தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
சிறப்புக் கட்டுரை: பாவம் பழனிச்சாமி! மின்னம்பலம் ராஜன் குறை தோல்வியில் பல சமயம் கெளரவம் இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பல களம் கண்ட படைத்தலைவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் அது மிகவும் கெளரவமான தோல்வியாக இருக்கும்; அவர்கள் புகழ் அதனால் என்றும் மங்காது. இதற்கு மாறாக வெற்றியில் அவமானகரமான வெற்றி என்பது ரசிக்கத்தக்கதாக இருக்காது. அது அந்த வெற்றியின் தருணத்திலேயே கூசிக் குறுகச்செய்யும். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ்-ஸை கட்சிக்குள் ஓரம் கட்டி பெரும்பான்மை ஆதரவைக்காட்டி ஓ.பி.எஸ்-ஸை வைத்தே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த தருணம் ஒரு விதத்தில் வெற்றிதான். ஆனால் தொடர்ந்து பாரதீய ஜனதா விசுவாசத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் போட்டி போட முடியாமல் த…
-
- 0 replies
- 525 views
-
-
சிறையில் துன்புறுத்தப் படும் முருகன் -முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு December 21, 2020 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் முருகன் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவித்துள்ள அவரது வழக்கறி ஞர் புகழேந்தி, முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் “சிறையில் உள்ள முருகன் மீது இரண்டு பொய் வழக்குகளை சிறை நிர்வாகம் தரப்பில் திட்ட மிட்டு போட்டுள்ளனர். இது நளினி-முருகனின் விடுதலையை தடுக்க செய்யப்படும்…
-
- 0 replies
- 699 views
-
-
ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லதா ரஜினிகாந்த் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்டாலின் உள்பட 1600 பேர் மீது வழக்கு! மின்னம்பலம் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கே.வி.தங்கபாலு, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாரிவேந்தர், ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்ச…
-
- 0 replies
- 670 views
-
-
பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI FB குடும்பங்கள் பார்க்க முடியாத வகையில் உள்ள பிக்பாஸ் தொடரை நடத்தி வரும் கமல்ஹாசனா எங்களை பார்த்து கேள்வி கேட்பது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூருக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு ரூ. 36.73 கோடி மதிப்பிலான 33 நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய 14 திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். பிறகு மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா வைரஸ் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். "மக்கள் அரசை தேடி வந்த நிலை மாறி, முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் அரசே மக்களை தேடி வருகிறது" என்று அந்நிகழ்ச்சியில் பே…
-
- 2 replies
- 712 views
-
-
கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு, 4 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைபடுத்தப்பட்டனர். குறித்த சம்பவம், கடந்த திங்கள் கிழமை(14.12.2020) காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 29 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் கைது செய்ததை கண்டித்து, இன்றுமுதல் மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – முதலமைச்சர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் எதிர்கட்சியினரின் சூழ்ச்சி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை என கூறிய முதலவர் தான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால் எதிர்கட்சிகளிடம் பதில் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சா…
-
- 0 replies
- 351 views
-
-
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முருகன் வேலூர் சிறையில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் திகதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என வதை்தியர்கள் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறையில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படு…
-
- 1 reply
- 741 views
-
-
காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன்கள் 1½ டன் சிக்கியது - ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது காரைக்கால், ‘நிவர்’, ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர், கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை எச்சரிக்கை முடிந்ததை அடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். அவர்க…
-
- 1 reply
- 999 views
-
-
ரஜினிகாந்த்... தேர்தல் ஆணையகத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்துள்ளதாக தகவல்! நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாபா படத்தில் இடம் பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், அந்தச் சின்னம் ஒதுக்கப்படாததால், முச்சக்கரவண்டி சின்னத்தை தேர்தல் ஆணை…
-
- 0 replies
- 525 views
-
-
மக்களுக்காக ஈகோவை விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத்தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் தமது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கோவில்பட்டியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எம்ஜிஆர் அதிமுக திலகமும் இல்லை, திமுகவும் இல்லை. அவர் மக்கள் திலகம்" என்று கூறினார். மக்கள் நீதி மய்யத்துக்கு பெருகும் மக்கள் ஆதரவை பார்த்து ஆளும் கட்சி நெருக்கடியால் தங்களுடைய பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார…
-
- 1 reply
- 1.2k views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 73 Views முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர். 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சி…
-
- 4 replies
- 1.4k views
-
-
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு ஐகோர்ட்டில் வழக்கு புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டபோது 50 சதவீத இடங்கள் தருவதாக கூறியே அரசிடம் தடையில்லா சான்றிதழ்கள் பெற்றன. ஆனால் ஒப்புக் கொண்டபடி தராமல் 23 சதவீத இடங்களையே ஒதுக்கீடு செய்து வந்தன. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதுவை அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு தரப்பில், ‘மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு…
-
- 0 replies
- 262 views
-
-
அன்று மாட்டு வண்டிகள்... இன்று டிராக்டர்கள்... விவசாயப் போராட்டங்கள் சொல்லும் வரலாறு! ஜி.பழனிச்சாமி மாட்டுவண்டிப் போராட்டம் அன்று கட்டை வண்டிகளால் கோவை குலுங்கியது. இன்று டிராக்டர்களின் அணிவகுப்பு கண்டு டெல்லி குலுங்குகிறது. 1970-களில் தமிழக விவசாயிகள் கொந்தளித்தது ஏன்? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. பெருவணிக நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தைத் தாரை வார்க்கும் திட்டம். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பம் குடும்பமாக டெல்லியை நோக்கி …
-
- 0 replies
- 543 views
-
-
``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு! வருண்.நா மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த் ``சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.'' சர்ச்சைக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு, அதன் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பல விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, தம…
-
- 20 replies
- 1.5k views
-
-
சசிகலா பக்கம் சாயும் ஓ.பி.எஸ்... எதிர்கொள்ளத் தயாராகும் இ.பி.எஸ் - அ.தி.மு.க-வில் நடப்பது என்ன? த.கதிரவன் சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சசிகலா விடுதலை, அ.தி.மு.க-வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், ஓ.பி.எஸ்., அண்மைக்காலமாக சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருப்பத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சசிகலா விடுதலைக்கும் இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த இரண்டு செய்திகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் தடதடத்துக்கொண்டே இருக்கிறது. வருகிற ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக…
-
- 0 replies
- 762 views
-
-
உத்தரமேரூர் சோழர் காலக் கோயிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது, கருவறைக்கு அருகில் இருந்து பல்வேறு வடிவங்களில் தங்கம் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி. 1089)கட்டப்பட்டதாக கூறப்படும் கொளம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய கற்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து டிசம்பர் 10ஆம் தேதியன்று இதற்கான திருப்பணி பூஜை பாலாலயம் ஆகியவை நடைபெற்றன. இதற்குப் பிறகு கோயில் சிறிது ச…
-
- 2 replies
- 763 views
-
-
தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ. கோரோனோ தீவிரமாக பரவாத நேரத்தில், அவசரப்பட்டு லோக்கடவுன் அறிவித்து, இப்பொது வேகமாக பரவும் நேரத்தில், லோக்கடவுனை நீக்கி, நோய் தீவிரமாக பரவுவதால், தமிழ்நாட்டில் பரபரப்பும், பீதியும் நிலவுகின்றது. திமுக MLA அன்பழகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், அரசு தேர்வுகள் ஆணைய இயக்குனர் கொரோன நோயினால் பாதிக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்படுள்ளது. இன்று 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் முதலாம், இரண்டாம் தவணை முடிவுகளின் படி, பெறுபேறுகள் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ஒரு பெண் சினிமா இயக்குனரும் பாதிக்கப்படுள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளன. எல்லாமே சென்னையில்.. ஷ…
-
- 167 replies
- 15.3k views
-
-
`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது? தினேஷ் ராமையா தங்கம் ( Representational Image ) சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. `இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினால், சி.பி.ஐ-யின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்’ என்ற சி.பி.ஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, `இது சி.பி.ஐ-க்கு அக்னிப் பரீட்சை போன்றது. தாங்கள் குற்றம…
-
- 0 replies
- 563 views
-
-
ரஜினி பிறந்தநாள்: ஓபிஎஸ் வாழ்த்து! மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்த கையோடு அவரது பிறந்த நாள் வந்துள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் செய்வது, அன்னதானம் செய்வது, கோயிலில் பூஜை என பல்வேறு திட்டங்களை அவரது ரசிகர்கள் வைத்திருக்கிறார்களாம். அதுபோன்று, ரஜினியின் ரசிகர்கள் நள்ளிரவில் 12 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டி , ‘ஹாப்பி பர்த்டே தலைவா’ என்…
-
- 1 reply
- 505 views
-
-
இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்… December 11, 2020 இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன. இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள…
-
- 0 replies
- 324 views
-
-
ரஜினி காந்தின் கட்சி பெயர் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்.! நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை ரஜினி காந்த் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தெர…
-
- 12 replies
- 1.3k views
-
-
சென்னையில் நிலம் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ரூ.1,100 கோடி சுருட்டல் மெகா மோசடி கும்பல் கைது சென்னை, சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா’ என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூலித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டு மாத தவணையாக முதலீட்டு தொகை கட்டி உள்ளனர். பின்னர் அந்த நிறுவனம் பொதுமக்கள் கட்டிய முதலீட்டு தொகைக்கு சென்னையில் நிலம் வாங்கித்தரப்படும் என்று அறிவித்தது. பொதுமக்களும் நாம் கட்டிய பணம் வீண் போகாமல் நிலமாக கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் நிலமும் கிடைக்கவில்லை, கட்டிய பணமும்…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/08/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.jpg தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடை…
-
- 0 replies
- 378 views
-
-
ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எக்மோரில் உள்ளஅம்பாசிடர் பல்லவா ஓட்டலில் டிசம்பர் 05 ம் தேதி மாலை நடைபெற்றது. உலகத் தமிழ் வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் வந்திருந்தவர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்வர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனும், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். தமிழக சுகா…
-
- 0 replies
- 338 views
-