Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 2014 புது வருட பட்டாசு வான வேடிக்கை: துபை உலக சாதனை? இந்த புது வருடத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதில், துபை கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. துபை, பாம்(Palm Islands) தீவுகளின் மீதும், உலகத்(World Islands) தீவுகளின் மீதும் தொடர்ந்து கொளுத்தப்படபோகும் மிகப் பிரமாண்டமான பட்டாசு வான வேடிக்கைகள், சென்ற வருடம் குவைத் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடிய வான வேடிக்கை திருவிழாவை விட அதிக நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வானில் வெடிக்கப் போகிறது. குவைத் தனது வான வேடிக்கையில், 77,282 பட்டாசு வகைகளை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மணி நான்கு நிமிடம் வரை தொடர்ச்சியாக வெடித்து ரசிகர்களை மகிழ்வித்து கின்னஸ் சாதனை நிகழ்த்திக் காட்டியது.…

  2. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…

  3. அமெரிக்காவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் ஒருவனின் பேஸ்புக் காதலில் சிக்கி யுவதியொருவர் சின்னாபின்னமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் யுவதியே வாலிபனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்றத்தால் யுவதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். வாலிபனுடன் காதல் வசப்பட்டு, இணையத்தில் தனது உடலை காட்டியுள்ளார் யுவதி. இவற்றை வாலிபன் படம்பிடித்துள்ளான். பின்னர் வாலிபனை பற்றி அறிந்து கொண்ட யுவதி, அவனை விட்டு விலக முயன்றுள்ளார். எனினும், படங்களை வைத்து யுவதியை மிரட்டிய வாலிபன் அவரை தனது பிடியை விட்டு விலகவிடாமல் வைத்திருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த யுவதி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார் . இந்த வாலிபன் மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதியும் , தொழில…

  4. உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள். வரலாறுகள் எங்களுக்கான ஆட்சி எல்லைகளையும், அதனை ஆட்சி செய்த மன்னர்களது பெருமைகளையும் பதிவு செய்துள்ளபோதும், தமிழர்களாகிய நாம் இன்னமும் அடிமை வாழ்வுக்குள் புதையுண்டு போய், வாழ்விழந்து கிடக்கின்றோம். புதிய வரலாறு எழுதப் புறப்பட்ட விடுதலைப் புலிகளது போர்க் களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பினை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் பிளவுண்டு போயுள்ளோம். எமக்கு நாமே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கை நாம் தகர்த்தெறிய முடியாதவர்களாகக் கட்டுண்டு போயுள்ளோம். முள்ளிவாய்க்காலின் பின…

  5. திருப்பூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு ஒரு சில அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நூதன போராட்டங்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நேற்று நடந்தது. அங்கு கழுதை, இரண்டு நாய்களின் கழுத்தில் மாலைகள் அணிவித்து மணமக்கள் போல் அ…

    • 3 replies
    • 789 views
  6. ரூ.21 லட்சம் பணத்துடன் சீனரின் சடலம் எரிப்பு: மகன்கள் கைவிட்டதால் கடைசி ஆசை சீனாவில், ஒரு மனிதரின் கடைசி ஆசைப்படி அவர் சேமித்து வைத் திருந்த சுமார் ரூ.21 லட்சம் அவரின் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் பட்டது. அவரின் இரு மகன்கள் அவரைப் புறக்கணித்ததால், பணத்தையும் தன்னுடன் சேர்த்து எரிக்க வேண்டும் என அவர் தனது கடைசி ஆசையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி தாவோ. இவர் தனது சேமிப்பான ரூ.21 லட்சத்தை தனது மகன் களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. அவரின் இறுதிக்காலத் தில் இரு மகன்களும் அவரைக் கவனித்துக் கொள்ளாதது அவ ருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் விவசாய நிலத்ததை இரு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவ…

  7. துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! Mar 1, 2026 - 09:23 AM வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி…

  8. சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம் August 2, 2020 கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது சுயேச்சைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர். பளையில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்துக்காக சிறிதரன் புறப்…

  9. கடந்த வாரம் கேளராவை சேர்ந்த ஒருவருக்கு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. பிபிசி செய்தியாளர்கள் செளதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரஃப் படானா இந்த கொடூர கொலை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை விளக்குகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 வயது சூரஜ் குமார் உலகின் ஆபத்தான விஷப் பாம்பான நல்ல பாம்பை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்தியாவில் பாம்பை விற்பது சட்டவிரோதம். எனவே யாருக்கும் தெரியாமல் பாம்பை விலைக் கொடுத்து வாங்கினார் சூரஜ் குமார். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் காற்று போவதற்காக ஓட்டை போட்டு அதில் பாம்பை வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார் சூரஜ். 13 நாட்கள் கழித்து அந்த டப்பவை ஒரு பையில் போட்டுக் கொ…

  10. யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடு…

  11. கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்... இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது. இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற…

  12. நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது நெல் வயலில் நாக பாம்பு தீண்டிய நிலையில் அந்தப் பாம்பை தேடிப் பிடித்து தானே தன் வாயால் கடித்து கொன்று விட்டார். அதுமட்டுமன்றி நாகம் தீண்டிய அவரும் மருத்துவ மனையில் இருந்து எந்த உயிர் ஆபத்தும் இன்றி விடுவிக்கப்பட்டும் விட்டார். நாக பாம்பு கடித்தால் அதனைக் கடித்து கொன்றுவிட்டால் பாம்பின் விசம் மனிதனைத் தீண்டாதாம்... என்பது இந்த நேபாளி மனிதரின் கருத்து. அதற்காக மக்கள் இவரின் கருத்தை செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாம்புக் கடி கண்டவர்கள் கீழ் வரும் முதலுதவிகளை செய்து கொண்டு அல்லது பெற்றுக் கொண்டு.. தகுந்த மருத்துவ மனையை நாடுவதே சிறப்பு. பாம்பை தேடிப் பிடித்து கடிக்கப் போய் வீணே மரணத்தை தழுவாதீர்கள்..! guidelines issued…

  13. பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 9, 2012 AT 22:19 மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.…

  14. சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- எனது மனைவி செல்வ செழிப்பானவள். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய வி‌ஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை மாறவில்லை. என் மனைவி என்னை…

    • 3 replies
    • 763 views
  15. கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்…

  16. உலகின் பல நாடுகளில் நிலவும் சில பாரம்பரியங்கள் சில நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையே ஐப்பானியர்களிடையே காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் பிடிக்கப்படும் புளூபின் டூனா (Bluefin Tuna) மீன் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் அந்த டூனா மீன் ஏலத்தில் ஆச்சரியப்படவைக்கும் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏலத்தில் விடப்பட்ட 243 கிலோ எடையுள்ள டூனா மீன், 2.8 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு கிலோ டூனாவின் விலை 11,413 யூரோக்கள். இவ்வளவு விலைக்கு அந்த மீன் தரமானதா, சுவை…

  17. அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்…

    • 3 replies
    • 522 views
  18. சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…

  19. காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf

  20. புது டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில பிரபல சாமியார் ராம்பால், பபிதா என்ற இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார் என்று அம்மாநில போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் 42 முறை ஆஜர் ஆகச் சொல்லி ஹரியானா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காமல் இருந்த சாமியார் ராம்பாலை , இறுதியாக ஒரு வாரம் போராடி துப்பாக்கிச் சண்டையிட்டு கடந்த மாதம் 20 ஆம் தேதி கைது செய்தனர் போலீஸார். பின்னர் அவரின் ஆஸ்ரமத்தில் இருந்து ஏராளமான ஆவணங்கள்,ஆயுதங்கள்,கர்ப்பம் கண்டறியும் கருவிகள், மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் கைபற்றப்பட்டன. இந்நிலையில், ஹரியானா மாநில போலீசார், ராம்பாலிடம் உதவியாளராக பணியாற்றிய இளம்பெண் பபிதா வைக் கைது செய்து …

  21. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சிரிப்புக்கான புதிய சட்டம் ஒன்றை ஜப்பானிய மாகாணம் ஒன்று கொண்டுவந்துள்ளது. ஜப்பானின் யமகடா (Yamagata) மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. இதன்படி, மக்கள் தினசரி சிரிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது. யமகடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு எப்படி உதவும் என்பதைக் காட்டுகிறது. விமர்சனம் ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிர…

  22. மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது. நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தாலும் மேற்சொன்ன பலனே அமையும். நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையு டன் வாழ்வார்…

  23. [size=4]எகிப்து நாட்டில், முழுக்க முழுக்க பெண்கள் பணியாற்றும், "டிவி' சேனல், வரும் ரம்ஜான் மாதத்தில், நிகழ்ச்சிகளை துவக்குகிறது. எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் தலைமையிலான குடும்ப ஆட்சி, கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது.[/size] [size=4]தற்போது, அங்கு ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. முகமது முர்சி அதிபராகியுள்ளார். முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில், கடுமையாக கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.[/size] [size=4]இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம்…

  24. அங்காரா: விமானியின் உளவியல் பிரச்சனை காரணமாக ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து நடந்ததை தொடர்ந்து கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் படி விமானிகளுக்கு துருக்கி விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அந்த விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி "ஜெர்மன்விங்ஸ் விமானி லுபிட்சை அவரது காதலி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட உளவியல் சிக்களால் தான் அவர் விமானத்தை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. எனவே விமானிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் விமானிகளை விரைவில் திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். மேலும் பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.