செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர…
-
- 1 reply
- 460 views
-
-
தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு, வீடியோ ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. அதில், பேசிய நபர், “பார்த்திங்கதானே அனுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல (pavement) வந்து அப்பிள் வாங்குறாங்கக, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அனுரட கேம்” என்று அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்கின்றார். அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் எந்த பேமெண்டு என்று சரியாக தெரியவில்லை. அதேபோல, குரல்கொடுத்த நபரும், எந்த பேமெண்டு என்று கூறவே இல்லை. Tamilmirror Online || இந்த ஐயா யாரென தெரியுதா?
-
- 0 replies
- 460 views
-
-
இங்கிலாந்தில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் உட்கொண்ட 25 வயது பெண் ஒருவர், போதையில் தனது 4 மாத குழந்தை மீது டிவியை தூக்கிபோட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் மீது போலீஸார் வழக்கு தொடுத்துள்ளனர். 25வயது பெண் ஒருவர் நேற்று காலையில் அளவுக்கதிகமாக ஹெராயின்,வேலியம் மற்றும் ஆல்கஹால் முதலியவற்றை உட்கொண்டு, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் உடைத்து இருக்கின்றார். ஒரு கட்டத்தில் டிவியை தூக்கி, தனது நான்கு மாத குழந்தையின் தலையில் போட்டு உடைத்திருக்கின்றார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்கு பலனளிக்காமல் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. அளவுக்கு அதிகமான பலவித போதைபோருட்களை ஒன்றுசேர்த்து உட்கொண்ட காரணத்தால்,…
-
- 0 replies
- 460 views
-
-
யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். …
-
- 4 replies
- 460 views
- 1 follower
-
-
கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......
-
- 2 replies
- 460 views
-
-
ஊழல் செய்த அரசியல்வாதியை குப்பைத்தொட்டிக்குள் வீசிய பொதுமக்கள்... நம்ம நாட்டில் இப்படி நடக்குமா.??? https://www.facebook.com/tamilkey/videos/1062299690448184/
-
- 3 replies
- 460 views
-
-
வெசாக் கொண்டாட்டத்தின் போது தானம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாட இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர் ஒருவரே சக மாணவனால் கத்தியால் குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. பானாகொட கொம்பெலா பிரதேசத்தில் தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மாணவர்கள் சிலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த மாணவன் வலுக்கி விழுந்தே மரணமடைந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்மாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 460 views
-
-
தொழில் செய்வதற்காக மனைவியிடம் கணவர் பணம் கேட்பதை வரதட்சணையாகக் கருத முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அளித்த வரதட்சணைப் புகாரின்பேரில், விஜயகுமார், அவரது தந்தை தெய்வராமன், தாயார் காமாட்சி, சகோதரிகள் வெண்ணிலா, தேன்மொழி மீது, திருச்சி போலீஸார் 2008-இல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, திருச்சி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விஜயகுமார் உள்பட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு எதிராகப் போலீஸில் புகார் அளித…
-
- 2 replies
- 460 views
-
-
இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்) வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏ…
-
- 3 replies
- 459 views
-
-
ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது. கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/world.php?vid=877
-
- 0 replies
- 459 views
-
-
பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார். ''எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை…
-
-
- 3 replies
- 459 views
- 1 follower
-
-
உலகத்தில் இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன் அறியப்பட்டிருந்தது. இன்று அதேபோன்ற இராணுவப்படுகொலைகளும் அராஜக இனவாதிகளின் அவஸ்த்தைக்குள்ளும் சிக்குண்டு மக்கள் சிதைந்து சீரழிந்துபோன நாடாக ஸ்ரீலங்கா இருந்து வருகிறது. உலக மாற்றங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எத்தகைய அறிவுரையை இடித்துரைத்தாலும் செக்கு மாட்டின் சுழற்சியிலிருந்து ஸ்ரீலங்காவின் சிங்கள ஆதிக்கவாதிகள் மாறவுமில்லை, ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு உவப்பாக அயல் நாடான மேய்ப்பன் இந்தியா விட்டுவிலகவுமில்லை. மனித அழிவுகளுக்கிடையே தொடங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு என்ற பஞ்சாயத்து படலம் 30 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டு முடிவுக்கு வராமல்,…
-
- 0 replies
- 459 views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது இரட்டை அர்த்தத்தில் பேசுகின்ற தனது பழைய வழக்கத்தை இன்னமும் கைக்கொள்கின்றது என்பதை அண்மையில் இத்தீவில் இடம்பெற்று வரும் அரசியற் திருப்பங்கள் மூலம் இனங்காண முடிகின்றது. சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவுடனான தொப்புள்கொடி உறவைப் பேணும் அரசியலை மையமாகக் கொண்ட சிறிலங்காவின் நவீன வரலாறானாது உறுதிமொழிகளை நிறைவேற்றாமை, மொழி சார் அடக்குமுறை, பரஸ்பர அவநம்பிக்கைகள், போன்ற பல துரோகச் செயல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. தமிழ்த் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்வதற்காக 30 ஆண்டு காலமாகப் போராடியவர்களும், உலகின் அதி மோசமான ஈவிரக்கமற்ற கொலையாளிகள் என வாதிடப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 ல் தோற்கடிக்கப்பட்டமையானது, சிறிலங்கா அரசானது இது வரை காலமும…
-
- 0 replies
- 459 views
-
-
சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக் கற்களும், கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை, பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அங்கு இருந்த விலைமதிப்புள்ள கற்களையும் , கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதே போன்று பல கொள்ளைச்சம்பவங்கள் ஏற்கனவே பிரான்சில் நடந்துள்ளன. ஜூலையில்தான், 136 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகள் பிரென்சு நகரான கேனில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. 'ரோஜா சிறுத்தைகள்' ( பிங்க் பாந்தர்ஸ்) என்றழைக்கப்படும் ஒரு கிரிமினல் குழுதான் இதைச் செய்திருக்கவேண்டு…
-
- 0 replies
- 459 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் துப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரே ஆண்டில் சுமார் 300 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்திருக்கிறது. உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யானை காந்திமதியின் செயல் உத்வேகம் அளித்துள்ளது. 50 வயதான கோயில் யானை காந்திமதி, கடந்த ஆண்டு 4450 கிலோ எடை கொண்டிருந்தது. 2019 டிசம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமில் அதிக எடை இருப்பதாகவும், எடை அதிகரிப்பு காரணம…
-
- 0 replies
- 459 views
-
-
கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதிவு: ஜூலை 13, 2020 14:36 PM வாஷிங்டன், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 459 views
-
-
#இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது. வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார். #நான்_களவாடியது_உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால்வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.. "என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்…
-
- 1 reply
- 459 views
-
-
மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? – (காணொளி இணைப்பு) கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 459 views
-
-
ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்த…
-
- 1 reply
- 459 views
-
-
தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி எடுத்த மகன்- வாழைச்சேனையில் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த செயற்பாட்டுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக…
-
- 1 reply
- 459 views
-
-
ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா
-
- 2 replies
- 459 views
-
-
8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த பொம்மை வீடு முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அமெரிக்க கொலராடோ மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கலைஞரான எலெயின் டியஹ்ல் என்பவரால் 29 அறைகளைக் கொண்ட மேற்படி பொம்மை வீடு உருவாக்கப்பட்டுள்ளது. அவர் இந்த பொம்மை வீட்டை உருவாக்க 13 வருடங்களை செலவிட்டுள்ளார்.அத்துடன் அவர் பல தச்சு வேலை செய்பவர்கள், கண்ணாடி சிற்பக் கலைஞர்கள், வெள்ளி பொருட்களை செதுக்குபவர்கள் ஆகியோரின் உதவியுடன் மேற்படி பொம்மை வீட்டிற்கு தேவையான சின்னஞ்சிறு தளபாடங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை வடிவமைத்துள்ளார். அத்துடன் இந்த பொம்மை வீட்டிற்காக 7,000 அமெரிக்க டொலர் ப…
-
- 0 replies
- 459 views
-
-
இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…
-
- 1 reply
- 459 views
-
-
6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - ஏன் நடந்தது இந்த சம்பவம்? 8 நவம்பர் 2021 படக்குறிப்பு, கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன் ஹரிஹர தீபன் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது? திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஹரிஹர தீபன் (6) என்ற மகன் உள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனை…
-
- 2 replies
- 458 views
- 1 follower
-