Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது. இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பி.எஸ்.ராமையா இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய…

    • 2 replies
    • 3.4k views
  2. பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். இறைவனை மட்டுமே வணங்குதலும், மனிதர்களை வாழ்த்துதலுமே தமிழர் மரபு. சேர மன்னன் குடும்பத்துடன் கானகம் சென்ற போது 'வாழ்க எம்கோ' என மக்கள் வாழ்த்தினர். அவ்வாறே 'வாழ்க நீ எம்மான்' என அரசர்களைப் புலவர்கள் வாழ்த்துதலே தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது. சம்ஸ்கிருத மொழிக்கலப்பால் பிற்காலத்தில் வணக்கம் மனிதர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது. சம்ஸ்கிருதத்தில் அவர்கள் `நமஸ்காரம்' என்று கூறியதை நாம் வணக்கம் எனத் தவறாக மொழிமாற்றம் செய்து, மனிதர்களையும் வணங்க ஆரம்பித்தோம். மனித வணக்கம் என்பது தமிழர் பண்பாட…

  3. ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் .. முன்னுரை ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இந்நூலில் மொத்தம் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் காணப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றுத் திணைகளில் ஐந்தாவது திணையாகவும் மற்றும் இறுதித் திணையாகவும் இடம்பெறுவது முல்லைத் திணையாகும். இம்முல்லை நிலமே ஆய்வுக்களமாக அமைகின்றது. இம்முல்லைத் திணையின் ஆசிரியர் பேயனார் ஆவார். இத்திணையில் செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து…

    • 1 reply
    • 3.3k views
  4. வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன். படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்) 3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு 4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன். 5) குஞ்சாகப் பொர…

    • 9 replies
    • 3.3k views
  5. முதிர்கள்ளி முரிமுள்ளி முதல்வாகை முதல்ஈகை முட்காரைவேல் வெதிர்நெல்லி விடத்தேறு வெட்பாலை இவையெல்லாம் இரணிய வதைப் பரணியில் கூறப்படும் பாலை நிலத்து மரங்கள். இதில் வாகை என்ற மரம் தமிழர்களின் களிப்பை உணர்த்துவதாகும். சங்க காலத்தில் போரில் வெற்றிப் பெற்றால் மன்னரும் வீரரும் வாகைப் பூவை சூடி வெற்றிக் களிப்பை கொண்டாடுவார்கள் என இலக்கியங்களில் காணப்படுகிறது. இன்றும் "வெற்றி வாகை சூடினான்" என்று பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். வெற்றிப் பெற்றவர்கள் வாகைப் பூவை சூடுவதாலே இந்தப் பெயர் வந்தது. இது பாலை நிலத்திற்குரிய பூவாகும். இது விடுதலைப் புலிகளின் காலத்தில் தேசிய மரமாகவும் கொண்டாப்பட்டது. மேலும் இது வெட்சி, கரந்தை, தும்பை, வாகை என புறத்திணைகளில் ஒரு வகையாகும். இதில் …

  6. நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு முன்னுரை. தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும். தோழி தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர். தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்ற…

    • 0 replies
    • 3.3k views
  7. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி படைப்புகள் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0193.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 1 /பூகம்பம் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0194.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 2 /காஞ்சி முற்றுகை http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0195.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 3 /பிக்ஷுவின் காதல் http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0201.pdf சிவகாமியின் சபதம் /பாகம் 4 /சிதைந்த கனவு ------------------------------------------------------------------------------------------------------------ http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0214.pdf பார்த்திபன் கனவு /பாகம் - 1-2 h…

  8. தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழ…

  9. இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை நன்றியுடன் போற்றும் தினமாகும். இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ் பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல்…

  10. முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம் (“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்”) உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே. மாரீசன் …

  11. Started by akootha,

    பழந்தமிழ் இலக்கியத்தில் எனக்குப் புரியாதவள் ‘தாய்க் கிழவி’. பிரபந்தங்களில் கணிகை ஆடல் அழகியாக இளவயதினளாகச் சித்தரிக்கப்படுவாள். அவளுடைய தாய், கிழவியாக, க்ரூபியாக இருப்பாள். பாட்டுடைத் தலைவனுடைய மனத்தைக் கவர்ந்து கைப் பொருளை இழக்க வைக்க அவள் தான் கணிகைக்கு வழி சொல்லித் தருவாள். பொருள் எல்லாம் போனபிறகு அவனை வீட்டை விட்டு இறக்கிவிட முன்முயற்சி எடுப்பவளும் இந்தத் ‘தாய்க் கிழவி’யே. வர்ணனைகளை வைத்துப் பார்த்தால் கணிகைக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும். அவளுக்கு அம்மா ‘தாய்க் கிழவி’. தாராளமாக சிக்ஸ்டி ப்ளஸ் வயசு சொல்லலாம். ஆக தாய்க்கும் மகளுக்கும் வயசு வித்தியாசம் நால்பத்தஞ்சு. அப்போ, 45 வயதிலா பிள்ளை பெற்றுக் கொண்டாள்? இந்த ‘சிந்தனை’யின் நீட்சி, பழந்தமிழ் இலக்கியத்த…

  12. எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.! தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? "19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை …

  13. மறைக்கப்பட்ட வரலாறுகள் மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்.... உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புத…

    • 1 reply
    • 3.2k views
  14. அபிராமி பட்டர் விழாவை ஒட்டி பிரசூரிக்கபடுகிறது..09.02.2013. அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஒரு இந்து மத துறவி ஆவார். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது. சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் த…

  15. Started by pryanka,

    தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…

  16. 1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" *** இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும் குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள் பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன், …

  17. "உயர் வள்ளுவம்".பற்றிய இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.

  18. இணையத்தில் மனம் போன போக்கில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும்போது சட்டென்று பாரதிதாசனின் இந்த கவிதை தென்பட்டது. ஏற்கனவே படித்த ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடலெங்கும் ஒரு பரவசம்... இந்தப் பரவசம் உங்களையும் தழுவட்டும்... இந்தப் பாடலை வாசித்தும் பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்தது. பெண்கள் நீலவண்ண பாவாடை அணிந்து வெண்ணிற சட்டை அணிந்து வருவார்கள். இந்த உவமை சரியா வரும்தானே "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை" நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்…

  19. ஏதோ ஒரு திரியில் கிருபன் எழுதிய பின்னோட்டத்தில் “இரும்பைத் தின்று கசாசயம் குடிப்பவர்” என்ற சொற்றொடரைப் பார்த்தேன். இதற்கு முன்னர் இதனைக் கேள்விப்பட்டதில்லை. மிகவும் சுவாரசியமானதும் வினைத்திறன் மிக்கதும் ஆன இநதச் சொற்றொடர் வாசிக்க வாசிக்க அர்ததம் கிளம்பும் ஆழம் மிக்கதாய் மலைப்பேற்படுத்துகிறது. இது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கா, அல்லது இலக்கியத்தில் எழுந்ததா என்று தெரிய ஆவலாக உள்ளது. நிச்சயமாக இது ஈழத்தமிழரின் பாவனையில் உருவான சொற்றொடராயே இருக்கும் என்று எனக்குப் படுகிறது. யாரும் அறிந்தால் அறியத் தாருங்கள். அது போல், இவ்வாறான அரிதாகப் பாவனையில் இருக்கும் ஆழமான இனிமைனயான சொற்றொடர்கள் பேச்சு வழக்குகள் அறிந்தவர்கள் இத்திரியில் பின்னூட்டம் இடுங்கள். நாங்களும்…

  20. 'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' : வேந்தன் சரவணன் on 01-07-2009 06:23 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம். 'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே' ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு…

  21. 'படிமப்புரவு: பிரசன்ன வீரக்கொடி | பட விளக்கம்: தமிழரின் பண்டைய வீரர்களைக் குறிக்கும் படங்கள் ஏதும் கடந்த வருடங்களாக உருவாக்கப்படாதலால் சிங்களவரின் பண்டைய வீரர்களை சித்தரிக்கும் படங்களை பயன்படுத்தலானேன். ' வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பெடியள் - ஈழத்தில் இவ்வாறு போராடியவர்களை இச்சொல் குறித்து நின்றது. படைவீரன்/ வீரன் = Soldier | மேலதிக விளக்கங்களிற்கு: போரியல். அன்றும் இன்றும் - வீரர்கள் வகை: 2.5 படைவெறியர் - இது ஈழத்தில் மட்டுமே …

  22. தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…

  23. எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவ…

  24. ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்?

  25. மணிமேகலையின் காதலும் துறவும்.. மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக…

    • 1 reply
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.