Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்

  2. இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…

  3. கூகுள் மேப் பயணத்தால் ஓடையில் இறங்கிய கார் - மயிரிழையில் தப்பிய குடும்பம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவின் கோட்டயத்தில் கூகுள் மேப் செயலி உதவியுடன் ஒரு மருத்துவரின் குடும்பம் பயணம் செய்த கார், இரவில் ஓடையில் இறங்கியது. நல்வாய்ப்பாக அந்த காருக்குள் இருந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நடந்துள்ளது. சம்பவ நாளில் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ், மூன்று மாத கைக்குழந்தை எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் பயணம் செ…

  4. கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும் நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கே…

  5. உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துவந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு சுமார் 30 நிமிடங்கள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, உடல் நலம் கருதி 2 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு தி…

  6. அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்! புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்தி…

  7. அடுத்த சந்ததிக்கு எதை தான் விட்டு செல்கிறோம்??

  8. . Monday, 18 July 2011 05:39 பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.பட்டுப்புøடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் …

  9. சவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹ…

  10. சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…

  11. கடந்த வருடம் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் வ…

  12. 28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை [07 - June - 2008] லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். 63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார். இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார். தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் …

  13. ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…

    • 0 replies
    • 277 views
  14. யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள…

  15. மெக்சிகோவில் புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்டோபா நகரில்(Cordoba) உள்ள சிறிய தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 14 ஆம் தேதி வங்காள புலிக்குட்டி பிறந்தது. முதுகெலும்பு உடைந்த நிலையில் சர்க்கஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 8 வயது தாய் புலிக்கும் வாயில் காயத்துடன் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 வயது தந்தை புலிக்கும் பிறந்த குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. இது, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்துக்கு புது நம்பிக்கை அளிப்பதாக சரணாலயத்தை நடத்துபவரின் மகளும் மருத்துவருமான கிட்ஸியா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/105027/மெக்சிக்கோவில்-புதிதாகபிறந்த--புலிக்குட்டிக்கு-”க…

    • 0 replies
    • 293 views
  16. 50 வருடங்களின் பின் மீளவும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட குழு. 1962 ஆம் ஆண்டு பாடசாலை ரக்பி விளையாட்டு நிகழ்ச்சியின்போது புகைப்படமெடுத்துக் கொண்ட 16 பேரும் 50 வருடங்கள் கழித்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொண்ட அபூர்வ சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஹம்ஷியரிலுள்ள போர்ட்ஸ்மவுத் கிரம்மர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு 50 வருடங்களின் பின் வயோதிப வயதில் ஒன்றாக புகைப்படமெடுத்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு 16 மாணவர்கள் 50 வருட காலமாக உயிருடன் இருந்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் நிகழ்வு 250,000 க்கு ஒன்றென்ற வீதத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வாகும். நன்றி வீரகேசரி.

  17. [size=3] [/size] பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழருக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து 7-11-2012 முதல் 9-11-2012 வரை உலகத் தமிழர் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்கின்றன. இம்மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஓர் அரங்கில் நடைபெறுகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவை குறித்து அய்.நா. பேரவையின் முயற்சியில் சர்வதேசச் சமூகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். அதாவது, சிங்கள அரசின் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ இல்லாத வகையில் சர்வதேச நாடுகள் இடம்பெறும் சுதந்திரமான விசாரணைக் குழு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை …

  18. தனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்! தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபரா…

  19. அமெரிக்காவில் பயங்கரம் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை வாஷிங்டன், அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு இந்திய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த 4 வயது மகள் பால்கனியில் அழுதுகொண்டிருந்த சம்பவம், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி. இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்…

  20. 'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…

  21. யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆறு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீடுகளுக்குச் சென்றிருந்த கும்பல், பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் ம…

  22. செல்வபுரம்... வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது! முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்…

  23. மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!! திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஐதீகம் பக்தரின் கனவில் தோன்றும…

  24. வட்டமாகச் சப்பாத்தி சுடாததால், கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்! வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.வட்டமாக வராத சப்பாத்தி: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு …

  25. ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது December 1, 2021 ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். “கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆலயத்திலிருந்த பொருள்களும் திருட்டுப் போயிருந்தன. அதுதொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.