Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. Started by மௌனராகம்,

    நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.

  2. எவரை எவர் ஏமாத்துகின்றனர் வளமை போலவே இந்த முறையும் இந்திய அதிகாரி அதே 13 க் கதையை சொல்லிப் போனார் எத்தனை முறை சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் முப்பது வருட கதை இது இத்தனை வருடமாக இந்தியாவை ஏமாத்த இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் முப்பது வருடமாய் ஈழத் தமிழனை ஏமாத்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் தெரியும் இது இன்னும் ஒரு இராஜதந்திரம் இனி வரும் காலமும் இன்னும் ஒரு பொருளாதார ஓப்பந்தம் எழுத இந்திய அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் அப்பவும் இன்னும் ஒரு முறை நினைவூட்டுவர் அந்த 13 க் கதையை சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போலே மீண்டும் வேதாள…

  3. "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. கோடுகள் ஒன்பதின் வைகாசி வைகாசியில் அவனொருவன் பெற்றது ஒளி ஒளி அணைந்ததும் அதே வைகாசி - எங்கள் வீடுகளில் இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து மூன்றாம் மாப் புளிப்பது தோசையின் நலம் நாடி அணைத்த உலை - மீண்டும் கொதிக்க விறகை தள்ளும் நண்பா – நன்றி இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் இரு கோடுகள் சமன் செய் பாதைகள் பல கோடொன்றை சற்றே நீட்டினால் எல்லோரும் நலமே மறு கோட்டின் நுனியை சற்றே தட்டினாலும் முடிவு ஒன்றே இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம்…

    • 1 reply
    • 1.4k views
  5. "பாசம்" "பாசம் ஒரு மென்மையான நீரோடையோ காற்றை சூடாக்கும் ஒரு புன்னகையோ இனிய வார்த்தைகளின் குளிர்ந்த தொடுதலோ உள்ளம் வெளிப்படுத்தும் அன்பின் கனிவோ இருண்ட இதயத்துக்கு கலங்கரை விளக்கமோ ஆன்மாவைப் பார்க்கும் பார்வையின் ஒளியோ?" "பாசம் என்றும் கருணையின் வடிவோ காதல் என்பதும் ஆசையின் ஈர்ப்போ பழகபழக முளை விடுவது நேசமோ உள்ளங்கள் கூடி சேருவது நட்போ அனைவர் மேலும் தோன்றுவது அன்போ பலபல வடிவில் எல்லாம் ஒன்றோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  6. "விடிவை நோக்கி" "விடிவை நோக்கி புறப்படும் மனிதா அடி வருடுவதை மறந்து விடடா குடித்து கும்மாளம் அடித்தது போதும் இடித்து முழங்கி விடியலைத் தேடடா !" "படிப்பு ஈன்ற அறிவைக் கொண்டு நடிக்கும் தலைவனை விலத்தி விடடா துடிக்கும் இதயத்தில் துணிவை ஏற்றி கூடி ஒன்றாய் விடிவை நோக்கடா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. 🌹🌹🌹 மரபுவழிக் கவிதை ப் போட்டி 02 🌹🌹🌹 மரபுவழிக்கவிதை பயிற்றுவிப்பாளர், அதில் சிறந்த தேர்ச்சி பெற்றவரும் நடுவராகபணியாற்றுகிறார் நீங்கள் அனைவரும் உங்களுடையசந்தேகங்களை தீர்த்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். 🌹🌹🌹 முதலெழுத்தில் மோனை இரண்டாமெழுத்தில் எதுகை முதல் சீரில் சந்தம் இறுதி சீரில் இயைபு 🌹🌹🌹 வரிக்கு நான்கு சொற்கள் எட்டு வரிக்கு முப்பத்தியிரண்டு சொற்கள் 🌹🌹🌹 இவ்வளவே மரபு வழியில் எழுத வேண்டிய போட்டிக்கான குறுங்கவிதை ! 🌹🌹🌹 தலைப்பு : புரிதல் இல்லா நட்பு 🌹 என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன் இதயத்தால் நீசெப்பு // என்னில் தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// த…

  8. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…

  9. Started by Kaviarasu,

    கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி

    • 1 reply
    • 1.7k views
  10. "உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்…

  11. "அலைபாயும் மனது நான் அல்ல" "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை அதிகாரம் அற்று நேசிப்பவன் நான்!" "ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்! ஆறுதல் தேடி நட்பு நாடுபவரை ஆனந்தமாய் அணைத்து மதிப்பவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தை அண்டி வாழாமல் புறக்கணிப்பவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல ஆட்களை கொள்கைகளை மாற்றுபவனல்ல நான்! ஆசை ஒன்றைப் பெற்று நிறைவேற்ற ஆரத்தி எடுத்து பந்தம்பிடிப்பவனல்ல நான்!" "அனைவரும் ஒன்றே குலம் என்று அகிலம் முழுவதும் நேச…

  12. "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" …

  13. "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …

  14. எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். . நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் …

    • 1 reply
    • 1k views
  15. என்னை விட்டு விடுங்கள். நான் சொன்னது என்ன? இவர்கள் செய்வதுதான் என்னவோ? இன்பம் துன்பம் கடந்த நிலையில் எனது போதனைகள் இருந்தன. கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே? எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்? அன்பைப் போதித்த என்னை இப்படி அவமதிப்பது சரிதானா? மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன். என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா? தமிழர் நிலங்களைக் கைப்பற்ற எனது பெயரில் சிலை வைப்பா? நானோ ஆசைகளைத் துறந்தேன் ஆனால் என்னை சொல்லி சொல்லியே தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே மனங்களை பண்படுத்தச் சொன்னேன் தமிழரின் உரிமைகளை பறிக்க என்னை பயன்படுத்துகிறார்களே. இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்? உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன். என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் அடாவடித்தனமாக தமிழர் நிலங…

  16. உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள்-பா.உதயன் உங்கள் போலி முகங்களை எங்களுக்கு காட்டாதீர்கள் உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள் உங்கள் போலி கதைகளை சொல்லாதீர்கள் உங்கள் உண்மைக் கதைகளை சொல்லுங்கள் உங்கள் போலி அன்புகளை காட்டாதீர்கள் உங்கள் உண்மை அன்புகளை காட்டுங்கள் உங்கள் போலி சத்தியங்களை செய்யாதீர்கள் உங்கள் உண்மை சத்தியங்களை செய்யுங்கள் உங்கள் போலி கௌரவங்களுக்காகாவும் புகழுக்காகவும் வாழாதீர்கள் உங்கள் அறம் சார்ந்த வாழ்வோடு பயணியுங்கள் பொது நலன்களோடு பயணியுங்கள் உங்கள் சுய தேவைக்காக நலனுக்காக புகழுக்காக எதையும் பயன் படுத்தாதீர்கள் உங்கள் முதுகில் ஊத்தை வைத்துக் கொண்டு அடுத்தவ…

  17. "வாராயோ வெண்ணிலாவே" "வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல் பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன் தாராயோ உன்னை முழுதாக எனக்கு வைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?" "சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது சேராத இதயமே வந்திடு என்னிடம் சீராக சிறப்பாக வாழ்வு தந்து தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. Started by nedukkalapoovan,

    சிவனா.. தமிழ் பேசும் சிவ பூமியில் சீறிய ஒரு வரலாற்று வாசலில் ஹிந்தியத்தின் கொடுக்கதில் கந்தகம் தடவச் சென்ற கதியதில் காற்றோடு கலந்திட்ட உத்தர தாண்டவத்தின் குறியீடோ..?! படம்: பிரபா சிதம்பரநாதன் அக்கா.(யாழில் இருந்து)

    • 1 reply
    • 1.5k views
  19. பாடா அஞ்சலி தமிழ் மூலமும் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சு மொழிபெயர்ப்பும். 1. பாடா அஞ்சலி ( வ.ஐ.ச.ஜெயபாலன்) -------------- உதிர்கின்ற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன் ? சுணாமி எச்சரிக்கை கேட்டு மலைக்காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் அஞ்சலிகளை எழுத இந்த உலகிலும் பெரிய இடுகாடெது ? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய …

    • 1 reply
    • 1k views
  20. "கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி …

  21. "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்பட…

  23. "மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக…

  24. முடிவுறாத் துயரத்தின் சாட்சியாய் முடிவேயற்ற புதைகுழிக்குள் மரணங்கள் மலிந்து மண்ணில் உதிரங்கள் இறைத்த நன்னாள் ஓலங்கள் ஒருங்கே கேட்டும் உதவிட யாரும் எண்ணா ஈனர்களாக்கி நாங்கள் ஒடுக்கி அடக்கி மண்ணில் உயிருடன் புதைத்த நன்னாள் உன்மத்தம் கொண்ட மூடர் ஊளைகளோடு ஊனை உறிஞ்சியே உதிர்த்தன அன்று எரிந்தன எங்கள் ஊர்கள் சரிந்தன சடலங்கள் அங்கே ஆணின் பெண்ணின் ஆடை அவிழ்த்து அம்மணமாக்கியே அரக்கர் சிரிக்க கூனிக் குறுகி நாம் மண்ணில் கரைய கொடுமைகள் அங்கே குவியலாயின கேடுகெட்டு நாம் பார்த்திருந்தோம் கைகள் அறுந்தன அன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.