பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள் பண்டைய தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. போரில் இறந்த வீரனுக்கு மட்டுமல்லாது, தன் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிக்கும் கூட நடுகற்கள் நடப்பட்ட செய்தி வியப்பை தருகின்றது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே இருப்பது கண்டறிப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடுகல் வரலாறு: பண்டைய தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் நடுகல் பற்றிய செய்திகள் விரவிக் கிடப்பதை காண முடிகின்றது. திருக்குறளில், “என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர்” என போரில் இறந்த பகைவர் கல்லாகி நின்றதாக குறிப்பிடப…
-
- 4 replies
- 16.6k views
-
-
பேராசிரியர் தனிநாயக அடிகள் வ.அய்.சுப்பிரமணியம் [ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தனிநாயக அடிகளார் நெடுந்தீவில் 1913 ஆகஸ்டு 2ஆம் திகதி பிறந்தார்.அவர் 1980 செப்ரெம்பர் 1ஆம் திகதி காலமானார். அவரின் நூற்றாண்டுவிழா சில மாதங்களின் முன்பாக கனடாவிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.அவரின் நீண்டகால நண்பரான பேராசிரியர் சுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக இருந்தவர்.அவரின் கட்டுரையின் 'தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்' கீழே தரப்படுகிறது] 1944ஆம் ஆண்டு, கோடைகால விடுமுறையின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் துவங்கின. நான்காம் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் பாதிரி உடையணிந்து மிடுக்கான நடையுடைய ஏறத்தாழ முப்பது வயதினர் ஒருவர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி'யின் அற்புதங்கள். உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" - சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன். "நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்" - ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.? தொகையும் பாட்டும் சங்க இலக்கியமென்று தமிழ்க்கூறும் நல்லுலகம் போற்றி வந்தது. தமிழிலக்கயத்தில் சங்கப் பாடல்களை நோக்குமிடத்து அகம், புறம், அகப்புறம் என்று பாகுபாடு செய்துள்ளனர். இது பாடற்பொருளின் தன்மை நோக்கிச் செய்யப்பட்ட பாகுபாடாகும். சங்கப்பாடல்கள் மொத்தம் 2381. இதில் புறப்பாடல்களை விட அகப்பாடல்களே அதிகமானவை. காரணம், பண்டைய தமிழ்ச் சமூகம் களவு, கற்பு என்னும் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகும். இந்நெறியானது களவில் அரும்பி கற்பில் மலர்கிறது. அகவாழ்க்கையில் தலைமக்களாகத் தலைவன், தலைவி, கருதப்பட்டாலும், தோழியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அகத்திணையின் உயிர்ப்பண்பாகக் காதலர் தம் மனவொற்றுமை இருக்கும் போது தலைவன…
-
- 0 replies
- 3.4k views
-
-
பூநகரிக் கோட்டை . வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பாரது கருத்து. 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவ…
-
- 0 replies
- 908 views
-
-
இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார். 1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்... ‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான். அவனை தீர்த்து கட்ட சின்ன மருது,பெரிய மருது,வேலு நாச்ச்சியார் தலைமையில் மூன்று போராளி குழுக்கள் அமைக்கப்ப்பட்டன. சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேச்வரம் கோவிலில் விஜயதசமி அன்று பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஐதீகம். அதைப்பயன்படுத்தி வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் போராளி குழு உள்ளே நுழைந்து ஆங்கில நவாப் வீரர்களை தாக்கினர். முற்றிலும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன பான்ஜோ…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 1 reply
- 593 views
-
-
நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்? "தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" " இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. த…
-
- 19 replies
- 20.4k views
-
-
மாவீரர் நினைவுச் சின்னம் கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். video link: http://www.ziddu.com/download/7387407/maaverer.flv.html எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொன்னியின் செல்வன் உரையாடல் இடம்பெறும் வேளையில் பொருத்தமாக இருப்பதோடு பலரும் அறியவேண்டிய விடயங்கள் சில உள்ளன. நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 523 views
-
-
உலகின் மிக உயரமான கோபுரம் ! முருதேஸ்வர் கர்நாடகா உலகின் மிக உயரமான கோபுரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை உள்ள இடம். நன்றி! அருண் குமார். (https://www.facebook.com/arun.mk.794)
-
- 3 replies
- 2.5k views
-
-
https://app.box.com/s/pl5qk9f0jqv5iqlvzdgtnvcfhju9apbj தொழூஉப் புகுத்தல் – 16 மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள் யார்? உடம்பொடு உயிர் புக்கவள் இன்று ஓ ஓ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவன் (முல்லைக்கலி 102: 8-12) பொருள்:- வீரனுக்கு வாழ்க்கைப்பட விரும்பும் பெண்கள் தாமாகவே முன்வந்து தமது முடிவைத் தெரிவித்தனர் என்றும், அச்செய்தி பலமுறை பறையறிந்து தெரிவிக்கப்பெற்றது என்றும், அவர்களுள் ஒருத்தியே தனது மனதில் இடம் பிடித்தவள் என்றும் உறுதி செய்து கொள்கிறான் ஒரு வீரன். செம்மொழித் தகமையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ் 41லும் வீரர்களின் காதலி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …
-
- 0 replies
- 679 views
-
-
மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது. தமிழி: பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் …
-
- 0 replies
- 2.3k views
-
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன. (மேலே: சுடுமண் காதணிகள் | கீழே: தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள்.| வலது: இறக்குமதி செய்யப்பட்ட அணிகலன்கள்) இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியி…
-
- 2 replies
- 556 views
-
-
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! யானையின் தமிழ்ப்பெயர்கள்: யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது பு…
-
- 4 replies
- 923 views
-
-
கன்னடப் பெரியாரை தந்தை என்று சொல்லத் தெரியும்.. தெலுங்குப் பூர்வீக கருணாநிதியை தந்தை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.. சொந்த தாய் தமிழ் .. நாம் தமிழர்.. தந்தை இவரை அண்ணன் சீமான் சொல்லித் தான் தெரியுது..! இந்தளவிற்கு தமிழர் வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்திருக்கு தமிழ் நாட்டில..! !!! தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலையிட்டு மரியாதை ! இன்று நாம் தொடங்கியிருக்கும் 'நாம் தமிழர்' கட்சி என்பது சீமான் அவர்கள் தொடங்கியது இல்லை . அது 'தினத்தந்தி' பத்திரிக்கையின் முன்னாள் அதிபர் மறைந்த பெரியவர் சி.பா . ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்டது . செந்தமிழ் பேசும் தமிழ் நாட்டிலே தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை இல்லையே... எல்லாம் பார்ப்பனன் கையி…
-
- 3 replies
- 9.8k views
-
-
மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது. இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன. தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், …
-
- 15 replies
- 6.5k views
-
-
http://www.youtube.com/watch?v=h1TQ7ItEifQ&feature=youtu.be
-
- 3 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,PRABU படக்குறிப்பு, குண்டு ரெட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு சார்பில் அகழாய்வு நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 40 நிமிடங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டம் நீண்ட நெடிய வரலாற்று சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆதியூர் முதல் கோடியூர் வரை எட்டு திசைகளிலும் 10 திருத்தலங்கள் அமைந்திருப்பதால் திருப்பத்தூர் என்ற பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் திருப்பத்தூரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது பிரம்மபுரம், திருப்பேரூர…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை கேள்வி : ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே பதில் :அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர். பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை. வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்…
-
- 2 replies
- 4.7k views
-
-
மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…
-
- 0 replies
- 3.5k views
-
-
வணக்கம் கள உறவுகளே !! படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம் . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடை…
-
- 14 replies
- 1.5k views
-
-
2500 ஆண்டுகளுக்கு முன்பே.... உலோகங்களை பிரித்தெடுக்கும், தொழிற்சாலை அமைத்த தமிழன்! காணொளியை, முழுமையாக பாருங்கள்......
-
- 0 replies
- 408 views
-
-
சிலம்பு அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்சில் 4வது ஆண்டாக இடம்பெறும் தமிழர் திருநாள் நிகழ்வின் தொகுப்பு.
-
- 0 replies
- 625 views
-