த அவர், மகிழ்ச்சியில் துள்ளினார். https://www.polimernews.com/dnews/94017/லாட்டரி-முடிவுகளை-டிவியில்நேரலை-செய்த-பெண்நிருபருக்கு-லாட்டரி-பரிசு
-
- 1 reply
- 401 views
-
-
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த அத…
-
- 1 reply
- 695 views
-
-
பெண்ணின் உள்ளாடையில் இருந்த படி 6,400 கிலோமீட்டர் பயணித்த பல்லி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPCA படக்குறிப்பு, இந்த மார்பக உள்ளாடையில் தான் பார்பி பல்லி பாதுகாப்பாக பயணித்திருக்கிறது. பெண்களின் உள்ளாடையை விரும்பும் ஒரு பல்லி, பார்படாஸ் நாட்டிலிருந்து, பிரிட்டனில் இருக்கும் யார்க்ஷருக்கு விமானம் வழியாக பயணித்து வந்திருக்கிறது. பார்பி என்றழைக்கப்படும் அந்த பல்லியை லீசா ரஸ்ஸல் என்கிற பெண்மணி, தெற்கு யார்க்ஷரில் இருக்கும் தன் வீட்டில், தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் பிரித்து மீண்டும் சரி செய்யும் போது கண்டுபிடித்தார். "அது நகரத் தொடங்கிய போது, நான் கத்த…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
ஒரு சாண்ட்விச் தயாரிக்க 6 மாதம்... அப்படி என்ன ஸ்பெஷல்? யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ், நம்மூர் உணவான இட்லியோ, தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படிதான் செயல்படுவார். அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்குபடி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். என…
-
- 1 reply
- 382 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நவநீதம்பிள்ளையை வளைத்துப் போடலாம் என்ற இலங்கை அரசின் நப்பாசை கை கூடவில்லை. இலங்கை அரச படைகளின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதியாக இருக்கிறார். மனித உரிமை கவுன்சிலில் மேற்கு நாடுகள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தடுப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசு கங்க…
-
- 1 reply
- 492 views
-
-
இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளத…
-
- 1 reply
- 2k views
-
-
சனி 28-07-2007 04:31 மணி தமிழீழம் [சிறீதரன்] திலக் கருணாரட்ண ஐதேக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சிறீலங்காவின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் திலக் கருணாரட்ண தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பல காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாக எதிர்கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஜாதிககெல உறுமிய தொடர்பில் கூறிய கருத்துக்களும்இ சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றனவும் பதவிவிலகும் காரணங்களுள் அடங்குவதாக தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்கா இராணுவம் தொப்பிக்கலவில் பெற்ற வெற்…
-
- 1 reply
- 1k views
-
-
ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்…
-
- 1 reply
- 686 views
-
-
[size=3]அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்திலுள்ள கிளிவ்லண்ட் நகரில் ஒரு பாடசாலை பேருந்து மாணவர்களை ஏற்றியிறக்கும் போது அந்தப் பேருந்தைத் தவறான முறையில் கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் அங்கு மாட்டிவைக்கப்பட்டிருந்த வீடியோக் கமிராவினால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ் சாட்டப்பட்டார்.[/size] [size=3][/size] [size=3]இதனை விசாரித்த நீதிபதி 30 நாட்கள் வாகண சாரதிப்பத்திரத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், 250 டொலர்கள் அபராதம் விதித்ததோடு இரண்டு தினங்களிற்கு பாடசாலை மாணவர்களை இறக்கும் நேரத்தில் ஒரு பதாதைகையை தாங்கியபடி நிற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.[/size] [size=3]“ஒரு முட்டாள் தான் பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிஇறக்கும் போது கடந்து செல்வாள்” என்று எழுதப்பட்ட மேற்படி பத…
-
- 1 reply
- 691 views
-
-
கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பதிவு: ஜூலை 09, 2020 16:26 PM லண்டன் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து…
-
- 1 reply
- 383 views
-
-
ஹாலி ஹாண்டெரிச் பிபிசி செய்தியாளர், வாசிங்டன் 8 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.'என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?' என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மணி. இவரின் மகன் பெயர் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் எலெட்ஜின் கணவர் பெயர் எலியட் டக்ஹர்டி. (மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஆண்கள்). தன் மகன் மற்றும் அவரது கணவரின் அழகிய பெண் குழந்தையா…
-
- 1 reply
- 446 views
-
-
அண்மையில் சிறீலங்கா செல்ல ஒருவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் அவர் சிறீலங்காவுக்குள் நுளைவதற்கான காரணத்தை அலுவலகம் கேட்டபோது சுற்றுலா - உறவுகள் நண்பர்களை சந்திக்க என எழுதிக்கொடுத்தார் அவருக்கான விசா அனுமதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கான காரணமும் எழுதப்பட்டு Purpose of Travel: Tourist - Visiting friends and relatives (You are NOT permitted to use this ETA for any other purpose) இவ்வாறு ஒரு வரியும் சேர்க்கப்பட்டுள்ளது அதாவது போற வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு பொத்திக்கொண்டு வரணும் என்று அர்த்தம்.......
-
- 1 reply
- 426 views
-