Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ர…

  2. 32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் - கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய முதலாளி

  3. டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக 30 வயது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பாதுகாப்புப் படையினர் வந்து காப்பாற்றட்டும் என அலட்சியமாக இராமல், உடனடியாக் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியுள்ளனர் சக பயணிகள். யோசனை... மஞ்சி வாண்டு தான்... ரயிலை லேசாக சாய்த்தால், அப்பெண்ணை உடனடியாக மீட்டு விடலாம் என அங்கிருந்த சிலர் ஐடியா கொட…

    • 8 replies
    • 731 views
  4. அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர். ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆ…

  5. 33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் …

    • 7 replies
    • 512 views
  6. 33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் - கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாச…

  7. 33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா சின்னத்தங்கம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். பொன்னையா நமசிவாயம் மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் திகதி பொன்னையா, சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ…

    • 1 reply
    • 270 views
  8. சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு…

  9. 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி விமானத்தின் தலைமை விமானி மாரடைப்பினால் மரணம்! 2016-03-04 14:41:10 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றின் விமானி, மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் நிறுவனமென்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சவூதி அரேபியாவின் பிஷா நகரிலிருந்து, தலைநகர் றியாத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. சுமார் 220 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தலைமை விமானியான வலீத் பின் மொஹம்மத் அல் மொஹம்மத்துக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்போது அவரே விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  10. 345,000 பயன்படுத்திய ஆணுறைகள் மீட்பு : வியட்நாமில் பரபரப்பு வியட்நாம் பொலிஸார் சுமார் 345,000 பயன்படுத்திய ஆணுறைகளை பறிமுதல் செய்துள்ளனர். அவை சுத்தம் செய்யப்பட்டு புதியவையென மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தவாரம் வியாட்நாம் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறைகள் தெற்கு மாகாணமான பின் துவாங் நகரில் ஒரு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பைகள் 360 கிலோகிராம் (794 பவுண்ட் ) எடையுள்ளதாகவும் அவற்றுள் 345,000 அணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணொளிக் காட்சிகளி…

  11. தனது பெயரில் 35 எழுத்துக்களைக் கொண்ட ஹவாய் தீவுப் பெண்மணிக்காக, அமெரிக்க மாநிலங்களில் அடையாள அட்டைக்கான அமைப்பு மாற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சேர்ந்த பெண்மணி மறைந்த அவரது கணவரின் பெயரையும் சேர்த்து Janice "Lokelani" Keihanaikukauakahihuliheekahaunaele என 35 எழுத்துக்களில் தனது பெயரைக் கொண்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தில் பாதி பெயர் விடுபட்ட நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மனம் நோகும்படி தன்னிடம் நடந்துகொண்டதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து ஹவாய் போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் ஸ்லைட்டர் இந்த ஆண்டு இறுதிக்குள், ஓட்டுநர் அடையாள அட்டையில் 40 எழுத்துக்களைக் கொண்ட பெயரினை ப…

    • 5 replies
    • 740 views
  12. 35 குழந்தைகளை பெற்றெடுத்த தந்தைக்கு 100-ஐ எட்டுவது தான் லட்சியமாம்: பாகிஸ்தானியரின் வினோத ஆசை குழந்தைகளுடன் சர்தார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 100 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் லட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே 35 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள அவர், லட்சியத்தை அடைய 4-வது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கில்ஜி (46). மருத்துவ துறையில் பணியாற்றி வரும் சர்தாருக்கு ஏற்கெனவே 3 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் மூத்த குழந்தைக்கு 15 வயதும், கடைக்குட்டிக்கு 2 வாரங்களும் வயது ஆகிறது. இந்நிலையில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது…

    • 6 replies
    • 421 views
  13. 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன். களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர்…

      • Like
      • Thanks
      • Sad
    • 9 replies
    • 809 views
  14. ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு சில வருடங்களில் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும், அதை கட்டிய நபர் உயிர்வாழ்வதாகக் கூறுவார்கள். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற பெண்ணோ, 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த வீடு கட்டுவதற்காக செயற்கையான எந்தப் பொருளையும் உபயோகிக்காமல் கருங்கற்கள், மொசைக்கற்களின் துண்டுகள் என்று இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து ‘க்ளோ கன்’ எனப்படும் பசை ஒட்டும் இயந்திரத்தின் உதவியுடன் அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக ஒட்டி இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு 35 வருடம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கப் போவதில்லை. ஓய்வுக் கால…

  15. பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் உடலின் முழு உருவம் கிடைத்துள்ளது.பிரான்சின் Rennes நகருக்கு அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலய பகுதி ஒன்றில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரபுகளின் குடும்பத்தினர் இந்தப் பேழைகளில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றில் ஒரு பெட்டியை திறந்தபோது, அதில் பணக்காரப் பெண் ஒருவரின் உடல் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அந்த உடலை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வெளியே எடுத்து வந்து பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதன்முடிவுகளின் அடிப்படையில் அந்தப் பெண், எப்படி இறந்தார், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்…

    • 0 replies
    • 413 views
  16. 36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்! வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான். இதையடுத்து அந்தப் பெண் மீது பாலியல் வல்லுறவு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது. இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர். நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே…

    • 13 replies
    • 7.6k views
  17. 37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்: இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்! துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் மிர்சான் என்பவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுக் கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் கொன்றுவிடக்கூடும் என்பதால், தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணம் அடைந்தாலும், அது அவரை விட்டுச் செல்லவில்லை. அதற்குக் கரிப் என்று பெயரிட்டுத் தானே வளர்க்க ஆரம்பித்தார். அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டுப் பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத…

  18. 38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது! 8 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர். சோதனையின் போது, அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அ…

  19. எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம் புரண்டது. இதனால் வெங்கட்ராவின் வாழ்க்கை ஸ்டைல் மாறியது. கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான பணத்துடன் டிப்டாப்பாக திடீர் பணக்காரராக வலம் வந்த வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது. வெங்க…

  20. 385 மில்லியன் செலவில் கொழும்பில் புதிய உதைபந்தாட்ட மைதானம் [12 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சுகததாச விளையாட்டு அரங்குக்கு அடுத்தபடியாக சர்வதேச தரத்திலான ஒரு உதைபந்தாட்ட அரங்கை கொழும்பில் அமைப்பதற்கான அடிக்கல்லை, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நாட்டி வைத்தார். இவ்வைபவத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற விவகார அமைச்சர் எம்.எச். முகமட்டும் கொழும்பு சிற்றி லீக்கின் முன்னாள் தலைவர் எப்.ஏ. யூசீனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தில் மேற்படி லீக்கின் செயலாளர் எம். பிரேமதாச உரையாற்றுகையில் கூறியதாவது; "1902 ஆம் ஆண்டு எமது லீக் உருவானது.…

  21. 39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…

    • 3 replies
    • 316 views
  22. மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர். நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைச…

  23. 39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்... 39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர். Play Mute Current Time1:06 / …

  24. 39 மனைவிகள் ,94 பிள்ளைகள் & 33 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன் ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ‘சனா’ என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய குடும்பத் தலைவனாய் திகழ்கிறார். 39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா . குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர். ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் ,75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம் தன் குடும்ப உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது http://www.dailymail.co.uk/news/article-1358654/The-world…

  25. (அப்பாடி, நம்ம தமிழ் சிறியர் வருவதற்க்கு முதல் ஓடி வந்திடம் - இந்த திரி தொடங்க ) சாமியார்: ராகவேந்திர பாரதி சுவாமி பெங்களூர்: பலாத்கார புகாருக்கு உள்ளாகியுள்ள கர்நாடகாவை சேர்ந்த பிரபல மடாதிபதி ராகவேந்திர பாரதி சுவாமிகளை கைது செய்ய தடை விதிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த, பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார். ஆண்டவரின் கிருபை இறங்குகிறது.. இந…

    • 10 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.