செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
வீரகேசரி இணையம் - பதிமூன்று கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஜுராசிக் யுகத்தை சேர்ந்த டைனோசரின் சாணம் ரூ.40 ஆயிரத்துக்கு ஏலம் போய் உள்ளது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் கடந்த புதன் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த சாணம் ஏலம் விடபட்டதாம்.கோடிகணக்கான ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கல் போன்று இறுகி போயிருந்த சாணம் ஜுராசிக் யுகத்தைச் சேர்ந்தது என்று ஏல நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாய் மற்றும் பூனைகளின் கழிவுகளை விற்பனை செய்யும் ஸ்டீவ் ட்சென்காஸ் என்பவர்,டைனோசர் சாணத்தை ஏலத்தில் எடுத்துள்ளார்.நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் இந்த சாணத்தை வைத்து விளம்பரபடுத்தி எனது வியாபாரத்தை பெருக்குவேன் என்று ஸ்டீவ் நம்புவதாக கூறியுள்ளார்.இந்த ஏலத்தில் நண்டு போன்ற வடிவில்…
-
- 0 replies
- 993 views
-
-
ஆந்திர மாநிலத்தில் புகழ்மிக்க பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிம்மாசலம் எனப்படும் மலையில் அமைந்திருக்கும் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் இரு தினங்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் பணத்துக்கு நடுவே ஒரு காசோலை கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை. காரணம் அந்தக் காசோலையில் நூறு கோடி ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப் பக்தர் ஒருவர் கோயிலுக்கு 100 கோடி ரூபாவுக்குக் காசோலை செலுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. திருமலை திருப்பதியிலேயே ஒரே காசோலையாக நூறு கோடி ரூபா கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் உடனடியாக உண்டியல் எண்ணும் பணியில் ஈட…
-
- 8 replies
- 993 views
- 1 follower
-
-
உண்மைதேடி இலங்கையில் புதியதலைமுறை என்ற தலைப்பில் தமது எட்டுநாள் களப்பணியின் தொகுப்பை நேற்றைய தொடர்ச்சியாக இன்று இரவு 8:30 முதல் அரைமணிநேரம் ஒளிபரப்பியிருந்தது புதியதலைமுறை தொலைக்காட்சி. யாழ்ப்பாணத்தில் பார்த்ததைப்போன்றே கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் இனம்புரியாத ஒரு அச்சசூழ்நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளதை இன்றைய ஒளிபரப்பிலும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது. (தற்போது தாயகத்தில் எதுவும் இல்லை. புலத்தில் உள்ள சிலர் தமது நலன்களை தக்கவைப்பதற்காக கட்டவிழ்த்து விடப்படும் செய்திகள்தான் ஈழத்தில் பிரச்சினை இன்னும் இருப்பதுபோல் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது எனக் கூறும் தமிழர்கள் இப்போது அந்த மக்கள் சொல்லும் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகின்றீர்க…
-
- 5 replies
- 993 views
-
-
1971 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் ஒரே மாதிரியான நாட்காட்டி.! மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல், போர்கள் என சாமானியர்கள் முதல் செல்வந்தவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரை பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு ‘கலண்டர் அதிசய’ ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971ம் ஆண்டு கலண்டரும்…
-
- 10 replies
- 991 views
-
-
வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப்படம் பிடித்த பெண் கைது வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப் புகைப்படமெடுத்த நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க விடுதியில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது கையடக்க தொலைபேசியால் படம்பிடித்துள்ளார். இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப…
-
- 0 replies
- 991 views
-
-
குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது: ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத் துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது. இந்நிலையில், 2011-ல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங் குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கல…
-
- 2 replies
- 990 views
-
-
புது வருடத்தில் நுளையும் போது “ஐயையோ எனக்கு ஒரு வயது கூடப் போகிறதே” என வருத்தப்படும் சில வயதுக்கு வந்த பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஐப்பானில் ஒரு பெண் தன் வயது ஏற ஏற பெருமிதம் கொள்கிறார். Tanaka என்ற ஒரு பெண்ணுக்கு இந்த வருடம் ஜனவரி இரண்டாம் திகதி 117 வயதாகி இருக்கிறது. இவர்தான் இன்றைய நிலையில் உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தில் இருக்கிறார். எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாக 1903ம் ஆண்டு பிறந்த Tanka 1922இல் திருமணம் செய்து தனது கணவனுடன் நூடுள்ஸ்-அரிசி விற்கும் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். தனது கணவணின் மறைவுக்குப் பின்னர் தனியாகவே அந்தக் கடையை இவர் நடத்தி வந்திருக்கிறார். இன்று ஓய்வூதியம் பெறும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான Tankaவுக்கு ஐந்து…
-
- 10 replies
- 989 views
-
-
[size=4]டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் தனது மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஓம் சாந்தி சர்மா டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராகுலுக்கு வரதட்சணையாக ரூ. 15 கோடி கொடுக்க அவர் தயாராக உள்ளார்.[/size] [size=3][size=4]இது குறித்து மிட் டே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,[/size][/size] [size=3][size=4]ஓம் சாந்தி சர்மா என்ற பெண் தனது மகளுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மஞ்சள் நிற…
-
- 2 replies
- 989 views
-
-
பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…
-
-
- 12 replies
- 988 views
- 1 follower
-
-
பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உள்ள உறவை கூறுவதில் தயக்கம் இல்லை: திக்விஜய் சிங் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தனக்கு உள்ள உறவை ஒப்புக்கொண்டுள்ள 67 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், விரைவில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமிர்தா ராய் என்ற அந்தப் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு தானும், திக் விஜய் சிங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து திக் விஜய் சிங் தனது காதலை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திக்விஜய் சிங் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமிர்தா ராயுடன் தனக்கு உள்ள உறவை கூறுவதில் தன…
-
- 5 replies
- 987 views
-
-
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=33836
-
- 5 replies
- 987 views
-
-
முகநூலின் ஊடானது.
-
- 23 replies
- 986 views
- 1 follower
-
-
புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி புயலில் சிக்கி நிக்கொலஸ் மெக்காபே என்ற சிறுவன் உயிரிழந்தான். அச்சிறுவன் கல்விகற்ற பாடசாலையின் கட்டிடத்தை புயல் தாக்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் நிக்கொலஸின் மைத்துனியான சிறுமியொருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அச்சிறுமிக்குப் பின்னால் இன்னுமொரு உருவம் இருப்பது அவதானிக்கப்பட்டது. அந்த உருவம் புயலில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகன்தான் என நிக்கொலஸின் தந்தை ஸ்கொட் மெக்காபே அதிர்ச்சி தர…
-
- 11 replies
- 986 views
-
-
துபாயில் லிஃப்டுக்குள் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 17ஆம் தேதி புர்ஜ் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார். அப்போது உள்ளே இருந்த அந்த பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென்று அந்த வாலிபரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், வாலிபரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து லிஃப்டுக்குள்ளேயே போட்டுள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தியுள்ளார். அபோது அந்த வாலிபரை பலவந்தமாக கட்டியணைத்து வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளா…
-
- 14 replies
- 985 views
-
-
திண்டுக்கல்: பழனி அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதன் வாழ்ந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி நரிப்பாறையை அடுத்து நீண்டமலைத் தொடர் உள்ளது. சுமார் 1000 அடி உயரம் உடைய இம்மலைத் தொடரில் சாமியார் மலை, பொன்னி மலை என்ற 2 குன்றுகள் உள்ளன. இங்கு கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி, கோவில் கட்டிடக்கலை நிபுணர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இரண்டு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள்…
-
- 0 replies
- 983 views
-
-
தீக்குச்சியில் சிற்பம் . அயோவா, மே 30: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கிறாராம் அயோவாவை சேர்ந்த பேட் ஆக்டன் என்பவர். . ஹாரிபாட்டர் படத்தில் வரும் ஹோக்வார்ட்ஸ் பள்ளியின் மாதிரியை தீக்குச்சிகளை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறாராம் இவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு 6 லட்சத்து 2 ஆயிரம் தீக்குச்சிகளை பயன்படுத்தி இதனை உருவாக்கி இருக்கிறாராம். சிறு வயது முதலே மரக்குச்சிகளை கொண்டு வித்தியாசமான வடிவங் களை உருவாக்கி வருவதில் ஆர்வம் கொண்ட இவர், ஹாரிபாட்டர் நாவலை படித்து அதனால் மிகவும் ஈர்க்கப்பட்டு இதனை உருவாக்கினாராம். 30 ஆண்டுகளாக இது போன்ற வித்தியாசமான மரச் சிற்பங்களை வடிவமைத்து வரும் இவர் முதன் முதலாக 500 தீக்கு…
-
- 0 replies
- 983 views
-
-
புலிகள் தமிழீழத்துக்காகச் செய்தால் கட்டாய இராணுவப் பயிற்சி... பயங்கரவாதம். அதையே சிங்களவன் செய்தால் என்ன ஒரு விளக்கம். Can conscription establish a disciplined society?Military training for civilians Public Security Minister Rear Admiral (Retired) Sarath Weerasekara recently proposed in Parliament that youth above 18 years should be conscripted into military service. One of the main objectives is to instill discipline among civilians and encourage leadership qualities. He said that nobody should fear about a military training and that it is an attempt to take a step closer towards establishing a law-abiding nation. However the duration of training, intensity and…
-
- 0 replies
- 982 views
-
-
யெனீவாவில் குழுமிய தமிழர்களின் ஒங்கிணைப்பையும் ஒன்றுபாட்டையும் வெளிப்படுத்திய செய்தியையே மொன்றியலின் நாளேடு மேற்கண்டவாறு தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஷபல்லாயிரக்கணக்கான மக்கள் யெனீவாவில் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தினர்.| எனும் பெருந்தலைப்பின் கீழ் ஓர் செய்தி நிறுவனத்தின் செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு மொழியில் வெளிவரும் அந்தச் செய்தி ஏட்டின் ரொரன்ரோப்பிரிவு குடிவரவாளருக்கு எதிரான பழமைவாதப் போக்கையே கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி வருமாறு: காவல்துறையின் கணிப்பின் படி 9000 தமிழ் மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஐ.நாவிடம் தமிழர்களின் தனியான ஓர் அரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினர். ஐ.நாவின் முன்றலில…
-
- 0 replies
- 982 views
-
-
பெண்கள் 30, ஆண்கள் 40 வயதுக்கு பிறகுதானாம் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர்! [Tuesday, 2014-04-22 07:54:12] பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை க…
-
- 8 replies
- 982 views
-
-
சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…
-
- 3 replies
- 982 views
-
-
[size=3][size=4]ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]யூத மதத்தின் புனித மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டளையை அந்த மத குரு பிற…
-
- 15 replies
- 982 views
-
-
"பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற விருப்பத்தின் அளவில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில், நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை, 63வது இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகள், முறையே, 75 மற்றும் 77வது இடங்களில் உள்ளன. ஆப்ரிக்க நாடான, நைஜீரியா, 80வது இடத்தை பிடித்துள்ளது. இது போன்றதொரு ஆய்வு, 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தை பிடித்த, சுவிட்சர்லாந்து, இந்த முறை முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.ஆறாவது இடத்தை, சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை, நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை க…
-
- 7 replies
- 981 views
-
-
பெண் சாமியின் ஆறு கொலை... போலிச் சாமியார்களில் ஆணும் பெண்ணுமாக பக்த கோடிகளுக்கு பட்டை நாமம் சாத்திய பலரை நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். காம களியாட்டம் தாண்டி கொலை வரை போன சாமியார்களும் புதுசில்லை. ஆனால் பெங்களுரு போலீசின் பிடியில் இப்போது இருக்கிற மல்லிக சாமியாரின் கொள்ளை கொலை பிரதாபங்கள் முதுகெலும்பை உறையவைக்கும் ரகம் அதை படிப்படியாக பார்ப்போம். பெங்களுருக்கு அருகே உள்ள படிக்கட்டே என்ற ஊரைச் சேர்ந்த கனுமாப்பா என்பவரின் மனைவி மல்லிக. இவர்களிற்கு இரண்டு மகள்கள். ஒரு மகன் படிக்கட்டேவில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து வாரந்தோறும் ஏலச் சீட்டு நடத்திவந்தார் மல்லிகா. ஒரு கட்டத்தில் ஏலத்தில் சீட்டெடுத்தவர்கள் பணம் கட்டாமல் போக..மல்லிக தலையில் அத்தனை சும…
-
- 0 replies
- 981 views
-
-
மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இ…
-
- 12 replies
- 980 views
-
-
அதிகூடிய ஊதியம் பெறும் அரச தலைவர்கள் - 2010 1. Lee Hsien Loong (Singapore): $2,183,516 2. Donald Tsang (Hong Kong): $513,245 3. Raila Odinga (Kenya): $427,886 4. Barack Obama (United States): $400,000 5. Nicolas Sarkozy (France): $302,435 6. Stephen Harper (Canada): $296,400 7. Mary McAleese (Ireland): $287,900 8. Julia Gillard (Australia): $286,752 9. Angela Merkel (Germany): $283,608 10. Yoshihiko Noda (Japan): $273,676 http://finance.yahoo.com/news/Top-10-Highest-Paid-investopedia-1388928230.html?x=0
-
- 4 replies
- 978 views
-