கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…
-
-
- 10 replies
- 893 views
- 1 follower
-
-
ஏரிக்கரைப் பூங்காற்றே... வானம் சிந்தாமல் மழையின் தூறல்கள் தேகம் நனைந்தாலும் மனதில் சாரல்கள் புரவியின் வேகமுடன் பரவிடும் நீரருவி பறந்திடும் பரவசத்தில் விரைந்திடும் நீர்த்திவலை வியப்பால் விழிவிரிய வனப்பால் மனம் நிறைய தமிழ்ப்பால் வார்த்தையின்றி தவித்தேன் உனைரசிக்க பாறை இடுக்ககளில் பனியின் துகள் சிதற சீறும் அரவமென உன் சீற்றம் எழுந்து நிற்க பொங்கு தமிழெனவே பொங்கி நீ நிமிர திங்கள் உன் அழகால் தினமும் நாணி நிற்க தாயாய் உனைக்கண்டேன் பேயாய் உனைக்கண்டேன் வெஞ்சினத்தால் துடிதுடிக்கும் வீரப்பெண்ணாய் உனைக்கண்டேன் காதலருக்கெல்லாம் நீ கண்ணுக்கு விருந்தானாய் கவிஞருக்கெல்லாம் நீ கவிதைப் பொருளானாய் கலைஞருக்கெல்லாம் நீ ஓவியக் கலையானாய் கன்னியருக்கெல்லாம் நீ கனவ…
-
- 5 replies
- 2k views
-
-
நயாகராவே என் நாயகியே..! ஈழத்து ஒரு மூலையில் இருந்த போதே ஒருதலைக் காதல் உன் மேலே என்றோ ஒரு நாள் சந்திப்போம் காதலை அன்று சொல்ல நினைத்திருந்தேன். கொலண்டிருந்து பறந்து வந்தேன் நான்கு பனை உயரத்தில்-நீ இருந்து பார்த்தாய் இருநாடுகளுக்கான இதயம் நீ என்றாலும்-என் கனவுக்கன்னியே கலங்காத தெளிந்த உன் வெள்ளை மனம் என்னை கொள்ளை கொண்டதடி வானவில்லாய் உன் புருவம் வற்றாத ஜீவனாய் உன் உயிரோட்டம் அமெரிக்காவில் தலை வைத்து கனடாவில் கால் பதித்து-நீ ஆடும் மயில் ஆட்டமோ என்றும் காணாத …
-
- 7 replies
- 861 views
-
-
இயற்கையின் இனிமையைத் தொலைத்து மழலையின் சிரிப்பை மறந்து நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும் இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில் சுவரில்லா சித்திரமாய் நரக வாசம் செய்யும் நகரவாசிகளே !!!
-
- 0 replies
- 1.4k views
-
-
காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
தடையெனவே இருந்தவைகள் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் வாழ்விற்கு வளம் கொழிக்கும் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்! சுமையெனவே துயர் தந்த எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் நல்லோர்க்கு நலம் சேர்க்கும் எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம் பெறட்டும்! பொய்மைக்கு துணை போன எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் உண்மைக்கு வலுச் சேர்க்கும் எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்! கீழ்மைக்குத் துதி பாடும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் மேன்மைக்கு எழில் கூட்டும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்! எழில் கொண்டு எழில் கண்ட பொழில் கொள் இப்பூவுலகிலே எழில் உளங்கொண்டு வாழும் நல்மாந்தர் எல்லாமே வாழட்…
-
- 6 replies
- 609 views
-
-
நல்லதோர் வாழ்வு இருந்தது நல்லதோர் வாழ்வு ஒன்று இருந்தது ஒரு காலம் நாலு பேர் வந்து போயினர் நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் உறவுகள் வந்து போயினர் பிரியாமல் முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் அங்கு ஓர் பிரிவும் இல்லை அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை அழகான பனை இருந்தது அருகில் ஒரு வேம்பு நின்றது அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது கூவிப் பல பாடல் கேட்டது காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது பூவோடு கனவு இருந்தது கனவு மெய்ப்படக் காத்து இருந்தது பாட்டும் கேட்டது கூத்தும் கேட்…
-
- 0 replies
- 1k views
-
-
நவீன கவிதை / "காதலற்ற கோடைக் காலம்" "ஏழு வர்ண அழகு தொலைத்து எங்கும் விரிந்து பரந்த நீல ஆகாயமே விண்மீன்கள் சிமிட்டாத வானமே கனவுகள் தொலைத்தேன் மகிழ்ச்சி இழந்தேன் நீண்ட பகல் கோடையே வரட்ச்சி தந்து வாழ்வை கடினமாக்கி இதயத்தை வலியால் நிரப்புவது ஏன்?" "காய்ந்த இலைகள் சருகாகி வறண்ட மண்ணில் விளையாடுது வெப்பம் தாங்காது குருவிகள் கூட்டுக்குள் உறங்குது …
-
- 0 replies
- 2.1k views
-
-
நவீன கவிதை / "நிழல்" "என்னை பின்தொடரும் இருண்ட நிழலே நான் நடக்க ஏன் நீயும் நடக்கிறாய் சிலவேளை முன்னுக்கு நிற்கிறாய் மறுவேளை பின்னுக்கு நிற்கிறாய் குட்டையாய் தெரிகிறாய் நெட்டையாய் தெரிகிறாய் ஏன் உனக்கு இந்த கோலம்?" "வெளிச்சத்தில் கூட்டாளியாய் வருகிறாய் இருட்டில் ஏனோ ஒழிந்து விடுகிறாய் ? நிழலே , உன்னை பார்த்து ரசிக்கிறேன் என்றாலும் உன் கோலம் உண்மை சொல்லாது கை விரல்கள் விந்தை காட்ட நீ நாயாவாய், குருவியாவாய் எப்படி உன்னை நம்புவது? நான் ஏங்கி துடிக்கிறேன் நண்பனே!" "உன்னை மதிலில் பார்க்கிறேன் ஒரு கத்தி என் முதுகை குத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
நவீன கவிதை / "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந…
-
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
நாட்களைக் கணக்கிடும்... --------------------------------- பிணங்களின் மேல் நின்று ரணங்களின் ஊற்றுகளில் நாட்களைக் கணக்கிடும் அதிகார அரசுகள்! அதிகாரப் பசிக்கு இரையாகும் மக்கள் சாவுகளைக் கணக்கிட சக்தியற்று நடைபிணங்களாய் தினறும் அவலம்! உலகப் போட்டியிலே உயிர்கள் கரைந்தழிய ஆயுத உற்பத்தி ஆலைகள் ஓய்வற்று இயங்கி புதிய ஆயுதங்களை விற்றுப் பெருத்தல் ஒருபுறமும் சோதித்துப் பார்த்தல் மறுபுறமாய் மனித உயிர்கள் மடிகின்றன! மனித வளமழிந்த இயற்கை வளச்சுரண்டலில் தமது நலன் தேடும் தேசங்களே கூச்சமென்பதே இல்லையா(?) இக் கொடுமைகளை நிறுத்தும் எண்ணம் உங்கள் மனங்களில் வராதா மனித வாழ்வை மண் மேடாக்கிவிட்டு மனித உரிமையென்று மேசையில் வி…
-
- 5 replies
- 650 views
-
-
அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
நான் எனும் நான் ------------ நான் இன்னும் எனக்கும் நானே சொல்லாத வார்த்தைகள் என்னிடம் உள்ளன அந்த வார்த்தைகளின் அடியில் தேங்கி கிடக்கின்றது பெருங் காடென விரியும் துரோகம் நான் எனக்கு எழுதாத சொற்கள் நிறைய உள்ளன அதன் உச்சரிப்புகளில் மறைந்து கிடக்கின்றன நான் பலரை தூற்ற நினைத்த வசவுகள் நான் பார்க்க விரும்பாத பல பக்கங்கள் உள்ளன அதன் வரிகளில் நிறைந்து கிடக்கின்றன இரக்கமற்ற நினைவுகளும் ஈரம் காய்ந்த என் உணர்வுகளும் நான் கேட்க மறுக்கும் பாடல்கள் உள்ளன தன் வரிகளில் கண்ணீரையும் துரோகங்களையும் காட்டாறு எனப் பாயும் தோல்விகளின் வரிகளையும் சுமந்த படி நான் பார்க்க விரும்பாத ஒரு முகம் எனக்குள்ளது அதன் அத்தன…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!
-
- 5 replies
- 478 views
-
-
நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம் எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன் வஞ்சனை செய்வோர் பற்றியும் வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும் எஞ்சி இருக்கும் காலம் வரை என் தமிழ் தந்த திமிரோடு எழுதுவேன் பேசுவேன் நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன் என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும் நான் எழுதுவேன் நான் பேசுவேன்.
-
- 0 replies
- 458 views
-
-
நான் மட்டும் தனித்திருக்கிறேன் கொடுமையான நீ தோற்றுவிட்டாய். உன்னாலும் முடியவில்லை. எவராலும் முடியாது என்பது தெளிவாகவே எனக்கு தெரிகிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் உன்னாலும் முடியாது. கொரோனாவே முடியாது. உன்னாலும் முடியாது. உனது பார்வையிலிருந்து தப்ப எல்லோரும் வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்ற போது பயத்திலும் ஓர் மகிழ்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக, ஆனாலும் இடைவெளி விட்டிருந்து மனம்விட்டு பேசலாம் என மனதுக்குள் நினைப்பு எழுந்தது. ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது. தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே வாழ்க்கை நகருகின்றது. கணவன் தன் காதலியுடன் பொழுதைப் போக்க, மகன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்து வ…
-
- 0 replies
- 885 views
-
-
நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்... பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நல…
-
- 6 replies
- 2.2k views
-
-
நாளை ஒரு காலம் வரும்-பா.உதயன் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் காலை வரும் பொழுதுகளில் கவித் துளியாய் மழை தெறிக்கும் நாளை வரும் விடுதலைக்காய் குயில் கூவி எமை எழுப்பிவைக்கும் வானமெங்கும் நிலவு வரும் எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும் கனவொருநாள் எழுந்து வரும் கார்திகையில் பூ மலரும் எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும் தெருக்கள் எல்லாம் பறவை பாடும் நாளை வரும் காலம் என்று நம்பிக்கையின் ஒளி தெரியும். நாளை ஒரு காலம் வரும் மாற்றம் ஒன்றே ம…
-
- 1 reply
- 419 views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம…
-
- 5 replies
- 1k views
-
-
நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம் நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது நிராகரிக்கப்பட…
-
- 11 replies
- 4.4k views
-
-
நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால்…
-
-
- 3 replies
- 271 views
-
-
நிலம் எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .
-
- 13 replies
- 1.6k views
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 2 replies
- 995 views
-
-
பகலவன் பார்வையிலே பதுங்கி நிற்கும் நிழலே சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே இந்த இரவு நேரத்திலே இதயத்தின் ஓரத்திலே உன் மீது தோன்றிய மோகத்தினாலே உன்னை எண்ணி வர்ணித்தேன் சில வரிகளாளே........
-
- 9 replies
- 2.1k views
-