செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அழுக்கு துணிகளுடன் சலவை இயந்திரத்திற்குள் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற பெண் [26 - August - 2007] ரஷ்யாவில் உள்ள கலின்கிராடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சலவை செய்வதற்காக அழுக்குத் துணிகளை சலவை இயந்திரத்திற்குள் போட்ட அந்த பெண், பிறந்து 2 வாரங்களே ஆன தனது ஆண் குழந்தையையும் அதற்குள் தூக்கிப் போட்டார். பின்னர் சலவை இயந்திரத்தை ஓட விட்டார். நல்ல வேளையாக அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், குழந்தை சலவை இயந்திரத்திற்குள் கிடந்து சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…
-
- 1 reply
- 926 views
-
-
ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்! ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் காய்க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள். தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர். சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார். 1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். …
-
- 1 reply
- 544 views
-
-
கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்! மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயத்தை மாற்றியதைக் கண்டித்து மதுரையில் திருநங்கைகள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதேபோல மாற்றுத் திறனாளிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம். தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். …
-
- 1 reply
- 554 views
-
-
“தலைக்கவசம் போட்டு வெங்காயம் விக்கிறான்… என்னத்த சொல்ல” Seeman News - இந்திய அளவில் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. நாடாளுமன்றம் வரை இது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது குறித்து கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய சீமான், “நம் நாட்டின் அரசு அனைவருக்கும் வாகனத்தையும் அலைபேசியையும் கொடுப்பதற்குத் திட்டம் வைத்துள்ளது. ஆனால் நீரையும் சோறையும் எல்லோருக்கும் வழங்குவதற்கு அதனிடம் திட்டம் கிடையாது. வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்த காரணத்தினால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போத…
-
- 1 reply
- 527 views
-
-
உலகின் குண்டுமனிதர் மாரடைப்பால் மரணம் மெக்சிகோ : மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டிரஸ் மொரினோ (38) உலகின் மிக குண்டான மனிதராக கருதப்பட்டார். இவரது எடை 450 கிலோ. தனது உடல் எடையை குறைக்க விரும்பிய மொரினோவுக்கு அக்டோபர் 28ம் தேதி எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து 100 கிலோவாக மொரினோவின் உடல் எடை குறைந்தது. மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வந்த மொரினோவிற்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மொரினோ உயிரிழந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1419322
-
- 1 reply
- 655 views
-
-
பற்றிஸினுள் தங்கமோதிரம் : காத்தான்குடியிற்கு போட்டியா.? மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது. இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்…
-
- 1 reply
- 352 views
-
-
Published By: T. SARANYA 20 APR, 2023 | 03:48 PM யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி சென்றதாக பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரைச் சேர்ந்த அரச குமார் கடந்த 16 ஆம் திகதி தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு நாட்டிக்கள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காலில் பிளாஸ்டிக் கட்டிய புறா ஒன்று அவரது நாட்டுப்படகில் தஞ்சமடைந்துள்ளது. புறா காலில் கட்டியிருந்த பிளாஸ்டிக்கில் சி…
-
- 1 reply
- 244 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்! . எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க... பயன்படுத்த பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன. அமெரிக்கா உட்பட சில நாடுகள் பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர். வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே பயிரிடுகின்றனர். …
-
- 1 reply
- 786 views
-
-
[size=4]இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமை 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மட்டும் வியாபார மற்றும் வர்த்தக நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.[/size] [size=4]கடந்த 2011 ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சமாக இருந்த கடன் தொகை, 2012 ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் உலக வர்த்தக சந்தைகளின் நிலையற்ற போக்கும் அதனால் நடந்த கடும் பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.[/size] [size=4]http…
-
- 1 reply
- 348 views
-
-
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தில் பூனையாருக்கு வேலை லண்டன் ஒயிட்ஹாலில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் அமைந்திருக்கும் கட்டடத்தில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால் பூனை ஒன்று வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முக்கியமான இல்லங்கள், அலுவலகங்களில் பூனைகள் வளர்க்கப்படுகின்றன. பிரிட்டனின் முக்கிய அமைச்சரும், ராஜதந்திரிகளும் பணியாற்றும் அந்தக் கட்டடத்தில் பாமெஸ்டோன் என்ற அந்தப் பூனையும் இனிப் பணியில் இருக்கும். ஆனால், இந்தப் பூனைக்கு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்படாது என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. பாமெஸ்டன் பூனைக்கு மக்களின் வரிப்பணம் செலவிடப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்தப் பூனை லண்டன் தெருக்களில் திர…
-
- 1 reply
- 414 views
-
-
போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …
-
- 1 reply
- 1.5k views
-
-
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 160 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரோஹ்டா மாவட்டத்தின் பட்டி கிராமத்தில் தலித்கள் வழிபடும் ரவிதாஸ் முனிவரின் சிலை ஒன்றுள்ளது. இந்த சிலையை அகற்றிவிட்டு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரரான நிஷாந்த் சிங் என்பவரின் சிலையை வைக்க வேண்டும் என உயர்சாதியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ரவிதாஸ் சிலையின் அருகே தலித் மக்கள் யாரும் சுதந்திர கொடியை ஏற்றக் கூடாது என்று உயர் சாதியினர் கட்டுப்பாடு விதித்தனர். அந்த கட்டுப்பாட்டை மீறி உள்ளூர் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அருண் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுகூடி தேசிய கொடியை ஏற்றினர். இதனால் ஆவேசமடைந்த உயர் சாதியினர், ரவிதாஸ் சிலையை அ…
-
- 1 reply
- 552 views
-
-
பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் …
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், …
-
- 1 reply
- 1.2k views
-
-
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் விரித்த காதல் வலையில் சிக்கிய பல நாள் திருடன் – பரிசுப் பொருட்களுடன் சந்திக்க வந்த போது பண்டாரகமையில் மடக்கிப் பிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பண்டாரகம – கல்துடே பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இரு தடவைகள் ஒரே பாணியில் திருடிய திருடனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தவறிய அழைப்பாக (missed Call) தொலைபேசி அழைப்பெடுத்து அதன் ஊடாக காதல் வலை விரித்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்…
-
- 1 reply
- 294 views
-
-
இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு,மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும…
-
- 1 reply
- 586 views
-
-
காணாமல்போன ஒன்பது மாணவர்கள் மீட்பு வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று (16) காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் (15) முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயிருந்தனர். https://newuthayan.com/காணாமல்போன-ஒன்பது-மாணவர்/
-
- 1 reply
- 449 views
-
-
[size=3] [size=4]பிரித்தானிய பத்திரிகை இன்றைய தினம் இந்த அதிர்ச்சி படத்தை வெளியிட்டது அமேசன் காடுகளில் கண்டு பிடிக்க பட்டுள்ள இந்த இனம் 26 அடி நீளம் உலயதாக காணப்டுகின்றது அமேசன் காடுகளில் மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு அதிர்ச்சி படங்கள்.[/size][/size] [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size]
-
- 1 reply
- 1.6k views
-
-
இதற்கும் லாட்டரி . மரானோ, பிப். 22: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரிச் சீட்டை வாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியிலோ வித்தியாசமாக கல்லறையில் இடம் பிடிப்பதற்காக லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா
-
- 1 reply
- 975 views
-
-
http://youtu.be/0l4hBxwP_ng இஸ்ரேல் உட்பட்ட சில நாடுகளில்.. எஜமானர்கள் வேலைக்குப் போனாலோ.. பள்ளிக்கு போனாலோ.. நாய்கள் வீட்டில் தனித்து விடுகின்றன. அப்புறம்.. அதுகளுக்கு போர் (bore) அடிக்குமில்ல.. அதைப் போக்க.. ரிவி லோன்ஞ் பண்ணி இருக்காங்கப்பா..! அதுமட்டுமா இஸ்ரேலில்.. நாய்க்கு பீச்.. அமெரிக்காவில் நாய்க்கு டிஸ்னி லாண்ட் என்று.. அதுங்க வாழ்வு மனிசங்க வாழ்வை விட ரெம்ப கனதியா இருக்கப்பா..! மனிசரோ.. ஒரே சுடுபாடு.. வெட்டுக்குத்து.. கண்ணீரும் கம்பலையும் கேம்ஸில.. சீரியலில காலம் கழிக்கிறாங்க.. நாய்களோ.. அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டு மனதை றிலாக்ஸ் பண்ணிக்குதுங்க...! இந்த மனிசங்கட காசு பார்க்கிற வியாபார மூளையை.. விளங்கிக்கவே முடியல்ல.... ! http://youtu.be/…
-
- 1 reply
- 358 views
-
-
அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும் நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது. ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது. 4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில்…
-
- 1 reply
- 524 views
-
-
-
- 1 reply
- 613 views
-
-
நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார். அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட…
-
- 1 reply
- 1.2k views
-