தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி..! தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவ…
-
- 1 reply
- 468 views
-
-
சென்னை: காவிரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அரு…
-
- 1 reply
- 462 views
-
-
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…
-
- 1 reply
- 663 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது. போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் , சமீபத்தில் பிகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தை "வாக்கு திருட்டு" எனக் கூறி நிராக…
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில்... ஸ்டாலின், தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திருச்சியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெள…
-
- 1 reply
- 282 views
-
-
அணிவகுக்கும் கருத்து கணிப்புகள்... வந்ததும் தந்ததும் ஒன்றுதானா? மின்னம்பலம் ‘‘இது கருத்து கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு!’’ எல்லாத் தேர்தல்களின்போதும் வருகிற டயலாக்தான். ஆனால் சொல்கிற நாக்குகள்தான் தேர்தலுக்குத் தேர்தல் வேறாகின்றன. எந்தக் கட்சிக்கு ஆதரவாக வருகிறதோ, அந்தக் கட்சியினருக்கு அது கருத்துக் கணிப்பு; எதிராக வந்தால் அது கருத்துத் திணிப்பு. உண்மையை ஒப்புக்கொண்டு களத்தை எதிர்கொள்கிற பக்குவம், நம் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் இல்லையென்று சொல்லமுடியாது; அமெரிக்காவில் இருக்கிற அரசியல் தலைவர்களுக்கே அந்தப் பக்குவம் இல்லை. உலகம் முழுக்க அரசியல்வாதிகளுக்கு ஒரே மனசு!. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையி…
-
- 1 reply
- 489 views
-
-
மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் அருகில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மடிக்கனணிகள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டமும் அதிகமாகவுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. மின்னணு வாக்க…
-
- 1 reply
- 463 views
-
-
கணவரை... வீட்டை விட்டு விரட்டிய தீபா. தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சனை. குடும்பம் மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் வலியுறுத்தினர். இதையடுத்து சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வந்தார் தீபா. தீபா புதிய அரசியல் கட்சியை துவங்கினார். அதற்கு ஜெ. தீபா பேரவை என்று பெயர் வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளராக தனது கார் டிரைவர் ராஜாவையும், தலைவராக அவருடைய மனைவி சரண்யாவையும் நியமித்தது தொண்டர்களுக்கும், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்து அது கிடைக்காததால…
-
- 1 reply
- 418 views
-
-
போயஸ்: ஒரு அதிகாரத் தோட்டத்தின் கதை! வேதா நிலையம், எண்: 81, போயஸ் தோட்டம், சென்னை, 600086. இதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வ முகவரி. கடந்த 30 ஆண்டு கால அதிமுகவின் அரசியல் முகவரியும் அதுதான். கடந்த 30 ஆண்டுகாலத் தமிழக அரசியல் சக்கரத்தின் மையப்புள்ளி. சில தருணங்களில் இந்திய அரசியலைத் தீர்மானித்த புள்ளி என்றும் சொல்லலாம். 1967-ல் சென்னையில் மனை வாங்கினார் ஜெயலலிதாவின் தாயும் பிரபல நடிகையுமான சந்தியா. அதனை அவரும் ஜெயலலிதாவும் தங்கள் ரசனைக்கு ஏற்பச் செதுக்கி, பிரம்மாண்ட இல்லமாக்கினர். புதுமனை புகுவிழா நெருங்கும் சமயத்தில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் சந்திய…
-
- 1 reply
- 601 views
-
-
திருவண்ணாமலை வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2022, 03:54 GMT படக்குறிப்பு, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தங்கள், வீடுகள், நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி பாலியப்பட்டு கிராமத்தில் போராட்டம் நடத்தும் ஊர் மக்கள். திருவண்ணாமலை அருகே, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காக பல நூறு ஏக்கர் வேளாண் நிலங்களும், ஏராளமான வீடுகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கிடைத்த தகவலை அடுத்…
-
- 1 reply
- 780 views
- 1 follower
-
-
திருப்புமுனை நாயகன் வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல…
-
- 1 reply
- 822 views
-
-
H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விரிவான விளக்கம் அளித்துள்ளது. …
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் உள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில் தகவல் கொடுப்பவர்களால் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டிருக்குதாம்.........🫣. அந்த இளைஞர்கள் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக அந்த ஊரில் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் மேலேயுள்ளது. ஆயிரம் பொய்கள் சொல்லி என்றாலும் ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொல்வார்கள்....... இவர்கள் புறம் சொல்லி திருமணத்தை நிற்பாட்டுகின்றார்கள். https://minnambalam.com/archives-trending-news-in-tamil/local-informers-to-prevent-marriages-90s-kids-are-shocked/
-
- 1 reply
- 431 views
- 1 follower
-
-
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சா…
-
- 1 reply
- 434 views
- 1 follower
-
-
தேமுதிக மாநாடு: இன்று கூட்டணி முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்? சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று (20-ம் தேதி) மாலை தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூட்டணி அமைப்பதிலும், அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என ஏற்கனவே தேர்தல் …
-
- 1 reply
- 959 views
-
-
சென்னை: 90வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி்க்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, கருணாநிதியின் 90வது பிறந்தநாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட கருணாநிதி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி. அங்கு தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் பெற்றுக் கொண்டு வருகிறார். முன்னதாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலை கருணாநி…
-
- 1 reply
- 511 views
-
-
நியூட்ரினோ திட்டத்தால் தேனி அருகே என்ன பாதிப்பு வரும்? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன? க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்றும், புலிகள் நடமாட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
சென்னை: மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முடிவு செய்யப்படும் என்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாத காலம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்களித்த பின்னர், 27ஆம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஜெயலலிதா கவனித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (16ஆம் தேதி) வெளிவர உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையம்…
-
- 1 reply
- 481 views
-
-
பட மூலாதாரம், olympics.com கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 28 அக்டோபர் 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
தே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளை ஒட்டி இன்று காலையில் அக்கட்சியின் கொடியை தனது இல்லத்தில் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் ஏற்றினார். அதற்குப் பிறகு, கட்சி அலுவகத்திற்கு தனது பிரசார வாகனத்தில் பிரேமலதாவுடன் புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி அலுவலகத்திலும் வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். இதற்குப் பிறகு கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா, கூட்டணி குறித்து இனிமேல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.கவிடம்தான் கேட்க வேண்டுமென்று தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பொதுக்குழு, செயற்குழு கூடி நல்ல செய்தி அறிவிக்குமென்றும் கூறினார். தே.மு.தி…
-
- 1 reply
- 786 views
-
-
சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலின்போது எதிர்பார்க்காத பல தரமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்தாண்டு இறுதியில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்காமலேயே, விலகிச்சென்றார். இந்தாண்டு மார்ச்சில் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது ஒருபக்கம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் இடி என்றாலும், தி.மு.க.வுக்கு இது இடி செய்தியா... இல்லை, கொண்டாடித்தீர்க்கும் வெடி செய்தியா? …
-
- 1 reply
- 929 views
-
-
மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு எதிரொலி: முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை - கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சந்திக்கிறார் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி நிர்வாகிகளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட ட…
-
- 1 reply
- 296 views
-
-
திருமுருகன் காந்தி, உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஹைகோர்ட் அதிரடி. கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23-இல் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.எனினும் அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் …
-
- 1 reply
- 528 views
-
-
முள்ளம்பன்றி தாக்கிய புலிக்குட்டி சிகிச்சைக்குப் பின் பாதுகாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 ஜூன் 2022, 14:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, புலிக்குப் பிறந்தது... முள்ளம்பன்றியால் தாக்கப்பட்டு வனத் துறையால் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வேட்டையாட புலிக்குப் பயிற்சி அளிப்பதே தங்கள் இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமல…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
ராசி எண், வாஸ்து... வக்கீல்கள் செய்த குளறுபடியால் சிறையில் சிக்கிய ஜெ. பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளிப்போனதற்கு வழக்கறிஞர்கள் செய்த குளறுபடியே காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் திடீரென புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துத்கு மாற்ற வேண்டும…
-
- 1 reply
- 552 views
-