தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
விரிவடைகிறது சென்னை மாநகரம்: எங்கிருந்து எதுவரை? Sep 19, 2022 13:26PM IST சென்னை பெருநகர எல்லையை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று (செப்டம்பர் 19) மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கத்தில் உலக வங்கியின் நிதியில் மூன்றாவது முழுமை திட்டம் ச…
-
- 5 replies
- 971 views
- 1 follower
-
-
செயல் தலைவர் பதவி: பாஜகவில் இணையும் குஷ்பு மின்னம்பலம் நடிகையும் காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக, பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி ந…
-
- 9 replies
- 971 views
-
-
மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் 'கை' குலுக்க தயார்: கருணாநிதி. சேலம்: நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன். ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு …
-
- 3 replies
- 970 views
-
-
மீண்டும் மீண்டும் மக்களை வெயிலில் வாட்டும் மக்களின் முதல்வர் பிரசாரம்! - இது சேலம் சோதனை! (படங்கள்) சேலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில், லட்சக்கணக்கானவர்கள் கொளுத்தும் வெயில் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 46 வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார். சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காட…
-
- 3 replies
- 969 views
-
-
மிஸ்டர் கழுகு: 80 சீட் ஜெயிப்போம்! - எடப்பாடி தடாலடி கழுகார் வந்தபோது, நம் கையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் இருந்தது. ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நாடெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்’, ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆர்வமுடன் இணையும் மாற்றுக் கட்சியினர்’ என்ற தலைப்புச் செய்திகளைப் பார்த்துச் சிரித்த கழுகார், ‘‘தங்களைத் தாங்களே உற்சாக வார்த்தைகளைச் சொல்லி மெச்சிக் கொள்கிறார்கள் போல!” என்றார். தொடர்ந்து பேசிய கழுகார், ‘‘ஆர்.கே.நகர் அசத்தல் வெற்றி மூலம் அமித் ஷாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த டி.டி.வி. தினகரன், தனது சொந்தக் கட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல்களைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் என்பதுதான…
-
- 0 replies
- 969 views
-
-
ஏழு தமிழர்களை விடுதலை செய்க! முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் 46 Views சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் ம.திமுக. தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. …
-
- 7 replies
- 969 views
-
-
மிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி! ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம். ‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும…
-
- 0 replies
- 969 views
-
-
நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: சிக்கிய நால்வரின் கதி என்ன? மீட்புப் பணிக்கு விரைகிறது என்டிஆர்எஃப் 15 மே 2022, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் 2 பேர் மீட்பு எஞ்சியவர்களை மீட்கும் பணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் நேற்றிரவு மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன் ஆகியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட…
-
- 3 replies
- 969 views
- 1 follower
-
-
நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன்- ஸ்டாலின் நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன், உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களிற்கு முகம்கொடுத்து வென்று காட்டுவேன் என மு.கா. ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன, தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்ந்த தமிழகத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியிருக்கின்றார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியார்கள் மதவெறியை விதைத்து மாநிலங்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைவரை இழந…
-
- 1 reply
- 969 views
-
-
பேசும் படங்கள்: கருணாநிதியை நேரில் சந்தித்த தேசிய தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய…
-
- 0 replies
- 969 views
-
-
முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பேசிய சசிகலா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்றார். பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு மு…
-
- 6 replies
- 969 views
-
-
ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவு படுத்திய மலையாள பெண்மணி மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் அமைப்புகள் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாயே என்று கூறிய மலையாள பெண்மணிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க சின்னத் திரை கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவியும் காவல் துறையால் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற செய்தியும், மலையாளிகள் எப்படி உயர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்தனர். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் அவ…
-
- 1 reply
- 968 views
-
-
கருணாநிதி-ஸ்டாலின் மோதல் "உச்சகட்டம்"... கதிகலங்கும் திமுக நிர்வாகிகள்.சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்... திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் 'தளபதி' ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார். கனிமொழிக்கு ரெட்கார்ட் அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக…
-
- 7 replies
- 968 views
-
-
"நாம் தமிழர்" செல்வாக்கு அதிகரிப்பு.. சம பலத்தில் காங்., பாஜக + பாமக, தேமுதிக.. நக்கீரன் சர்வே By: Sutha Updated: Thursday, June 15, 2017, 12:02 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதுகுறித்த பார்…
-
- 2 replies
- 967 views
-
-
தேமுதிக மாநாடு: இன்று கூட்டணி முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்? சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று (20-ம் தேதி) மாலை தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூட்டணி அமைப்பதிலும், அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என ஏற்கனவே தேர்தல் …
-
- 1 reply
- 967 views
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிஆரம்பமாகியது. இன்று (வியாழக்கிழமை) காலை, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்கட்டைகள் கொட்டப்பட்டு எண்ணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3பேர் வாக்கட்டைகள் எண்ணும் பணியில் உள்ளனர். …
-
- 3 replies
- 967 views
-
-
பள்ளிகளில் தமிழ் காணாமல் போனது எப்படி? -சாவித்திரி கண்ணன் மூன்று தலைமுறைகள் தமிழ் தெரியாமல் உருவாகியுள்ளன! இளம் தலைமுறையினருக்கு தாய்மொழியே அன்னியமாகி விட்டது. பள்ளிகளில் தமிழை கற்பிக்க தமிழ்நாட்டில் 1968 தொடங்கி, இன்று வரை பல ஆணைகள், சட்டங்கள் போட்டுள்ள போதிலும், கல்வி நிலையங்களில் தமிழ் காணாமல் போன மர்மம் என்ன..? தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்த இயக்கம் திமுக! ஆனால், அப்படி ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கல்விக்கூடங்களில் முன்பு இருந்த தமிழ் ஏன் தற்போது இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது! இத்தனைக்கும் தமிழைக் கட்டாய பாடமாக்க திமுக, அதிமுக அரசுகள் தொடர்ந்து பல சட்டங்…
-
- 4 replies
- 967 views
-
-
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து ஒகேனக்கல் வழியாக 65க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்செட்டிக்கு மலைப்பாதை வழியாக இன்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மதியம் 1 மணியளவில் ஒகேனக்கல் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்து உள்ள கொண்டை ஊசி திருப்பத்தில் திரும்பும்போது சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பேருந்து ஓட்டுனர் உள்பட மற்ற அனைத்து பயணிகளும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத…
-
- 13 replies
- 966 views
-
-
முதல்வர் பழனிசாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது! சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்து வரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து முதல்வர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், பதின…
-
- 2 replies
- 965 views
-
-
அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்? ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மர மாஃபியாக்கள் நடத்தும் இந்தக் கடத்தலுக்கு, கூலியாட்களாக செல்லும் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. சரி, ஏன் இந்த மரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இருளாண்டி பதில் சொல்கிறார்! "சந்தன மரங்கள் மதிப்பு மிக்கவை. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவை செஞ்சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களே. இவை, 7லிருந்து 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது வளர்வதற்கு 30லிருந்து 40 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியிலும், கர்நாடகாவில் …
-
- 2 replies
- 965 views
-
-
கருணாநிதிக்கு அருங்காட்சியம்... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம். ! சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்ட…
-
- 3 replies
- 965 views
-
-
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரசாரத்தில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது.
-
- 6 replies
- 965 views
-
-
2019-08-23@ 08:49:39 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது.இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள…
-
- 5 replies
- 964 views
-
-
சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். டெல்லியில் 40வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்க…
-
- 4 replies
- 964 views
-
-
மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈட…
-
- 8 replies
- 964 views
-