சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 18 கோடிக்கும் மேற்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு, சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனி மற்றும் கனமழையுடன் கூடிய ஒரு பெரும் குளிர்காலப் புயல் தாக்கவுள்ளது. தெற்குப் பகுதி முதல் வடகிழக்கு வரை பரவலான பனிப்பொழிவு மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனிக்கட்டிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் நேரம் மற்றும் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன. தெற்கு, மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை பெரிய, பரவலான குளிர்கால புயல் தாக்கும். நியூ மெக்ஸிகோ மற்றும் டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்தின் சில பகுதிகள் வரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பனிக்கட்டி மற்றும் கடுமைய…
-
-
- 5 replies
- 318 views
- 1 follower
-
-
டெல்லியின் வாயு மாசுபாட்டால் கொழும்பிலும் பாதிப்பு Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 01:15 - 0 - 18 கொழும்பு நகரின் வாயு மாசுபாடு சாதாரண நிலையை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டெல்லி நகரத்தில் வாயு மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக கொழும்பில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்தியாவின் டெல்லி நகரத்தில் வாயு மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் அந்த நகரை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை…
-
- 5 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 31 ஆகஸ்ட் 2025, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன. இறந்து போன நாகப் பாம்பு, கட்டு விரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி? முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம…
-
-
- 5 replies
- 368 views
- 1 follower
-
-
எரியும் அமேசான் காடு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை. படத்தின் காப்புரிமை Getty Images 2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது. படத்தின் காப்புரிமை Getty Images அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிர…
-
- 5 replies
- 1.9k views
-
-
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறு…
-
- 4 replies
- 473 views
-
-
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி, ஓநாய், யானை எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. பல விலங்குக்கு அடுத்த வேளை உணவே இன்னொரு விலங்குதான். இங்கே சிங்கம் சைட் டிஷ்ஷுக்காக ஓடும், மான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். ஒன்றிடமிருந்து இன்னொன்று தப்பிக்க எவ்வளவோ முறைகளை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஓர் உயிரினம் இருக்கிறது, இது வரை கேள்விப்பட்ட உயிரினங்களைப் போல இல்லை இது. அவ்வளவாக தன்னுடைய வளையை விட்டு வெளியே வராத உயிரினம், வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத உயிரினம். சுருக்கமாகச் சொ…
-
- 4 replies
- 3k views
-
-
நீரஜ் பிரியதர்ஷி பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC படக்குறிப்பு, தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார். பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம், ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை. இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்கள…
-
- 4 replies
- 945 views
-
-
வடக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கனடாவின் வட மேற்குத் தீவுக் கூட்டங்களுக்கு அருகாக இருக்கும் விசாலமான தீவு கிறீன்லாந்து. ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கிறீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவாகும். சுயாட்சி அடிப்படையில் டென்மார்க்கினால் நிர்வகிக்கப் படும் கிறீன்லாந்து, பெரும்பாலும் பனியால் மூடப் பட்டிருக்கும் ஒரு நிலப் பரப்பு. வடக்கே இருக்கும் ஆர்க்ரிக் எனப்படும் பூமியின் வட துருவத்தோடு உறைந்த பனிப்பாறைகளால் இணைக்கப் பட்டிருப்பதால், வட துருவத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முனையும், ஆனால் வட துருவத்தின் எல்லையில் அமைந்திருக்காத நாடுகளுக்கு, எப்போதும் கிறீன்லாந்து மீது ஒரு கடைக் கண் பார்வை உண்டு. வட துருவ ஆராய்ச்சி என்ற போர்வையிலும், பனிப்போர் காலத்தில்…
-
- 4 replies
- 2.6k views
-
-
அமெரிக்கா- கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ்: நிபுணர்கள் எச்சரிக்கை! அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ் வரக்கூடுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அழிவை ஏற்படுத்தும் வெப்பநிலை வீழ்ச்சியடைவதால் வெறும் தோலில் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உறைபனி ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சக்திவாய்ந்த ஆர்க்டிக் குளிர்கால புயல் 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வருடத்தின் பரபரப்பான பயண நாட்களுக்கு முன்னதாக வார இறுதி வானிலை எச்சரிக்கைகளின் கீழ் வைத்துள்ளது. எச்சரிக்கைகள் கடற்கரையிலிருந்து கடற்கரை வரை நீண்டு தெற்கே அமெரிக்கா- மெக்சிகோ எல்லை மற்றும் புளோரிடா, சன்ஷைன் மாநிலம்…
-
- 4 replies
- 324 views
- 1 follower
-
-
https://youtu.be/-yHj2DtiaUA
-
- 4 replies
- 649 views
-
-
பட மூலாதாரம்,SRIRAM MURALI/WPY 54 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு வினோதமான மற்றும் குதிரைலாட நண்டின் படம், லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் (WPY) என்ற விருதைப் பெற்றுத்தந்துள்ளது. தங்க நிறத்தில் உள்ள இந்த நண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் பங்கடாலன் தீவில் தண்ணீருக்குக் கீழ் பகுதியில் அடிமட்ட சேற்றுக்கு மிக அருகில் தவழ்ந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். இந்த நண்டுக்கு அருகே சிறிய மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நண்டின் அசைவுகள் காரணமாக வண்டலில் உள்ள மண் அசைவதன் மூலம் ஏதாவது உணவு வெளிப்படலாம் என்ற எண்ணத்தில் அந்த மீன்கள் அங்கே காத்திருக்கின்றன. இந்தப் புகைப்பட விருது வழங்கும் நிறுவனத்தின் 59 ஆண்ட…
-
- 4 replies
- 444 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernew…
-
- 4 replies
- 840 views
-
-
போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சே…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொடைக்கானல் காடுகள் பசுமை பாலைவனமாகிறதா? இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கும் பல விஷயங்கள் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2022, 09:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்கள், தற்போது 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடக்கிறது கொடைக்கானலில்? நதிகளின் தாய்மடி சோலைக் காடுகள் தான். அடர்ந்த நாட்டு மரங்களும் பரந்த புல்வெளிகளுமே சோலைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பரந்த புல்வெளிகள் பொழியும் மழையை …
-
- 4 replies
- 480 views
- 1 follower
-
-
"நீர் நாய்" விலங்கு, மிகவும் திறமையான அணை பொறியியலாளர். மேலும் இது அதன் பெற்றோரிடமிருந்து கற்பிக்க வேண்டிய அவசியமின்றி கட்டிடத்தில் இந்த உள்ளார்ந்த திறன்களுடன் பிறந்தது, மேலும் பரிணாமவாதிகளுக்கு இந்த உள்ளுணர்வுகள் தோன்றியதற்கான சிறிய விளக்கமும் இன்று வரை இல்லை. பீவர் தண்ணீருக்கு நடுவில் ஒரு குடியிருப்பில் வாழ்கிறது, அதன் குட்டிகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்க பல மீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் காற்றோட்டம் மற்றும் இந்த குடியிருப்பு நிலையானதாக இருக்க, அது தேங்கி நிற்கும் நீரில் கட்டப்பட வேண்டும். குடியிருப்பைக் கட்டுவதற்கு முன், நீர்நாய் ஒரு நதியைத் தேடி... அதில் ஒரு அணையைக் கட்டி, தண்ணீரைத் தேக்கி, ஓடுவதை நிறுத்…
-
- 4 replies
- 804 views
-
-
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை Guest Contributor09 Aug 2021 2 PM Published:09 Aug 2021 2 PM Climate Change (Representational Image) ( AP Photo/Victor Caivano ) ``கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே." - ஐ.பி.சி.சி அறிக்கை ``Heat save spread fire that `erased' Canadian Town" கடந்த ஜூலை மாதம் பிரபலமான அமெரிக்க நாளிதழான `தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியின் தலைப்புதான் இது. இந்தத்…
-
- 4 replies
- 788 views
-
-
சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவா…
-
-
- 4 replies
- 651 views
- 1 follower
-
-
மறைந்துவரும் ஊளைச் சத்தம் டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன் உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
அமேசானில் காடழிப்பு 150 சதவீதம் அதிகரிப்பு! உலகின் நுரையிரல் என கூறப்படும் ‘அமேசான் மழைக்காடு’, முந்தைய ஆண்டை விட டிசம்பரில் 150 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தனது கடைசி மாதத்தில் பதவியில் இருந்தபோது இறுதி இருண்ட அறிக்கையை வழங்கினார். தேசிய விண்வெளி முகவரகத்தின் டிடெ;டர் கண்காணிப்பு திட்டத்தின் அறிக்கையின் படி, கடந்த மாதம் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் பிரேஸிலின் பங்கில் 218.4 சதுர கிலோமீட்டர் (84.3 சதுர மைல்) காடுகள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் கண்காணிப்பு கண்டறிந்துள்ளது. மேலும், டிசம்பர் 2021இல் அழிக்கப்பட்ட 87.2 சதுர கிலோமீட்டர் (33.7 சதுர மைல…
-
- 3 replies
- 619 views
-
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’ March 27, 2025 10:55 am இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் இணைந்த குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘journal of threatened taxa’ வில் வெளியாகி உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுக…
-
- 3 replies
- 376 views
-
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்ய…
-
-
- 3 replies
- 5.4k views
-
-
ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை : இத்தாலியின் 16 நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை 16 Jul, 2023 | 09:52 AM பொதுவாக குளிரான காலநிலையைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தில், தற்போது பல நாடுகள் கடும் வெப்பத்தால் தவிக்கின்றன. ஐரோப்பாவை மற்றொரு வெப்பஅலை நெருங்கும் நிலையில், எதிர்வரும் வாரத்தில் ஐரோப்பாவில், குறிப்பாக தெற்கு ஐரோபபாவில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குகூட …
-
- 3 replies
- 377 views
-
-
கரூரில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் இருவர் மூங்கில் பாட்டில் தயாரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டிலை முற்றிலுமாக நிறுத்த வழிவகுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளான ரதின்யா மற்றும் ஹேமஸ்ரீ என்ற இரண்டு மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வானதுடன், மாநில அளவிலான கண்காட்சிக்கும் அனுப்பபடவுள்ளது தான் மாணவிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஏற்கெனவே அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த மூங்கில் குடுவைகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/…
-
- 3 replies
- 709 views
-
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’ February 8, 2025 12:00 pm உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. 2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது 2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு ம…
-
-
- 3 replies
- 482 views
- 1 follower
-
-
ஹேரியட் ஓரெல் பிபிசி உலக சேவை கடந்த சில ஆண்டுகளாக 'வீகன்' ஆணுறைகள் மற்றும் கழிவற்ற கருத்தடை பொருட்கள் தொடர்பான தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈகோ-ஃப்ரெண்ட்லி செக்ஸ் என்றால் என்ன? "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்றால் சிலருக்கு பூமியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத லூப்கள், விளையாட்டு பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆணுறைகளைப் பயன்படுத்துவதாகும்," என்கிறார் நைஜீரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் அடெனிகே அகின்செமொலு. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1000 கோடி லேடெக்ஸ் ஆணுறைகள் தயாரிக்கப்படுவதாகவும், அதில் பெரும்பாலானவை திறந்த வெளியில் வீசப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளை சபையின் ம…
-
- 3 replies
- 637 views
-